Tag: புலிக்கொடி
புலிக்கொடி பறக்கும் பறக்கும்| கதற விட்ட பாடல்
புலிக்கொடி பறக்கும் பறக்கும்| கதற விட்ட பாடல்
புலிக்கொடி பறக்கும் பறக்கும்| கதற விட்ட பாடல் |மாவீரர் பாடல் |Maaveerar Song |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .
ஆகும் .
மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும்
தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .
இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .
பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி
பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .
நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

- உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586

ஐநா முன் பறந்த புலிக்கொடி
ஐநா முன் பறந்த புலிக்கொடி
ஐநா முன் பறந்த புலிக்கொடி ஐநா முன் பறந்த புலிக்கொடியால் இலங்கை ஆளும் அரசு கொதிப்பில் உறைந்துள்ளது .
தியாகி திலீபன் நினைவு நாளை முன்னிட்டு
தியாகி திலீபன் நினைவு நாளை முன்னிட்டும் அறுபதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை சுவிஸ் நாட்டில் இடம் பெற்று வருகிறது .
அதனை அடுத்து தமிழர்கள் அறவழிப் போராட்டத்தை நடத்திய பொழுது ஐநா வுக்கு முன்பாக புலிக்கொடி அங்கு பறக்க விடுவதற்கு அனுமதி அளித்திருந்தது .
விடுதலை புலிகளின் தேசியக்கொடி
இதனால் தமிழீழ , விடுதலை புலிகளின் தேசியக்கொடியாக விளங்கும் புலிக்கொடி ஐக்கிய நாடுகள் சபை முன்பாக அங்கு பட்டொளி வீசி பறந்தது.
நூற்றுக்கணக்கான தமிழர்கள் அங்கு கூடி இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பான ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக புலிக்கொடி பறந்து அசைந்து ஆடியது .
வளமையாக சுவிஸ் அரசாங்கம் புலிக்கொடி பிடிப்பதற்கு தடை விதித்து வந்தது .
ஆனால் இந்த முறை அறுபதாவது மனித உரிமை கூட்டத்தொடரில் தேசியக் கொடியான புலிக் கொடி பறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது தமிழர்களுக்கு மிகப்பெரும் வரவேற்பையம் மகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை இனப்படுகொலைக்கு ஆதரவாக பல நாடுகள் குரல் கொடுத்து வருகிறது .
இவ்வாறான நிலையில் இம்முறை புலிக்கொடியுடன் மனித உரிமை பேரவைக்கு முன்பாக இலங்கை இடம் பெற்றது இனப்படுகொலை என தமிழர்கள் முழங்கிய செயல், இலங்கை அரசாங்கத்தை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
ஐக்கிய நாடுகள் முன்பாக தமிழர்கள் போராட்டம் – பறந்த புலிக்கொடி படங்கள் உள்ளே
ஐக்கிய நாடுகள் முன்பாக தமிழர்கள் போராட்டம் – பறந்த புலிக்கொடி படங்கள் உள்ளே
சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் என ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) தமிழர்கள் அறைகூவல்.
48வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) பெரும் எழுச்சியாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. காலை (20/09/2021) ஐக்கிய
நாடுகள் அவையின் ஆணையாளர் வதிவிடத்தில் மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்களால் மனு கையழிக்கப்பட்டது. குறிப்பாக சிங்களப் பேரினவாத அரசினால்
மெற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே தமிழருக்கான உறுதியான தீர்வு என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்தோடு சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சி ஆவணங்களும் கையளிக்கப்பட்டது.
தொடர்ந்தும் ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) எழுச்சிக்கோசங்களோடு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி தமிழீழத் தேசியக்கொடி பட்டொளிவீசிப் பறக்க எழுச்சிகரமான மக்கள் வெள்ளத்தோடு மேலும் நிகழ்வுகள் தொடர்ந்தன.
