Tag: மணல்
மணல் மோசடியில் சிக்கிய அரசியல்வாதிகள்
மணல் மோசடியில் சிக்கிய அரசியல்வாதிகள்
மணல் மோசடியில் சிக்கிய அரசியல்வாதிகள் ,மணல் அகழ்வு மோசடி சம்பவத்தின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
“சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமான பளை என்றப் பகுதியில், ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய மோசடி என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன. சுமார் 400 மில்லியன் ரூபா ஊழல் பரிவர்த்தனை மற்றும் மோசடி நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது, இருப்பினும் இந்த மோசடிக்கு
இறுதியில் யார் பொறுப்பு என்று சொல்ல முடியாது, ஆனால் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
பல ஒப்பந்ததாரர்கள் பற்றிய தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன.
மணல் கடத்திய வாகனம் மீது துப்பாக்கிச் சூடு
மணல் கடத்திய வாகனம் மீது துப்பாக்கிச் சூடு
மணல் கடத்திய டிப்பர் வாகனம் ஒன்றைப் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.
நேற்று புதன்கிழமை யாழ். வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்ந்து கொண்டு தப்பிச் சென்ற டிப்பர் வாகனத்தைப் பருத்தித்துறை பொலிஸார் வல்லிபுரம் – ஆனைவிழுந்தன் வீதியில் வைத்து
நிறுத்துமாறு பொலிஸார் கோரியபோது அது தப்பியோட முற்பட்டது. இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி அதைக் கைப்பற்றினர்.
கடத்தக்காரர்கள் தப்பித்த நிலையில், டிப்பர் வாகனம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
களவாக மணலுடன் சென்ற டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸ்
களவாக மணலுடன் சென்ற டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸ்
கிளிநொச்சி-பூநகரி சாமிப்புலம் கிராமத்தில் களவாக மணலுடன் சென்ற டிப்பரை விசேட அதிரடிப் படையினர் மடக்கிப் பிடித்துள்ள சம்பவம் புதன்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
பிடிக்கப்பட்ட டிப்பரை மணலுடன் பூநகரி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், பூநகரி பிரதேசத்தில் தொடர்ச்சியாக மணல், மரக்கடத்தல்கள் இடம் பெறுவதன் காரணமாக அதனை தடுக்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கள்ள மணல் ஏற்றிய கும்பல் யாழில் கைது
கள்ள மணல் ஏற்றிய கும்பல் யாழில் கைது
இலங்கை ,யாழ்ப்பாணம், – கொடிகாமம் கெற்பேலி பகுதியில் உளவு இயந்திரம் மூலம் மணலை ஏற்றியவர்கள் இராணுவத்தால் கைது செய்யப் பட்டுள்ளனர் .
கொடி காமம் பகுதியியில் கள்ள மணல் ஏற்றுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரைந்து வந்த இராணுவத்தினர் மணல்
ஏற்றியவர் இருவரை கைது செய்ததுடன் உளவு இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
மணல் கொள்ளையில் ஈடுபட்ட மைத்திரி சகோதரன் சிக்கினார் – விசாரணைகள் ஆரம்பம்
இலங்கையின் நல்லாட்சி வேந்தர் என அழைக்க பட்டு வந்த மைத்திரி ஆட்சியில் அவரது சகோதாரர் நிறுவனத்துக்கு மணல் ஏற்றி கொடுத்து பல கோடி கணக்கில் மைத்திரி பணம் சம்பாதித்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது
மணல் கொள்ளை
2018 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆண்டுகளில் இடம்பெற்ற மணல் கொள்ளை தொடர்பானவிசாரணைகளை ஆரம்பிக்க வேண்டு என்ற கோரிக்கைகள் முன்வைக்க பட்டுள்ளது
மோசடி
பொலனறுவையின் அபிவிருத்தி பணிகளுக்கு என்ற பெயரில் சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கன அடி மண் அள்ளி விற்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது
மைத்திரி ஆட்சியில் இடம்பெற்ற இந்த பெரும் கொள்ளையை விசாரித்து ,அரசுக்கு சேரவேண்டிய பணத்தை தமது
உடமையாக்கிய இவரை கைது செய்து அதனை அரசுக்கே சேர்ப்பிக்க பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்க பட்டுள்ளது
மகிந்தா குடும்பம் பழிவாங்கல்
இவரது ஆட்சியில் மகிந்த குடும்பம் விசாரணைக்கு உட்படுத்த பட்டு பெரும் நெருக்கடிகள் தரப்பட்டதும் ,பிள்ளையான் சிறையில்
அடைக்க பட்டதும் இடம்பெற்றது ,அதற்கு பழிவாங்கும் முகமான அரசியலை இப்பொழுது கோட்டபாய தூண்டி விட்டுள்ளார்
மக்கள் நலன் மறந்து தாம் கொள்ளையடிக்கும் தனிநபர் வியாபாரம் இலங்கையில் அரங்கேறி வருகிறது
வயல், குளங்களில் மணல் அகழ்வதற்கு தடை
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் மற்றும் குளங்களிலிருந்து மணல் அகழ்வதற்கான சிபாரிசு வழங்குவதனை
இடை நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.
