திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை – பாரதிராஜா

Spread the love

திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை – பாரதிராஜா

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய பாரதிராஜா, வெளியாக இருக்கும் ஒரு படத்தை பார்த்து புகழ்ந்து பேசி இருக்கிறார்.

திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை – பாரதிராஜா
பாரதிராஜா


மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குனர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.

சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும்

என்பதால் ரசிகர்கள், திரையுலகினர் என இருதரப்பினரிடமும் இந்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

ஆன்டி இண்டியன் வரும் டிச-1௦ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், சிறப்புக் காட்சித்

திரையிடலில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

இந்த படத்தைப் பார்த்துவிட்டு பாரதிராஜா பேசும்போது, “எடுக்கின்ற திரைப்படங்களை எல்லாம் இந்த புளூ சட்டை மாறன் இப்படி நையாண்டி செய்து விமர்சனம் பண்ணி வருகிறானே..

இவன் ஒரு படம் எடுக்கட்டும் பார்க்கலாம் என நினைத்தேன். படத்தையும் எடுத்து விட்டான். நம்பிக்கை இல்லாமல் தான் இந்தப் படத்தை பார்த்தேன்.

பாரதிராஜா
மாறனை பாராட்டும் பாரதிராஜா

ஏதாவது ஒரு இடத்திலாவது அவனுக்குப் பதிலடி தருவதற்கு இடம் கிடைக்குமா என எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பை எனக்கு இந்தப் படம் தரவே இல்லை. இத்தனை

நாட்கள் மற்ற திரைப்படங்களை விமர்சித்து வந்த புளூ சட்டை மாறன், தான் அதற்கு தகுதியான நபர் தான் என நிரூபித்துவிட்டான்’’ என்றார்.

    Leave a Reply