கடந்த 02/09/2021 பிரித்தானியாவில் ஆரம்பித்து 6 ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்தும் 1280 Km பயணித்து முக்கிய பல அரசியல் மையங்களின் ஊடாக ஐரோப்பிய நாடுகள் தமிழர்களின்
நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும் என 23ம் தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்கள் தம் விடுதலைப்பயணத்தில் தாம் கண்ட அரசியல் முன்னேற்றத்தினையும் அனுபவங்களினையும் மக்களோடு பகிர்ந்து கொண்டனர். சிறிலங்காப்
பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றால் தமிழர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினவழிப்பின் சாட்சிகள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட
வேண்டும். எனவே அனைத்து தமிழ் உறவுகளும் தங்கள்
சாட்சியங்களை வாய்மூலமோ எழுத்துமூலமோ நிரூபிப்பதன் ஊடாக கால தாமதமின்றி சிங்களப் பேரினவாத அரசினை சர்வதேச சமூகம் தண்டிக்க முடியும். எனவே அதற்கான முன்னேற்பாடுகளுக்கான அறைகூவலும் மனித நேய செயற்பாட்டாளர்களால் விடப்பட்டது.
தொடர்ந்தும் நடைபெற்ற நிகழ்வில் எழுச்சிகரமான கவிதைகளும் , தமிழ் , டச்சு,பிரஞ்சு, மற்றும் ஆங்கில மொழியிலுமாக இளையோர்களால் எழுச்சி உரை நிகழ்த்தப்பட்டது. பன்னாட்டு வாழிட உறவும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எதிரொலியினை அழுத்தம் திருத்தமாக இடித்துரைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று (20/09/2021) தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 6வது நினைவு நாளின் 34 ம் ஆண்டில் நாம் நின்றுகொண்டு இருக்கின்றோம் ஆனால் இன்னும் விடுதலைப் பசி தீராத எம் திலீபன் அண்ணாவின் கனவும் அற்பணிப்பின் நோக்கமும் ஈடேற வேண்டும் என்றால் தமிழ்
மக்கள் அனைவரும் தம் வாழிட நாடுகளில் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்து வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு
நாம் வாழும் நாடுகள் செவிமடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். காலம் தந்த அரிய வாய்பினை தவறவிட்டு வரலாற்றுப் பெரும் துயருக்கு சொந்தமாகாது இனிதே எம் தமிழீழ மண்ணை மீட்டெடுப்போம் வாரீர் என முழக்கங்கள் எழுப்பியவாறே நம்புங்கள் தமிழீழம் பாடலோடு இன்றைய அறவழிப்போராட்டம் நிறைவு பெற்றது.
எம் அன்பான தமிழீழ உறவுகளே நாம் அனைவரும் சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பின் வடுக்களை சுமந்து கொண்டே வாழ்கின்றோம். அவ்விழப்புக்களை சாட்சியங்களாக சமர்பித்தலின் மூலம் நிச்சயம் சர்வதேச மட்டத்தில் சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் தமிழீழ சுதந்திர தேசத்தினை நாம் விரைவாக மீட்டெடுக்க முடியும். எனவே உங்கள் வாழிட நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக சாட்சியங்களை சமர்ப்பிக்க தவறாதீர்கள்.
“காலத்தின் தேவைக்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கமைய போராட்ட வழிமுறைகள் மாறலாம் , நாம் கொண்ட இலட்சிய நோக்கம் என்றும் மாறாது”
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.






சிங்கள இராணுவ இணையங்களில் புலி கொடியை பறக்கவிட கைக்கிங் புரிய முயன்ற புலிகள் – அரசு கூவல்
சிங்கள இராணுவ இணையங்களில் புலி கொடியை பறக்கவிட கைக்கிங் புரிய முயன்ற புலிகள் – அரசு கூவல்
இலங்கை ,சிங்கள இராணுவத்தின் மிக முக்கிய பாதுகாப்பபு துறை சார்ந்த
இணையங்களை கைக்கிங் புரிந்து அதில் புலிக்கொடி மற்றும் ,புலிகளை
வெற்றி காணொளிகளை வெளியிட புலிகளின் வெளிநாட்டு கைக்கிங்
குழு ஒன்று முயன்றுள்ளதாக சிங்கள அரச பயங்கரவாதம் அறிவித்துள்ளது
முள்ளி வாய்க்கால் தினத்தில் இந்த நாசகார வேலைகளை புரிந்திட அவர்கள்
முயன்றுள்ளதாகவும் ,ஆனல் அவை தமது பாதுகாப்பு பிரிவினரால் முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது











