Tag: பேருந்துகள்
மூன்று பேருந்துகள் மோதி விபத்து
மூன்று பேருந்துகள் மோதி விபத்து
மூன்று பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டதில் மாணவர்களிடம் படுகாயம் அமைந்துள்ளார்கள் கொழும்பு பதிலை பிரதான வீதியில் பாலாங்குடை ஆல எல்ல போல பகுதியில் 3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கன.Three buses collide in accident
தனியார் பேருந்து அரசு பேருந்து Private Bus Government Bus
மாணவர்களை ஏற்றிச் சென்று வந்த பேரிலிருந்தும் தனியார் பேருந்து அரசு பேருந்து உள்ளிட்டவையை இதில் மோதின .
இதன்போது 3 பேருந்துகளும் சேதம் அடைந்தனர் பயணிகளும் காயம் அடைந்தார்கள்.
காயமடைந்த பயணிகள் Injured passengers
காயமடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வரும் இந்த வீதி விபத்துகளினால் தொடர்ந்தும் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் தெரிவித்துள்ளார்கள்.
பேருந்துகள் மோதிவிபத்து 22பேர் காயம்
பேருந்துகள் மோதிவிபத்து 22பேர் காயம்
பேருந்துகள் மோதிவிபத்து 22பேர் காயம் மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும்,
சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபை
விபத்தில் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தம்பகல்லவிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தும் மோதியதில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.
மொனராகலை வைத்தியசாலை
காயமடைந்த 22 பேர் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று பேருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளனர்
மூன்று பேருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளனர்
இமதுவையில் மூன்று பேருந்துகள் மோதிக்கொண்டதில் குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளனர்
காலி, இமதுவ அங்குலுகஹா சந்தியில் மூன்று பேருந்துகள் மோதியதில் குறைந்தது 29 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (26) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இரண்டு தனியார் பேருந்துகளும் ஒரு அலுவலகப் போக்குவரத்து பேருந்தும் மோதியுள்ளது.
ஒரு பஸ் நிலைதடுமாறி இருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும், மற்றொன்று பின்னால் இருந்து மோதியதாகவும், அதைத் தொடர்ந்து மூன்றாவது பஸ் இரண்டாவது பஸ்ஸில் மோதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
23 பயணிகள் இமதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆறு பேர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இமதுவ பகுதியில் மூன்று பேருந்துகள் மோதிக் கொண்டதில் குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளமை தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலி, இமதுவ அங்குலுகஹா சந்தியில் மூன்று பேருந்துகள் மோதியதில் குறைந்தது 29 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (26) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இரண்டு தனியார் பேருந்துகளும் ஒரு அலுவலகப் போக்குவரத்து பேருந்தும் மோதியுள்ளது.
ஒரு பஸ் நிலைதடுமாறி இருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும், மற்றொன்று பின்னால் இருந்து மோதியதாகவும், அதைத் தொடர்ந்து மூன்றாவது பஸ் இரண்டாவது பஸ்ஸில் மோதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
23 பயணிகள் இமதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆறு பேர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ,மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளன.
இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 29 பேர் கந்தர மருத்துவமனையிலும், மேலும் 6 பேர் மாத்தறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு.
வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு.
வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு. ,தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தால் அரச பேருந்துத்தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு தெரிவித்து போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை, தமது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் வட மாகாண ரீதியாக பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

























