Tag: மருந்து
தரமற்ற மருந்துகள் இலங்கையில்
தரமற்ற மருந்துகள் இலங்கையில்
தரமற்ற மருந்துகள் இலங்கையில் , தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.
அதனை அடுத்து சுகாதார அமைச்சினால் 13 க்கு மேற்பட்ட மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துகளை பயன்படுத்திய நோயாளர்கள் ஏனைய உடல் நோய் தாக்கங்களுக்கு சிக்கி இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது .
அதனை அடுத்து இந்த மருந்துகள் ஏன் எவ்வாறு யாரால் எங்கிருந்து எப்படி எதற்காக இறக்குமதி செய்யப்பட்டது என்பது தொடர்பாகவும் எப்படி இலங்கையில் எடுத்துவரப்பட்டது அதற்கான
அனுமதிய வழங்கியது யார் என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுகின்ற அரசு தெரிவித்துள்ளது .
இந்த மருந்துகளை இறக்கி அந்த முக்கிய மருத்துவமனைகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
இலங்கையில் கடந்த காலங்களாக மருத்துவமாபியாக்களினால் ; பல்வேறுபட்ட சொல்லன சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது .
அவ்வாறான நிலையில் உயிர்காக்கும் மருந்துகளை நம்பி உட்கொள்ளும் மக்கள் நோயாளர்களை இந்த மருந்து மோசடி இறக்குமதியின் ஊடாக
அவர்களுடைய உயிரோடு விளையாடி உள்ள சம்பவம் மக்கள் மத்தியில் கொதிப்பவைகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
குறித்த நபர்கள் பிடிக்கப்பட்டு நீதியின் முன்பாக நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுவார்களா அல்லது அவர்கள் பண முதலைகளால் அரசியல்வாதிகளால் காப்பற்றப்படுவார்களா என்பதை கேள்வியாக இருக்கிறது .
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

மருந்து வகைகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை
மருந்து வகைகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை
சில மருந்து வகைகளுக்கான கேள்வி மனு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் , அவை நாட்டை வந்தடைய சில மாதங்கள் செல்லும் என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,தேவையான உயிர் பாதுகாப்பு மருந்து வகைகளில் எந்தத் தட்டுப்பாடும் இல்லையென செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான நீங்கிவிடும். மருந்து இறக்குமதிக்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 11 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மருந்து இறக்குமதிக்காக ஏழாயிரத்து 300 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, எதிர்காலத்தில் உள்நாட்டு மருந்து விநியோகஸ்தர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் மொத்த மருந்து விநியோகத்தில் 40 சதவீதமானவற்றை உள்நாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வது இதன் நோக்கமாகும்.
தற்போது மருந்துத் தேவையில் 20 சதவீதமானவற்றை உள்நாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
வைத்தியசாலைகளில் மின் கட்டண கொடுப்பனவு பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் பயன்படுத்தப்படும் உயிர் பாதுகாப்பு மருந்து வகைகளில் 14 மருந்துகள் உள்நாட்டில் காணப்படுகின்றமை..
அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகளை
ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்
மருந்து விலை அதிகரிப்பு -அதிர்ச்சியில் இலங்கையர்கள்
மருந்து விலை அதிகரிப்பு -அதிர்ச்சியில் இலங்கையர்கள்
மருந்து விலை அதிகரிப்பு காரணமாக ,இலங்கையர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
இலங்கையில் நாள்தோறும், பொருட்களின் விலை ,அதிகரித்த வண்ணம் எழுகிறது .
இவ்வாறான நிலையில் தற்போது, 43 மருந்து பொருட்களின் விலைகள் ,வர்த்தமானி மூலம் அதிகரிக்க பட்டுள்ளது .
இந்த வர்த்தமானி மூலம் மருந்து விலை அதிகரிப்பு, என்ற அறிவித்தல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் பொருளாதாரம் தள்ளாடிய வண்ணம் உள்ள நிலையில் ,மருந்து விலை ,அதிகரிக்க பட்டுள்ள செயல் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் புற்றுநோய் மருந்துகளை நன்கொடை
டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் புற்றுநோய் மருந்துகளை நன்கொடை
மும்பையில் உள்ள டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கை ரூபாய் 20 மில்லியன் பெறுமதியான புற்றுநோய் மருந்துகளை 2022 ஜூலை 15ஆந் திகதி இலங்கைக்கு வழங்கியது.
இந்த நன்கொடையில் மஹரகமவில் உள்ள அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனைக்குத் தேவையான வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மருந்துகளும் இடம்பெற்றுள்ளன.
இலங்கைக்கு மருத்துவப் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வதற்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை எளிதாக்குவதற்காக
மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் நன்கொடையாளர் மற்றும் தொடர்புடைய இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் 2022 ஜூலை 16ஆந் திகதி ஒருங்கிணைத்தது.
