கனேடிய பிரதமர் ஜஸ்டின் ராஜினாமா
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா ,கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, புதிய கட்சித் தலைவர் தீர்மானிக்கப்பட்டதும் லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
“ஒரு வலுவான, நாடு தழுவிய, போட்டி செயல்முறை மூலம் கட்சி தனது அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, கட்சித் தலைவர் பதவியிலிருந்து,
பிரதமர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்ய விரும்புகிறேன்,” என்று அவர் திங்களன்று ஒட்டாவாவில் உள்ள ரைடோ காட்டேஜில் கூறினார்.
ட்ரூடோ மார்ச் 24 வரை பிரதமராக பதவி வகிப்பார்.அதன் பிறகு அவருக்குப் பதிலாக புதிய லிபரல் கட்சித் தலைவர் நியமிக்கப்படுவார்.
கனேடிய பாராளுமன்றம் 2025 ஆம் ஆண்டின் புதிய அமர்வை ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கவிருந்தது,
ஆனால் ட்ரூடோ திங்களன்று கவர்னர் ஜெனரலிடம் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தை மார்ச் 24 வரை நீட்டிக்கவும் தொடங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறினார்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது










