Tag: யுவதி
தீ விபத்தில் சிக்கிய யுவதி உயிரிழப்பு
தீ விபத்தில் சிக்கிய யுவதி உயிரிழப்பு
தீ விபத்தில் சிக்கிய யுவதி உயிரிழப்பு ,தீ விபத்தில் சிக்கிய வதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மன்னார் – பண்டிவிரிச்சான் மேற்கு, மடு பகுதியைச் சேர்ந்த மேரி எமில்தா விக்கிரமரட்ன (வயது 27) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி கடந்த மாதம் 12 ஆம் திகதி குளிர்காய்வதற்காக அடுப்பைப் பற்றவைத்துள்ளார். இதன்போது அவரது ஆடையில் தீப்பற்றி தீ விபத்துக்கு உள்ளாகினார். அவர் அன்றையதினமே பண்டிவிரிச்சான் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அதன்பின்னர் மறுநாள் 13ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்
மலையக யுவதி ஹோட்டலில் மர்மமாக உயிரிழப்பு
மலையக யுவதி ஹோட்டலில் மர்மமாக உயிரிழப்பு
அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
நேற்று (10) மாலை குறித்த விடுதியில் தங்கியிருந்த ஜோடியில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்த யுவதி நேற்று மாலை நபர் ஒருவருடன் ஹோட்டலுக்கு வந்து அங்குள்ள அறையில் தங்கியிருந்த நிலையில், சிறிது நேரத்தில் யுவதி மயங்கி விழுந்துள்ளதாக உடன் இருந்த நபர் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணம்
வவுனியா கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணம்
வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம் யுவதி ஒருவர் நேற்று முன்தினம் (17) மாலை கிணற்று மோட்டார் சுவிச்சை போட்ட போது அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
தொடர்ந்து மோட்டார் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானித்த அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று பார்த்த போது குறித்த இளம் யுவதி கிணற்றில் விழுந்து இருந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதி
கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதி
படத்தை பார்க்கும் போது, யுவதியொருவர் தொங்கிக்கொண்டிருப்பதை போல தெரியும் எனினும், கதை வேறாகும்.
தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதியொருவர் தலவாக்கலை பிரதேச மக்கள் மற்றும் பொலிஸாரால் பெரும் பிரயத்தனத்து பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தலவாக்கலை கூட்டுறவு தலைமை அலுவலகத்துக்கு அருகாமையில் மிகவும் ஆழமான இடத்தில் இளம் பெண் வீழ்ந்துள்ளார், மேலும் அவர் நீர்த்தேக்கத்தில் தத்தளித்ததைக் கண்ட மக்கள் எடுத்த உடனடி நடவடிக்கையால் அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்தது.
கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதி
ஒரு சிலர் நீர்த்தேக்கத்தில் குதித்து அவளைப் பிடித்தனர், நீர்த்தேக்கத்துக்கு மேலே நின்றிருந்தவர்கள் கயிறுகளை போட்டு, மிகவும் சிரமப்பட்டு கரைக்கு இழுத்தனர், பின்னர் அவர் சிகிச்சைக்காக லிந்துலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அக்கரபத்தன பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவர் நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து மீட்கப்பட்டுள்ளார். வேலை ஒன்று இல்லையே என யோசித்துகொண்டே நீர்த்தேக்கத்துக்கு ஓரமாக சென்று கொண்டிருந்த போதே, நீர்த்தேக்கத்துக்குள் தவறி விழுந்துள்ளார்.
விபத்தில் யுவதி ஒருவர் பலி தாய் தந்தை சகோதரி படுகாயம்
விபத்தில் யுவதி ஒருவர் பலி தாய் தந்தை சகோதரி படுகாயம்
தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் மகள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கலேவெல நகரில் நேற்று (23) பிற்பகல் தார் ஏற்றிச் சென்ற வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த தாய், தந்தை மற்றும் ஏனைய மகள் ஆகியோர் சிகிச்சைக்காக தம்புள்ளை மற்றும் கலேவெல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெஹியத்தகண்டிய சிறிபுர பிரதேசத்தில் இருந்து குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறிபுர பகுதியைச் சேர்ந்த எஸ். எச். லோச்சனா காவ்யாஞ்சலி என்ற 19 வயது இளம்பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று (24) இவரது 20வது பிறந்தநாள் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் யுவதி ஒருவர் பலி தாய் தந்தை சகோதரி படுகாயம்
முச்சக்கரவண்டி குருநாகல் நோக்கி சென்று கொண்டிருந்த போது, கலேவெல நகரின் பிரதான வீதிக்கு அருகில் கெப் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பின்னால் வந்த தார் ஏற்றிச் சென்ற வாகனம் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் பின்னர் முச்சக்கரவண்டிக்குள் இருந்த யுவதி தூக்கி வீசப்பட்டு தார் ஏற்றிச் சென்ற வானத்தின் சில்லில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியின் சாரதி மற்றும் தார் ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- நீரில் மூழ்கி வாலிபர் பலி
- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா
- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு
- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு
- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்
- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை
- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு
- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை
- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்



























