குளத்தில் மூழ்கிய மாணவன்
இரணைமடு குளத்தில் மூழ்கிய மாணவன் ,கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து , குளத்தில் நீராட சென்ற இந்த மாணவனே திடீரென நீரில் மூழ்கி காணாமல் போய் உள்ளார் .
அவ்வாறு காணாமல் போனவரை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சுழியோடிகள் உதவியுடன் காணாமல் போன அந்த மாணவனை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ,அவர்கள் களமிறங்கியிருக்கின்றனர் .
திருமுருகண்டி இந்து வித்யாலத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் 14 வயதுடைய மாணவனை இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சகோதரர் நண்பர்களுடன் நீராட சென்ற பொழுதும் அவர்கள் தப்பித்துக் கொண்டனர் , அதே வேளை நீரில் மூழ்கிய தனது சகோதரனை காப்பாற்ற முடியாமல் அவர்கள் தத்தளித்து வந்துள்ளனர் .
குளத்தில் இவ்வாறு நீரில் மூழ்கி பலர் பல ஆண்டுகளாக பலியாகி வருகின்றனர்.
அதனுடைய ஆபத்தினை உணராமல் நீராடா செல்லுகின்றவர்களை இவ்வாறு பலியாகி வருகின்றனர் .
அடித்து பாயும் வெள்ளத்தில் நீராட சென்றதன் விளைவு ,அந்த நீரிழிவுகள் அடித்துச் செல்லப்பட காரணமாக இருந்திருக்க கூடும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது .
காணாமல் போன மாணவனுடைய சடலத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில், உதவியுடன் தேடுதல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை










