பிரபகாரன் பிறந்த நாளான இன்று வெளிவந்துள்ள புதிய பாடல் வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

பிரபகாரன் பிறந்த நாளான இன்று வெளிவந்துள்ள புதிய பாடல் வீடியோ

பிரபகாரன் பிறந்த நாளான இன்று வெளிவந்துள்ள புதிய பாடல் வீடியோ

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களது பிறந்த நாளான இன்று புதிய பாடல் ஒன்று வெளிவந்துள்ளது .

தேனிசை செல்லப்பாவின் குரலில் ,இளங்களோ செல்லப்பாவின் இசையில் ,ஸ்ரீகாந்தன் வரிகளில் அழகிய உலகில் ஓர் தலைவன் என்கின்ற பாடல் வெளியாகியுள்ளது .

காலம் கடந்தாலும் தேச தலைவன் நினைவுகள் தமிழர் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்கும் .

https://www.youtube.com/watch?v=HWn0LDBQp8w
Posted in சினிமா

பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்

பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்

வரனே அவஷ்யமுண்டு என்ற மலையாள படத்தில் பிரபாகரன் பெயரை அவமதித்ததாக சர்ச்சை எழுந்ததையடுத்து தமிழ் மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்

அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இதில் துல்கர்

    சல்மானுடன், ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படம் தற்போது இணையதளத்திலும் வந்துள்ளது.

    இந்த படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்றில், சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து

    அழைப்பர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் துல்கர் சல்மான் உள்ளிட்ட படக்குழுவினரை இணையத்தில் தீட்டித் தீர்த்தனர்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான துல்கர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: வரனே அவஷ்யமுண்டு படத்தில் வரும்

    பிரபாகரன் காமெடி காட்சி தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

    உண்மையில் அது எந்தவித உள்நோக்கத்துடனும் வைக்கப்பட்டது அல்ல. பழைய மலையாள திரைப்படமான பட்டண பிரவேசம்

    படத்தில் வரும் நகைச்சுவை காட்சி அது, மேலும் அது கேரளாவில் பயன்படுத்தப்படும் பொதுவான மீம் .

    பிரபாகரன் என்பது கேரளாவில் ஒரு பொதுவான பெயர். எனவே, படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் அது யார் மனதையும் துன்புறுத்துவதற்காக அல்ல. இதனை எதிர்க்கும் பலரும் படத்தைப்

    பார்க்காமலேயே வெறுப்பைப் பரப்ப முயல்கின்றனர். என்னையோ, என்னுடைய இயக்குனர் அனூப்பையோ வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இதை எங்கள் அளவில் வைத்துக்

    கொள்ளலாம். எங்கள் தந்தைகளையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம்.

    இதனால் காயப்பட்டதாக உணரும் அன்பான அனைத்துத் தமிழ் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ படங்கள் மூலமாக யாரையும்

    காயப்படுத்த நினைத்ததில்லை. இது உண்மையில் ஒரு தவறான புரிதல். உங்களில் சிலர் எங்களை மட்டுமல்லாமல் எங்களது குடும்பத்தையும் சேர்த்து வன்மத்துடன் திட்டி, மிரட்டி,

    அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன். இவ்வாறு துல்கர் சல்மான் கூறியுள்ளார்.

    பிரபாகரன் குறித்து சர்ச்சை
    பிரபாகரன் குறித்து சர்ச்சை
        Posted in இலங்கை செய்திகள்

        பிரபகாரன் போல யாரும் இல்லை – மக்கள் கொதிப்பு பேட்டி – video

        https://www.youtube.com/watch?v=BC114_XDT3s