Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது

இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது

இலங்கை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர்.

இந்த போர் களத்தில் வழமைக்கு மாறாக புத்த பிக்குகள் பெருமளவு கலந்து கொண்டுள்ளது ஆளும் கோட்டபாய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த போராட்டம் வீச்சம் பெற்றுள்ளது .

கோட்டாவை வீட்டுக்கு போ ,ராஜபக்சே குடும்பம் ஒழிக என்ற கொட்டு முரசு வாசகங்கள் அதிர்ந்த வண்ணம் உள்ளது.

இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது

இந்த அமைதியான போராட்டத்தை நடத்திய இருபத்தி ஒரு போராட்டக்காரர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .இதில் ஒரு புத்த பிக்கும் அடங்கும் என்பது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம்

கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம்

இலங்கை செய்திகள்

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே 73 தாவது பிறந்த நாளில் காலிமுக திடலில் புத்துயிர் பெறும் போராட்டம் .

கடந்த தினம் இரவு ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுக திடல் கோட்டா கோ காம திடலில் விஷேட கொட்டகைகள் அமைக்க பட்டு மக்கள் கோட்டபாய ராஜபக்சே 73 தாவது பிறந்தநாளுக்கு அதிர்ச்சிகர பரிசாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அந்த போராட்ட களத்தில் உள்ள மக்கள் சிலர் கருத்துரைத்துள்ளனர்.

கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம்

இந்த கோட்டபாய ராஜபக்சே அரசாங்கத்தை நாம் துரத்தியடித்து புதியவரை இந்த நாட்டுக்கு நியமிக்க வேண்டும் என அந்தமக்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்.

இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம் காரணமாக நாடு மீள செயல் இழக்கும் நிலக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது.

தொடரும் இந்த போராட்டம் காரணமாக மீளவும் பலத்த அவமானத்தை சந்தித்த வண்ணம் ராஜபக்சே குடும்பம் நாட்டை விட்டு தப்பி ஓடும் நிலை ஏற்படும் என போராட்டக்கார்கள் ஆவசேமாக முழங்கி வருகின்றனர்

இதன் எதிர் திசை செயல் நோக்கு காலிமுக திடல் கோட்டா கோ காம போராட்டம் உச்சம் பெற போவதை எடுத்துரைக்கிறது .