இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது
இலங்கை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர்.
இந்த போர் களத்தில் வழமைக்கு மாறாக புத்த பிக்குகள் பெருமளவு கலந்து கொண்டுள்ளது ஆளும் கோட்டபாய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த போராட்டம் வீச்சம் பெற்றுள்ளது .
கோட்டாவை வீட்டுக்கு போ ,ராஜபக்சே குடும்பம் ஒழிக என்ற கொட்டு முரசு வாசகங்கள் அதிர்ந்த வண்ணம் உள்ளது.
இந்த அமைதியான போராட்டத்தை நடத்திய இருபத்தி ஒரு போராட்டக்காரர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .இதில் ஒரு புத்த பிக்கும் அடங்கும் என்பது குறிப்பிட தக்கது