இந்த கையளிப்பு விழாவில், நன்கொடையை ஏற்பாடு செய்த டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பின்வரும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்: டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் சி.எஸ்.
பிரமேஷ், டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பீடியாட்ரிக் என்கொலஜி பிரிவின் பேராசிரியர் மற்றும் தலைவர் பேராசிரியர் வைத்தியர் கிரிஷ் சின்னசாமி, டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் உதவி மருத்துவக்
டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படும் புற்றுநோய் மருந்துகளை நன்கொடை
கண்காணிப்பாளர் வைத்தியர் வினித் சமந்த், டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் புற்றுநோயியல் உதவிப் பேராசிரியர் வைத்தியர்
வெங்கட ராம மோகன் கொல்லமுடி, டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் பொது முகாமையாளர் (சி.எஸ்.ஆர்.) சுனிதா ராவ் மற்றும் டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் மருந்தாளர் வோனோத் நாயர்.
இந்த நன்கொடையை வழங்கும் நிகழ்வில் மும்பையில் உள்ள இலங்கையின் தூதரகத் தூதுவர் கலாநிதி. வல்சன் வேத்தோடி மற்றும் துணைத் தூதுவர் (வணிகம்) சந்துன் சமீர ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கைக்கு
தேவைப்படும் இந்த நேரத்தில் டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனையின் வழங்கிய விலைமதிப்பற்ற நன்கொடையைப் பாராட்டிய துணைத் தூதுவர், டாட்டா ஞாபகார்த்த நிலையம் மற்றும் இலங்கையில் உள்ள புற்றுநோய்
சிகிச்சை நிறுவனங்களுக்கு இடையே புற்றுநோய் சிகிச்சை அறிவு மற்றும் நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்வதற்கு மேலும் ஒத்துழைப்பைக் கோரினார்.
உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய புற்றுநோய் மையங்களில் ஒன்றான டாட்டா ஞாபகார்த்த மருத்துவமனை, 75 ஆண்டுகளுக்கும் மேலான
விதிவிலக்கான நோயாளர் பராமரிப்பு, உயர்தரப் பயிற்சி மற்றும் புதுமையான புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் தேசிய மற்றும் உலகளாவிய புற்றுநோய்
கட்டுப்பாட்டு முயற்சிகளில் முன்னணியில் உள்ளது. இது இந்தியாவில் புற்றுநோய்க்கான தடுப்பு, சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கான விரிவான தேசிய புற்றுநோய் மையமாகும்.
டாட்டா ஞாபகார்த்த நிலையம் அடிப்படை, மொழிபெயர்ப்பு, தொற்றுநோயியல் மற்றும் மருத்துவ புற்றுநோய் ஆராய்ச்சியில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. டாட்டா ஞாபகார்த்த நிலையத்தில் உள்ள
ஆராய்ச்சியில் புற்றுநோய் உயிரியலைப் புரிந்துகொள்வதற்கான ஆய்வுகள், பொதுவான புற்றுநோய்களுக்கான பெரிய சமூக அடிப்படையிலான
ஸ்கிரீனிங் சோதனைகள் மற்றும் கூட்டு ஆய்வுகள், நியோட்ஜுவண்ட் மற்றும் துணை சிகிச்சைகள், பெரிய அறுவை சிகிச்சை தலையீடுகள், அறுவை
சிகிச்சை சோதனைகள், மறுபயன்பாட்டு மருந்துகள் மற்றும் நோயாளி பயணத்தைப் புரிந்துகொள்வதற்கான தரமான ஆராய்ச்சி ஆகியவை
அடங்கும். மேலும், பயிற்சி மற்றும் கல்வி ஆகியவை டாட்டா ஞாபகார்த்த நிலையத்திற்கு முக்கிய கவனம் செலுத்தும் பகுதியான இது, இந்தியாவில் புற்றுநோயியல் பயிற்சிக்காக மிகவும் விரும்பப்படும் நிறுவனமாக உள்ளது.
இலங்கையின் துணைத் தூதரகம்,
மும்பை
இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு
இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு
கொழும்பு ;இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 200 மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .
தற்போது கையிருப்பில் உள்ள மருந்து பாவனை அதிகரிதத்தினால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .
மேலும் இரண்டு அல்லது மூன்று மதங்களில் 160 ,மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது .
இவ்வாறு தொடர்ந்து மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் இலங்கையில் மக்க அதிகம் பலியாகும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது.
மக்கள் பலிகளை தடுத்து நிறுத்திட ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விரைந்து செயல் பட வேண்டும் என கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு
இலங்கையில் மக்களின் உயிர்களை காப்பற்றி வரும் மருந்து இறக்குமதி தடை பட்டால் இலங்கையில் மக்கள் போராட்டங்கள் அதிகம் வெடித்து பறக்கும்நிலை ஏற்பட போகிறது .