கமநல அபிவிருத்தித் திணைக்களம், மாகாண நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மத்திய நீர்ப்பாசன திணைக்களங்களுக்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
வயல் நிலங்களை திருத்துவது என்ற போர்வையில் வயல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலங்களிலிருந்து மணல் அகழும் நடவடிக்கைகள்
இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருவதாகவும். இதன் காரணமாக வயல் நிலங்கள் பள்ளமாவதுடன் மேட்டு நிலப் பயிர்ச்செய்கை பாதிப்படைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்குரித்தான குளங்களிலிருந்தும் கனிசமான மணல் அகழ்வதனால் இவற்றின்
ஆழம் அளவுக்கதிகமாக அதிகரிப்பதுடன், இங்கு நீர் அருந்தவரும் கால்நடைகள் குளத்தில் மூழ்கி உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.
இத் திணைக்களங்களுக்குச் சொந்தமான குளங்கள் அத்தியாவசியமாக திருத்தம் செய்யும் தேவைகள் ஏற்படின்
அத்திணைக்களங்கள் ஊடாக மாத்திரம் திருத்த வேலைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மணல் கொள்ளையர்களை மடக்கிய போலீஸ் – வாகனங்கள் பறிமுதல்
மணல் கொள்ளையர்களை மடக்கிய போலீஸ் – வாகனங்கள் பறிமுதல்
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் சட்டவிரோதமான
முறையில் மண் ஏற்றி வந்த இரு வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
அம்பாறை பிரதேசத்தில் இருந்து கனரக வாகனங்களில் சட்டவிரோதமான
முறையில் அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றி வருவதாகப் பொலிஸாருக்குக்
கிடைத்த தகவலையடுத்தே இந்த வாகனங்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளதோடு, வாகனத்தின் சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழில் மணல் மாபியாக்களுக்கு வலை விரிப்பு – ஏன் இந்த அவசரம் .?
யாழில் மணல் மாபியாக்களுக்கு வலை விரிப்பு – ஏன் இந்த அவசரம் .?
யாழ்ப்பாணத்தில் மணல் மாபியாக்கள்பெரும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் .
இவர்களின் இந்த கொள்ளையை முறியடிக்க தற்போது புதிய வியுயுகம் வகுக்க பட்டு அவர்களுக்கு பொறி வைக்க பட்டுள்ளது
ஆளும் கோத்தபாயாவிற்கு இந்த மணல் கொள்ளையில் ஒரு பங்கு உண்டு,அதாவது கமிஷன் ,
தனது முகவர்களை மட்டுமே அள்ளிட அனுமதிக்கும் இவர்கள் ஏனையவர்களை
செயல் படாது முடக்கும் வகையில் இராணுவம் காவல்துறையினரை வைத்து
புதிய செக்மேட் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளார்,எதிர் வரும் நாட்களில்
இந்த வெளிப்பாடுகள் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது
கண்ணி வெடி தாக்குதல் இந்த விடையதாகி அறிமுக படுத்தி வைக்கிறது
அது தவிர கப்பம் அறவிடும் வேட்டை சூடு பிடித்துள்ளது ,ஆளும் தமிழ் அமைச்சர் ஒருவரே இதன் தளபதியாம் என தகவல் கசிகிறது














