மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன
மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன .இந்த மாதம் மூன்று நாட்களில் 3,422 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், டெங்கு பெருந்தொற்று நாட்டைத் தொடர்ந்து தாக்கி வருகிறது என
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர்
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் கபில கண்ணங்கரா இன்று தெரிவித்தார்.
இதுவரை மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 58,810 ஆக உயர்ந்துள்ளதாக அவர் ஊடகங்களிடம் கூறினார்.
கடந்த சில நாட்களில் 39 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்
இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும், இறந்த 39 பேரில் பத்து பேர் ஆண்கள் என்றும் டாக்டர் கண்ணங்கரா தெரிவித்தார்.
வரவிருக்கும் நாட்களில் இந்த பெருந்தொற்று நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.







