மனித புதைகுழி அகழ்வுபணி நாளை
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (21) ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.
அகழ்வுப்பணி தொடர்பாக இன்று (20) தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மனித புதைகுழி அகழ்வுபணி நாளை
அகழ்வு பணி நாளை காலை 8 மணியளவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற இருப்பதாகவும் புதை குழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது எனவும், இம்முறை
அகழ்வுபணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளதாகவும்.
இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாகவும் அவ் நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.
- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை
- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது
- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி
- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு
- SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்
- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது
- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்
- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்
















