Tag: பாராளுமன்ற உறுப்பினர்
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கள் குழு கூட்டத்தின் பின்னர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக்க ராஜபக்ஷ ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான முரண்பாடு தொடர்பில்
அங்கிருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய கோட்டை பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற விரும்புவதாக நேற்று (05) பிற்பகல் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,
பாராளுமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்
மஹிந்தானந்த அளுத்கம, தனது தந்தையை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்சவின் மகன் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற
குணதிலக்க ராஜபக்ஷ
உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாக்குமூலத்தின் பின்னர் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
Featured
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு பெண்ணுக்கு அழைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு பெண்ணுக்கு அழைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு தொடர்பில் பெண் ஒருவர் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவுக்கு அழைக்கப்படவுள்ளார்.
இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறையைச் சேர்ந்த லலந்தி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு அழைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று (01) அறிவித்துள்ளார்.
குறித்த பெண், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தொடர்பில் கருத்து பதிவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.