இது இலங்கை நாட்டில் என்றும் இல்லாத அளவுக்கு பெரும் போராக வெடிப்பதுடன் இந்த போராட்டங்களில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகும் நிலையம் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கை நாட்டில் ல் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் ஒருபுறம் ,மறுபுறம் உயிர் காக்கும் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு என தொடரும் அவலம் .
இறந்த பிணங்களை எரித்திட எரிபொருள் இன்றி மக்கள் தவிக்கும் பரிதாபம் என தொடரும் துயர்களை துடைத்திட ஆளும் ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்சே ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகினால் மட்டுமே இந்த நிலைக்கு முடிவு காணலாம் என்பது மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது .
எரிபொருளுக்கு காத்திருந்து இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் மக்கள் தொழில் துறைகள் பாதிக்க பட்டுள்ளன .
அவ்விதமான தொடர்ச்சியாக மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் மருத்துவமனைகள் அடித்து பூட்டும் நிலை ஏற்படுவதுடன் தனியார் மருத்துவமனைகள் அதிக இலாபம் ஈட்டும் நிலைக்கு சென்று விடும் .
இந்த பேராபத்தில் இருந்து மக்களையும் இலங்கை நாட்டையும் ஆளும் ஜனாதிபதி கோட்டபாய அரசு எவ்வாறு காப்பாற்ற போகிறது என்பதே மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் மருந்து தட்டுப்பாடு
இலங்கையில் மருந்து தட்டுப்பாடு
இலங்கையில் சுகாதாரத்துறையில் முகாமைத்துவம் செய்ய முடியாத அளவுக்கு பாரிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை.
இவ்வாறான சூழ்நிலையில சுகாதார அமைச்சு இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் இல்லை என்று சுகாதார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்…
இந்த நேரத்தில், சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து குழுக்களையும் ,விசேட வைத்திய நிபுணர்களையும் இந்த நிர்வாகத் துறையில் இணைக்க முடியும்.
பங்குதாரர்கள் அனைவரும் இதை தமது பொறுப்பாகக் கருதி, கொவிட் காலத்தில் இருந்தே ஒன்றாகச் செயல்பட்டு வருகின்றனர். இது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றும் தெரிவித்தார்.
மருந்து வகைப்படுத்தலில் 14 வகையான மருந்துகள் பிரத்தியேகமாக இனங்காணப்பட்டுள்ளன. அவை மிகவும் முக்கியமான மருந்து வகைகள்.
இந்த சந்தர்ப்பத்தில் அவ்வகையான மருந்து வகைகள் நாட்டில் இல்லை என்றும் அவற்றிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாக பேசப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், அந்த 14 வகையான மருந்துகளுக்கும் இப்போதைக்கு தட்டுப்பாடு இல்லை என்று தன்னால் தெளிவாகக் கூற முடியும். இதில் ஒரு வகையான மருந்துக்கு மாத்திரம் தட்டுப்பாடு காணப்பட்டது.
அந்த தட்டுப்பாடும் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுவருகிறது. இந்த மருந்துகளில் 25,000 நாளை நாட்டுக்கு கிடைக்க உள்ளன.
அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் 100,000 மருந்து சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
எனவே, அந்த 14 வகையான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இருப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறுவது தவறானது. 664 அத்தியாவசிய மருந்துகள் காணப்படுகின்றன.
அவற்றில் 51 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருந்ததுடன். அவை நேற்றைய தினம் 49 ஆக குறைந்துள்ளது.
இலங்கையில் மருந்து தட்டுப்பாடு
பிரச்சினைகள் இன்னும் சில நாட்களில் தீர்க்கப்படும். 49 அல்லது 50 வகையான மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் எங்களிடம் இருக்கின்றன.
வைத்தியசாலைக்கு வரும் கடுமையான நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்படவில்லை என்பதை மிகவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
விசேட வைத்தியர்கள் உட்பட சுகாதாரத் துறையில் பல பங்குதாரர்கள் ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டிய அமைச்சர், இதன்போது மருந்துகளை கொள்வனவு செய்வதில் அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
அத்துடன், சுகாதாரத்துறையில் மருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் விஞ்ஞான ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு தாம் தயாரில்லை.
இலங்கையின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடையாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் உலகெங்கிலும் உள்ள பல நண்பர்கள் இந்த நேரத்தில் பெருமளவில் நன்கொடைகளை வழங்க இணங்கியுள்ளனர்.
நாங்கள் ஆண்டு தோறும் சுமார் 260 மில்லியன் டொலர்களை மருந்து மற்றும் ஏனைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலவழிக்கின்றோம்.
இதுவரை பல்வேறு துறைகளில் இருந்தும் 439 மில்லியன் டொலர்களை நாங்கள் பெற்றுள்ளோம். நேற்று அவுஸ்திரேலிய அரசாங்கம் சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய உணவுக்காக மேலும் 50 மில்லியன் டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டது.
