மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்
Posted in இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் ,மாகாண சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில், மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்று கூறினார்.

தேர்தலில் எதிர்க்கட்சி தோற்கடிக்கப்படும்

அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி தோற்கடிக்கப்படும் என்று அவர் கூறினார்.

பட்ஜெட் விவாதத்தின் போது அவர் இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள்

“மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்து பேச்சு நடந்து வருகிறது. ஆம், நாங்கள் தேர்தலை நடத்துவோம். எதிர்க்கட்சி முழுமையாக தோற்கடிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலக்கெடு இன்றுடன் நிறைவு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலக்கெடு இன்றுடன் நிறைவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலக்கெடு இன்றுடன் நிறைவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலக்கெடு இன்றுடன் நிறைவு 2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு இன்று (06) நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிட்ட 8361 வேட்பாளர்களில் 1985 பேர் மட்டுமே அந்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.எல்ஏ.ரத்நாயக்க குறிப்பிட்டார்.

குறித்த காலத்திற்குள் உரிய அறிக்கைகளை வழங்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் உள்ளுராட்சி சபை தேர்தலை விரைந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு ,ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 74 ஆவது பிரிவின் கீழ் அது குற்றமாகும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை விளம்பரப்படுத்தும் அடையாளங்கள், புகைப்படங்களுடன் கூடிய ஸ்டிக்கர்கள், கொடிகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கு அனைத்து பொலிஸ் அதிகார பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அவசர சோதனைகளை மேற்கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,041 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த முறைப்பாடுகளில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 2,947 முறைப்பாடுகளும் வன்முறைச் செயல்கள் தொடர்பாக 25 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளமையினால், எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை தேவைக்கேற்றவாறு மூடுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.