அர்ச்சுனா பாடல் கேட்டு உருகிய பதிவு
அர்ச்சுனா பாடல் கேட்டு உருகிய பதிவு ,ஒன்றை எமக்காக தனது முக நூலில் பதிவு செய்துள்ளார் .மருத்துவ போராளி அர்ச்சுனா தெரிவித்த கருத்து கீழ்வருமாறு .

தன் மக்கள் வாழ்வதற்காக தன்னை அர்ப்பணித்து ,ஆளும் அதிகார மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக போராடி வரும் ,ஒற்றை மனிதனின் வீரம், வன்னி மைந்தன் ஆகிய எனது நெஞ்சை துளைத்தது .
அதனை அடுத்து அவருக்காக எழுச்சி பாடல் ஒன்றை எழுதி இருந்தேன் ,அதனை பாசறை பாணர் தேனிசை செல்லப்பா மற்றும் ,பாவேந்தன் இளங்கோவன் பாடிட ,இளங்கோ செல்லப்பா இசை அமைத்து இருந்தார் .
அந்த பாடல் தற்ப்போது உலக தமிழர் எங்கும் வைரலாகி வருகிறது .
மருத்துவ போராளியாக களம் இறங்கி ,மக்களுக்கு நடக்கும் இன்னல்களை துடைக்கும் அந்த அற்புத மா மனிதன் அர்ச்சுனா இராமநாதன் ,
உள்ளத்தின் குமுறலையும் ,அவர் படும் நெருக்கடியையும் கருத்தில் கொண்டு இந்த பாடலை நான் வடித்து இருந்தேன் .
அதனை பார்வையிட்ட அவர் ,அந்த காணொளியை தனது முக நூலில் பதிவிட்டு எமது பாடல் குழுவுக்கு நன்றிகளை ,உணர்வோடு உருக்கமான, உள்ளத்து வலியுடன் தெரிவித்துள்ளார் .
வரலாறு ஒருவனை உருவாக்கும் ,அவன் எடுத்து கொண்ட விடயத்தில் இறுதிவரை நேர்மையாக பயணித்தால் அவனை ,அந்த இனவரலாறு ,காலம் காலமாக பாடும் கொண்டாடும் .
அவ்வாறான அன்பு தோழமை மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் இந்த பதிவு கண்டு நாமும் உருகி போனோம் .
என்றும் உங்களோடு நாம் தமிழர் இருப்பார் .கண்டிப்பாக ஒரு நாள் சந்திப்போம் ,சிந்திப்போம் , ,அந்த நாளுக்காய் நாமும் காத்துள்ளேம் .நன்றி ஐயா .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது







