Tag: மனைவியை
வௌிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்
வௌிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்
நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் நேற்று (02) காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருநாகல் மரலுவாவ பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வௌிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்
உயிரிழந்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் இருந்து 02 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு முற்றிய நிலையில் கணவன் மனைவியை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்றத்தினால் சிறைச்சாலை அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை காணவில்லை தேடும் கணவன்
மனைவியை காணவில்லை தேடும் கணவன்
இலங்கையில் தனது இளம் மனைவியை காணவில்லை என கணவன் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் .
பத்தொன்பது வயதுடைய மனைவி 19 ஆம் திகதி காணமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்ய பட்டுள்ளது .
வேலைக்கு சென்று வீடு திரும்பிய பொழுது ,வீட்டில் மனைவி காணாமல் போயிருந்ததாக ,கணவன் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் .
மனைவியை காணவில்லை தேடும் கணவன்
அயல் வீடுகளில் விசாரித்த பொழுதும் ,மனைவி அங்கு கண்டு பிடிக்க முயாத நிலையில் ,இந்த முறைப்பாடு செய்ய பட்டுள்ளது .
இவர் காணமல் போன சமபவம் பெரும் அதிர்வலைங்களை ஏற்படுத்தியுள்ளது.
,இவ்விதம் காணாமல் போகும் பெண்கள் சடலங்களாக, மீட்க பட்டு வரும் நிலையில் ,இந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது . .
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைதுby நிருபர் காவலன்
- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனைby நிருபர் காவலன்
- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிby நிருபர் காவலன்
- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்புby நிருபர் காவலன்
- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்புby நிருபர் காவலன்
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சைby நிருபர் காவலன்
- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைதுby நிருபர் காவலன்
- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்by நிருபர் காவலன்
- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறதுby நிருபர் காவலன்
- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்by நிருபர் காவலன்
மனைவியை சுவரோடு அடித்து கொன்ற கணவன்
மனைவியை சுவரோடு அடித்து கொன்ற கணவன்
தமிழகம் அம்பத்தூர் பகுதியில் 48 வயது மனைவியை 55 வயதுடைய கணவன் சுவருடன் மதலையை அடித்து கொன்றுள்ளார் .
போதைக்கு அடிமையான கணவரை ,போதை தடுப்பு சீர் திருத்த பள்ளியில் மனைவி ஒப்படைத்துள்ளார் .
அங்கிருந்து திருந்திய மகனாக வெளியியல் வந்த கணவன், மீளவும் போதைக்கு அடிமையாகி ,மனைவி வீட்டுக்கு சென்று கெட்ட வார்த்தையால் திட்டி ,வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் .
அங்கு வைத்து கோரமாக மனைவியை தாக்கிய கணவன் ,தலை முடியை பித்து தலையை சுவருடன் பலமாக அடித்து கொன்றுள்ளார் .
பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான மனைவி அவ்விடத்திலேயே துடி துடித்து இறந்து போனார் .
குடிகாரர்கள் தமது சுக போகத்திற்காக குடித்து தம்மை மட்டும் அழித்து வாழ்வை சீரழித்த போதாத நிலையில் ,
மனைவியையும் கொன்று பிள்ளைகளை அனாதையாககும் செயல் மிக கொடூரமானது .
மனைவியை குத்திக்கொன்று கணவன் தற்கொலை-அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்
மனைவியை குத்திக்கொன்று கணவன் தற்கொலை-அமெரிக்காவில் இந்தியர் கொலை வெறி செயல்
மராட்டிய மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகையை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார் (வயது 32). இவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆரத்தி (வயது 30). குடும்பத்தலைவி.
இந்த தம்பதியருக்கு 2014-ம் ஆண்டு டிசம்பரில் திருமணமானது. அதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு நியூஜெர்சி மாகாணத்தில் நார்த் ஆர்லிங்டனில்
உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஆரத்தி மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு பாலாஜி, ஆரத்தி தம்பதியரின் மகள் வீட்டின் பால்கனியில் நின்று அழுதுகொண்டு இருந்திருக்கிறாள்.
இதைக்கண்டதும் அக்கம்பக்கத்தினர் என்னவோ ஏதோ என பதறிப்போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, பாலாஜியும், ஆரத்தியும் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர்.
போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கணவன், மனைவி இருவருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஆரத்தியை, பாலாஜி கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலை செய்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
இதுபற்றி அம்பாஜோகையில் உள்ள பாலாஜியின் தந்தையும், தொழில் அதிபருமான பரத் ருத்ரவாருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பரத் ருத்ரவார் கூறியதாவது:-
உள்ளூர் போலீசார் நடந்த துயர சம்பவம் குறித்து எனக்கு தெரிவித்தனர். என்ன நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னர் அது பற்றிய தகவல்களை தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
என் மருமகள் 7 மாத கர்ப்பிணி. நாங்கள் அமெரிக்கா சென்று அவர்களுடன் இருந்து விட்டு வந்தோம். மீண்டும் அமெரிக்காவுக்கு அவர்களை பார்க்கச்செல்ல திட்டமிட்டிருந்தோம்.
இந்த நிலையில்தான் இப்படி ஒரு துயரம் நடந்து விட்டது. இதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் மகிழ்ச்சியான தம்பதியராகத்தான் இருந்து வந்தார்கள்.
எல்லா சட்டநடைமுறைகளும் முடிந்து அவர்களது உடல்களை எடுத்து வர 10 நாட்கள் வரை ஆகலாம். எனது பேத்தி, எனது மகனின் நண்பர் வீட்டில் இருக்கிறாள். என் மகனுக்கு அங்கு நிறைய இந்திய நண்பர்கள் உள்ளனர்.






























