Tag: ஜஸ்டின் ட்ரூடோ
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ராஜினாமா
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா ,கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, புதிய கட்சித் தலைவர் தீர்மானிக்கப்பட்டதும் லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
“ஒரு வலுவான, நாடு தழுவிய, போட்டி செயல்முறை மூலம் கட்சி தனது அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, கட்சித் தலைவர் பதவியிலிருந்து,
பிரதமர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்ய விரும்புகிறேன்,” என்று அவர் திங்களன்று ஒட்டாவாவில் உள்ள ரைடோ காட்டேஜில் கூறினார்.
ட்ரூடோ மார்ச் 24 வரை பிரதமராக பதவி வகிப்பார்.அதன் பிறகு அவருக்குப் பதிலாக புதிய லிபரல் கட்சித் தலைவர் நியமிக்கப்படுவார்.
கனேடிய பாராளுமன்றம் 2025 ஆம் ஆண்டின் புதிய அமர்வை ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கவிருந்தது,
ஆனால் ட்ரூடோ திங்களன்று கவர்னர் ஜெனரலிடம் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தை மார்ச் 24 வரை நீட்டிக்கவும் தொடங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறினார்.
இலங்கை தமிழின இனப்படுகொலையை விசாரிக்க கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை
இலங்கை தமிழின இனப்படுகொலையை விசாரிக்க கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை
இலங்கை தமிழின இனப்படுகொலையை விசாரிக்க கனடா நடவடிக்கை மேற்கொள்ள கூடும் என்பதால் கனடா தொடர்பில் இலங்கை மிக எச்சரிக்கியாக உள்ளது .
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை இறுதி போரில் இலங்கை புரிந்தது இனப்படுகொலை என தெரிவித்து இருந்தார் .
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இவ்வாறு தெரிவித்து இருந்தது இலங்கை கனடாவுக்கு இடையில் இரயத்தந்திர நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது .
இலங்கை தமிழின இனப்படுகொலையை விசாரிக்க கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை
அதனை அடுத்து எதிர்வரும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வருவதை அடுத்து ,மீளவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை இனப்படுகொலையை விசாரித்து இலங்கையை தண்டிக்கும் படி கூறலாம் என எதிர்பார்க்க படுகிறது .
அவ்வாறு கனடா முன் நகர்வை மேற்கொண்டால் ,அதுவே இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் ,இலங்கை பதட்டத்தில் உறைந்துள்ளது .
இலங்கையில் சிங்கள அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழின படுகொலைக்கு 14 ஆண்டுகள் கழிந்த பொழுதும் இதுவரை தீர்வு கிட்டவில்லை .
தமிழின படுகொலையை நடத்தியவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.
,ஆனால் பாதிக்க பட்ட மக்களுக்கு எதுவித நீதியும் கிடைக்கவில்லை என்பது வலி தோய்ந்த வரலாறாக காணப்படுகிறது .
வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு
வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு
வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சிங்கள தமிழ் மற்றும் முஸ்ஸிம் தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று (24.06) மாலை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம் ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள், உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா, படுகொலை எங்கே நடந்தது?, ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உனக்கு தேவை பயங்கரவாதம், எங்களுடைய நாட்டில் கை போடாதே ஜஸ்டின் ட்ரூடோ’ போன்ற கோசத்தினை எழுப்பியவாறும், ‘இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள், கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம்’ போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் வீதியில் போடப்பட்டு எரிக்கப்பட்டன.
இவ் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் உட்பட தமிழ், முஸ்ஸிம், சிங்கள இனத்தினை சேர்ந்த 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை இராணுவம் போர்க்குற்றம் இழைத்ததாக கனடா பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
























