இந்தியாவில் 23 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,963 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 834 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24
மணி நேரத்தில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,68,675-ல் இருந்து 23,29,638 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 56,110 குணமடைந்துள்ளதால் இதுவரை 16,39,599 பேர் குணமடைந்துள்ளனர். இது 70.38 சதவீதமாகும். 834
பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 46,091 ஆக உயர்ந்துள்ளது. இது 1.98 சதவீதமாகும்.
தற்போது 6,43,948 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது 27.64 சதவீதமாகும். நேற்று மட்டும் 7,33,449 பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை 2,60,15,297 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது







