Tag: பாடகர் செல்லப்பா
பாடகர் செல்லப்பா பிறந்த நாள்
பாடகர் செல்லப்பா பிறந்த நாள்
பாடகர் செல்லப்பா பிறந்த நாள் ,உலக மக்கள் பாசறை பானர் தேனிசை செல்லப்பாவின் 83 வது பிறந்த நாளை கொண்டாடிவருகின்றனர் .
தனது மதுர குரலினால் பாட ஆரம்பித்து மக்கள் விடுதலைக்கு தனது மதுர குரல் ஊடாக பாடி வளம் சேர்த்தவர் .
அவ்வாறான தேனிசை செல்லப்பா அவர்களின் வீரமிகு அகவை நாள் இன்றாகும் .
தமிழீழ பாடகரான தேனிசை செல்லப்பா
தமிழீழ விடுதலை அமைப்பை கட்டியமைத்து ,மக்கள் விடுதலைக்கு போராட்டத்தை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன், இந்தியாவில் தங்கி இருந்த கால பகுதியில் ,

ஐயா செல்லப்பா தொடர்பாக அறிகிறார் ,அதனை அடுத்து தமது போராளி தளபதிகள் ஊடக அணுகி, அவரை எமது இயக்கத்தின் பாடகராக அறிமுகம் செய்கின்றனர் .
அன்றில் இருந்து இன்றுவரை எதுவித சமரசமும் இன்றி ,ஐயா ஈழ தமிழ் விடியலுக்கு தனது குரலை வழங்கி உயிர் கொடுத்து வருகிறார் .
தளராத மதுக்குரல் தேனிசை செல்லப்பா
ஈழ மக்களுக்கு தளராத குரல் ஊடாக வீரம் ஊட்டி வந்த ஐயா செல்லப்பாவுக்கு ,விடுதலை புலிகளினால் பாசறை பானர் ,தேனிசை செல்லப்பா என்கின்ற உயர் கவுரவுத்துடன் அவரை அழைக்கின்றனர் .
அன்றில் இருந்து தமிழ் மக்கள் நெஞ்சங்களில் செல்லப்பா ,தேனிசை செல்லப்பாவாக நெஞ்சங்களில் உறைவிடம் ஆகி விட்டார் .
அவ்வாறு செல்லப்பா மீதும் அம் மக்கள் அளவு கடந்த பாசத்தை வைத்துள்ளனர் .

லண்டனில் செல்லப்பா பாட அழுத மக்கள்
தடைகள் விலக்க பட்டு செல்லப்பா முதன் முதலாக லண்டன் வருகை தந்தார் ,.பல இடங்களில் லண்டனில் இசை கச்சேரி நடத்த பட்டது .
அப்பொழுது அரங்கம் நிறைந்த அந்த மண்டபத்தில் செல்லப்பா அவர்கள் உயிர் கொடுத்து பாடி கொண்டிருக்கும் பொழுது ,அவர் பாட அழுத மக்கள் நினைவுகள் இன்றுவரை என் நினைவில் உள்ளது .
அந்த மக்கள் அழுகின்ற காட்சியை காணொளி பிடித்து வெளியிட்டு இருந்தேன் .
இது தேனிசை செல்லப்பா மீது மக்கள் கொண்டிருந்த அளவு கடந்த நேசத்தின் சாட்சியாக உள்ளது .
அந்த அரங்கத்தில் இளங்கோ செல்லப்பா இசை அமைக்க ,தேனிசை செல்லப்பா ,மற்றும் இளங்கோ செல்லப்பா மனைவி ஆகியோர் பாடினர் .
வரலாற்றில் அழியாத இடம் பிடித்து சாதித்து ,சாதனையாளனாக நிற்கும் தேனிசை செல்லப்பா மக்களினால் கொண்டாட படுவார் .அவர் நினைவுகள் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் தமிழரோடு நிலைத்து நிற்கும் .
அவ்வாறான அந்த மாசற்ற புனித மகனின் பிறந்த நாளில் எதிரி இணையமும் அவரை நீடூழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறது .
ஆக்கம் – வன்னி -மைந்தன் –
Featured
தேனிசை செல்லப்பா
தேனிசை செல்லப்பா
காலத்தால் அழியாத காவியன்
கரிகால தேசத்தின் பாடகன்
நெஞ்சுக்குள் நிற்கின்ற முதல்வன்
நேயத்தை வீசும் பண்பன்
தடை நூறு வீழ்ந்தும்
தளராது நின்றவன்
தாயகம் பாடியே
தன் தாகம் தீர்த்தவன்
உனக்கும் எனக்கும் உன்னத உறவு -நீ
உயிருக்கு உயிரானாய் எங்களின் நிலவு
கண்ணீராய் போனதே எங்கள் கனவு
காணாமல் போனதே எங்கள் புலவு
ஆறாமல் துடிக்குதே நெஞ்சம்
ஐயா உந்தன் பாடலே தஞ்சம்
நீ தானே தருகிறாய் வீரம்
நினைக்கிறோம் ஈழம் கொஞ்சம் கொஞ்சம்
நீ வேண்டும் நீ வேண்டும் செல்லப்பா
நிலம் மீளும் நீ பாட வேண்டும்
நான் எழுத நீ பாட வேண்டும் – இழிந்த
நாவும் கொஞ்சம் மாற வேண்டும்
உன் அகவை நூறுக்குள் – ஈழம்
உயிர் பெற வேண்டும்
உயிர் உள்ளவரை
உலக தமிழ் வாழ நீ பாட வேண்டும் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-04-2023
































