கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்
Spread the love

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் ,இன்று 119 ஆவது சிறைச்சாலை திறத்தை முன்னிட்டு சிறை கைதிகளுக்கு திறந்த வெளியில் விருந்தினர்களை பார்ப்பதற்கு விசேட சந்தர்ப்பம் ஒன்றை வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதன் அடிப்படையில் இன்று உறவுவினர்கள் கொண்டுவரப்படும் ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை இடம்பெரும் எனவும் அவளை தமது கைதிகளை தமது உறவுகள் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல காலை சிறைச்சாலையின் செயற்பாடுகளை இன்று முதல் மட்டுப்படுத்த சிறைச்சாலை திரைப்படம் தீர்மானித்துள்ளது .

மூளைக்காய்ச்சல் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சிறைச்சாலையில் கைதி

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் கடந்த 13ஆம் தேதி உயிரிழந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடுவதற்கு பல கட்டுப்பாடுகள் தடைகள் என்பன விதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,

தற்பொழுது சிறைச்சாலை நிர்வாகம் மக்களை பார்வையிடுவதற்கு அல்லது கைதிகளின் உறவினர்கள் அந்த கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கியது அவர்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச்செயல் காரணமாக தற்பொழுது இலங்கையின் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன .

குற்ற செயல்களை தடுக்க வேண்டுமாக இருந்தால் ,அரசும் பாடசாலைகளில் இருந்தும் பல்வேறுபட்ட நடவடிக்கை மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது, மக்கள் கோரிக்கையாக உள்ளது.