சுமந்திரனை தண்டிக்க மறுக்கும் சம்பந்தர்-கொதிக்கும் தமிழர்கள்

Spread the love

சுமந்திரனை தண்டிக்க மறுக்கும் சம்பந்தர்-கொதிக்கும் தமிழர்கள்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளை கொச்சை படுத்தி பேசிய சுமந்திரனின் சர்ச்சை பேச்சுக்கள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின

அதனை அடுத்து எழுந்த மக்கள் கொந்தளிப்பபை தணிக்க சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பட்டு அவர் அந்த கட்சியில் இருந்து நீக்க படுவார் என எதிர் பார்க்க பட்டது

ஆனால் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எவ்வித நகர்வையும் மேற்கொள்ளவில்லை


கடந்த பத்து ஆண்டுகளாக தமிழீழ விடுதலை போரை கொச்சை படுத்தி பேசி வரும் சுமந்திரன் மீது செருப்படி நடத்த பட்டது

ஆறாத வலியோடு பயணிக்கும் தமிழர்கள் மனதில் ஓங்கி அறை விட்டது போலவே சுமந்திரன் செயல் பாடுகள் அமைய பெற்றன

கோத்தபாயவின் ஜனாதிபதி சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வை பெற்று தர போகின்றார் ..?

,புலிகள் ஆயுத போரை ஏற்று கொள்ள முடியாது என்பன போன்ற பல்வேறு பட்ட இழிநிலை பிரச்சாரங்களை சுமந்திரன் ,சம்பந்தரும் மேற்கொண்ட வண்ணமே உள்ளனர்

ஆனால் சுமந்திரன் விடும் தவறுகள் அனைத்திற்கும் ஆதரவு வழங்கிய படியே சம்பந்தர் பயணிக்கின்றார்

வரும் பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் ,சம்பந்தரை மக்கள் தோற்கடிக்க வேண்டும் ,

இவர்கள் பதவிகள் அகற்ற பட்டு புதிய தலைவர்கள் நியமிக்க பட்டு கட்சி மறுசீரமைப்புக்கு உள்ளாக்க பட வேண்டும்

இதனை செய்திட தவறினால் விக்கினேஸ்வரன் தலமையிலான அணியினரை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் ,

அவர்கள் முள்ளி வாய்க்கால் படுகொலையினை தமிழ் இன அழிப்பு என்றே கூறி வருகின்றனர்


,ஆனால் தமிழ் தேசிய் கூட்டமைப்பு சுமந்திரன் ,சம்பந்தன் ,அது ஒரு போர்க்குற்றம் என்ற முழங்கி செல்கின்றனர்

சுமந்திரன் புரியும் இழி செயல்களை இனியும் அனுமதிக்க முடியாது ,ஒன்று பட்டு மக்கள் எழுவதன் மூலமே

தமிழர் தேசிய அறவழி போரை முன்னெடுத்து செல்ல முடியும் என்பதே,சுமந்திரன் செயல் பாடுகள் உணர்த்தியுள்ளன

  • வன்னி மைந்தன் –

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *