வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை
அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச
செயலகங்களுக்குட்பட்ட மஹா ஓயாவின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஹா ஓயாவின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் சில பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மஹா ஓயா பகுதியில் பராமரிக்கப்படும் ஆற்று மானிகளின் நீர் மட்டப் ஆய்வு மற்றும் மழை நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அப்பகுதி மக்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்







