Posted in இலங்கை செய்திகள்

விடுதியில் தங்கிய பளை மாணவி -சடலமாக மீட்பு

விடுதியில் தங்கிய பளை மாணவி -சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக

மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.

உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக

கலைப்பீட இரண்டாம் வருட மாணவி என தெரியவந்துள்ளது.

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக

விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Posted in Uncategorized

    கிளிநொச்சி ,பளை ,விஸ்மடு பகுதியில் சிறிதரன் எம்பி நிவாரண உதவி photo

    கிளிநொச்சி ,பளை ,விஸ்மடு பகுதியில் சிறிதரன் எம்பி நிவாரண உதவி photo

    கிளிநொச்சியில் 750 குடும்பங்களுக்கு கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியம் உதவி!
    நாட்டில் தற்பொழுது அமுலில் இருக்கும் பயணத்தடை காரணமாக வறிய மக்கள் கடும் சிரமத்தை

    எதிர்நோக்கி உள்ளனர்.
    பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    மக்களின் வறுமையை போக்கும் விதமாக புலம்பெயர் உறவுகள் தனிப்பட்ட ரீதியாகவும், ஊர்சங்கங்களின் ஊடாகவும், நிறுவனங்களின் ஊடாகவும் பல விதமாக உதவி வருகின்றனர்.

    அந்த ரீதியில், கனடாவில் பல காலமாக தமிழ் மக்களின் பெரும் ஆதரவுடன் இயங்கி வரும் மின்னல் செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு 11 லட்சம் பெறுமதியான உலர் உணவு பொருட்களை நிவாரணமாக கிளிநொச்சி மக்களுக்கு வழங்கி உள்ளது.

    இதனை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னிலையில் DS அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்படுகிறது.

    மேலும் பல மாவட்டங்களில் செந்தில் குமரனின் நிவாரன உதவி தொடர இருப்பதாக அறியப்படுகிறது…

      Posted in Uncategorized

      பளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் மரணம் – லொறி சாரதி தப்பி ஓட்டம்

      பளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் மரணம் – லொறி சாரதி தப்பி ஓட்டம்

      பளை பகுதியில் கடந்த தினம் இரவு 9.30 மணியளவில் நடந்த பாரிய விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்

      கார்,மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது

      காரில் பயணித்த தந்தை ,மற்றும் அவரது 11 மற்றும் 14 வயது மகன்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்

      கார் பலத்த சேதமடைந்துள்ளது ,விபத்தினை ஏற்படுத்திய லொறி சாரதி அங்கிருந்து தப்பி

      ஓடியுள்ளார் ,சாரதிகளின் அலட்சி போக்கின் காரணமாக நாள்தோறும் நாடு தழுவிய ரீதியில் நால்வர் இவ்விதம் விபத்துக்களில் பலியாகி வருகின்றனர்

      இந்த உயிர்பலிகளை தடுக்க முடியாது சிங்கள காவல்துறை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        பளை மத்திய கல்லூரி மாணவன் மாயம் -தேடும் பொலிஸ்

        பளை மத்திய கல்லூரி மாணவன் மாயம் -தேடும் பொலிஸ்

        கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி கற்று வந்த முள்ளியாடியை சேர்ந்த


        அனோச் எனும் மாணவன் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ளார்

        2109 ஆண்டு கா ,பொ ,சா ,பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில்

        திடீரென இவர் காணாமல் போயுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

          உறவினர்கள் வீடுகளிலும் இவரை காணவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர் .


          மகனை காணாத துயரில் குடும்பத்தினர் கண்ணீரில் தவிக்கின்றனர் .

          இவரை யாரவது கண்ணுற்றால் அவர்களது குடும்பத்தினருக்கோ ,அல்லது அருகில் உள்ள காவல்துறையினருக்கோ ,


          அல்லது ஊடகங்களுக்கோ தெரிவிக்குமாறு மன்றாடி வேண்ட படுகிறது

          பளை மத்திய கல்லூரி
          பளை மத்திய கல்லூரி