அதன் பின்னர் அடுத்த ஒன்றரை வருடத்திற்கு கண்டிப்பாக அந்நியச் செலாவணி பற்றாக்குறையில் இருந்து மருந்து கொண்டு வர முடியாது என்ற கதை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, அந்த சவாலுக்கு முகம்கொடுக்க நமது நண்பர்கள் உதவியிருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு 3 மாதங்கள் ஆகும். ஆனால், அது தற்போது 2 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளன.
இந்த 6 வாரங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் வரைதான் இந்தக் கஷ்டங்கள் இருக்கும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் விசேட வைத்தியர் தொடக்கம் சிற்றூழியர் வரை போக்குவரத்துப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.
இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் விசேட வைத்தியர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
தற்போது போக்குவரத்து அமைப்பு சாதகமான நிலையில் உள்ளதாகவும் இந்த வாரத்தில் தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நாடளாவிய ரீதியில் உள்ள 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதாரத் துறையின் விசேட வைத்திய நிபுணர்கள் தொடக்கம் தொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதற்கு
வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ரசியா உக்கிர தாக்குதல் 600 பேர் காயம் – மருந்து உதவியின்றி மக்கள் அவதி
ரசியா உக்கிர தாக்குதல் 600 பேர் காயம் – மருந்து உதவியின்றி மக்கள் அவதி
உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.
இவ்வேளை மரியபூல் பகுதியில் ரசியாவின் முற்றுகையில் சிக்கியுள்ள பகுதி ஒன்றில் சுமார் 600 க்கு மேற்பட்ட இராணுவம் மக்கள் காயமடைந்த நிலையில் தவித்து வருகின்றனர்.
மேலும் அங்கு மருந்து ,மற்றும் உணவு பொருட்களை இன்றி மக்கள் இறந்த வண்ணம் உள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதி இன்றி இறந்த வண்ணம் உள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது.
கொரனோ எதிரொலி -வீடுகளுக்கு மருந்துகள் விநியோகம்
கொரனோ எதிரொலி -வீடுகளுக்கு மருந்துகள் விநியோகம்
தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள
அரச மருந்தகங்களிலிருந்து (ஒசுசல), ஒன்லைன் மூலமாக
மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசேட அறிக்கையினூடாக இது தொடர்பில்
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அரச தகவல் பணிப்பாளர் ஜெனரல் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்.
மேற்படி அறிவித்தலுக்கு அமைவாக, ஒன்லைன் மூலமாக மருந்துகளை
விநியோகிப்பதை மீள ஆரம்பிக்குமாறு, சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர்
ஜெனரல் டொக்டர் எஸ்.ஸ்ரீதரன் அரச மருந்தகங்களுக்குப் பணித்துள்ளார்.
ஊரடங்குச் சட்ட பகுதிகளில் உணவு, மருந்து விற்பனை நிலையங்கள் திறப்பு
ஊரடங்குச் சட்ட பகுதிகளில் உணவு, மருந்து விற்பனை நிலையங்கள் திறப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாகும் இடங்களில் உணவு
மற்றும் மருந்து விற்பனை நிலையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
இவை காலை 8.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும்
என கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான செயற்பாட்டு நிலையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு சிறப்பு விமானத்தில் மருந்துகள் அனுப்பிய இந்தியா photo
இலங்கைக்கு சிறப்பு விமானத்தில் மருந்துகள் அனுப்பிய இந்தியா photo
இலங்கைக்கு 12.5 தொன் நிறையுடைய மருந்துப் பொருட்களை இந்தியா, நன்கொடையாக வழங்கியுள்ளது.
கொவிட் 19 தொற்றை தடுப்பதற்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் உபகரணங்களை உள்ளடக்கிய இந்த பொருட்களை
இலங்கையின் புதிய இந்திய உயர்ஸ் தானிகராக நியமனம்பெற்றுள்ள கோபால் பாக்லே நேற்று இலங்கைக்கு
எடுத்துவந்தார்.இலங்கை வந்தடைந்த புதிய உயர்ஸ்தானிகர் இந்தியாவின்
சார்பில் இலங்கை மக்களுக்கு தனது வெசாக் தின
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
அவர் எடுத்துந்த இந்த நன்கொடை மருந்து பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படும் இந்தியாவின் நான்காவது நன்கொடையாகும்.
கடந்த மார்ச் 15 ஆம் திகதி சார்க் தலைவர்களுக்கிடையே நடைபெற்ற இணைய மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
சர்வதேச தொற்று நோயான கொவிட்-19க்கு எதிராக இணைந்து போராடுவோம் என்று அறிவித்திருந்தார். இதற்கமைய நான்காவது
தடவையாக மேலும் ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சிறப்பு 
















