உயிரோடு இருந்திருந்தால்… இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் – டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை

Spread the love

உயிரோடு இருந்திருந்தால்… இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் – டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை

சுஷாந்த் சிங் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் ரியாவுக்கு பதில் சிறையில் இருந்திருப்பார் என நடிகை டாப்சி டுவிட் செய்துள்ளார்.

உயிரோடு இருந்திருந்தால்… இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் – டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை
டாப்சி, சுஷாந்த் சிங்


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சுஷாந்த் சிங் மரண வழக்கு

தற்போது பாலிவுட்டில் போதைப் பொருள் வழக்காக மாறி இருக்கிறது. நடிகை ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் சோவிக்

போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து 3 நாட்கள் நடத்தப்பட்ட

விசாரணையை தொடர்ந்து நேற்று நடிகை ரியாவும் கைது செய்யப்பட்டார்.

டாப்சியின் டுவிட்டர் பதிவு

ரியாவின் கைது பற்றி பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை டாப்சி போட்ட டுவிட்

சர்ச்சையை கிளப்பி உள்ளது. நடிகை ரியா தான் சுஷாந்துக்கு தெரியாமல் போதைப் பொருளை, தேனீரியில் கலந்து கொடுத்தார்

என்ற தகவல்கள் சமீபத்தில் கசிந்திருந்தன. ஆனால், அதனை மறுத்துள்ள நடிகை டாப்சி, இந்நேரம் சுஷாந்த் சிங் மட்டும்

உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் சிறையில் இருந்திருப்பார் என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதனால் சுஷாந்த்தின் ரசிகர்கள் பலரும் டாப்சியை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *