Tag: சமாதானத்திற்காகவே
சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா
சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா
சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா ராஜபக்ஷ மீளவும் இனவாதத்தை காக்கி இருக்கிறார்.
ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய பொழுது சமாதானம் நாட்டு நிலவுவதற்காகவும் இலங்கை ஐக்கியப்பட்டு இலங்கையாக வாழ்வதற்காகவும் இந்த போரை தான் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் மறு தரப்பு அழிக்கப்படத்தான் வேண்டும் என்கிறார் அவர்.
தமிழன் வெல்ல வேண்டுமாக இருந்தால்
ஆகவே அவரது கூற்றின்படி அது சரியாக இப்பொழுது இருக்கலாம். அதேபோன்று நாளை தமிழன் வெல்ல வேண்டுமாக இருந்தால் நீங்களும் அழிக்கப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
இன்று தமிழர் வீழ்த்தப்பட்டதாக கூறும் இந்த மகிழ்ச்சி நாளைக்கு உங்களுக்கு திருப்பி நடந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.
இலங்கையுடன் சேர்ந்திருந்து ,தமிழகத்தை அழித்த நாடுகள் இன்று போரில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.
வீழ்ந்த இனம் தமிழினம் நாளை எழுந்து நடக்கும் அப்பொழுது உங்கள் தேசம் விழுந்து கிடக்கும்.
காப்பார் யாரும் இன்றி கண் துடைப்பார் யாருமின்றி .விழுந்து அழுகின்ற பொழுது .உங்கள் வீரத்தின் விலாசங்கள் அப்பொழுது சந்தி சிரிக்கும்.
தமிழரை அடக்கியாள நினைக்கும் ,இனவாதம்
இனவாதத்தை காக்கி ஒரு இனமான விடுதலையை நசுக்கி .ஒருங்கிணைந்த நாட்டுக்குள் .ஒன்றுபட்ட வாழ துடிக்கும் தமிழரை அடக்கியாள நினைக்கும் ,இனவாதம் தோற்றுப் போகும் என்பதை வருங்காலங்கள் பறைசாற்றும் .
தமிழன் எழுந்து நடக்கின்ற எதிர்காலம் அவன் கண்ணெதிரே மிளிரும் .
அவர்களுடைய அசுர வளர்ச்சி கண்டு சிங்கள தேசம் தலை குனியும் நிலை ஏற்படும்.
சிங்கள தேசம் உங்களுக்கு எதிராக நின்று குரல் கொடுக்கும்
தமிழன் வீரமுள்ளவன் என்பதையும் ,மானமுள்ளவன் என்பதையும் ,அமைதியாக கடந்து சென்றான் என்கின்ற வரலாறுகள் மீளவும் உங்களை தட்டி நிமிர்த்தி கேள்வி கேட்கும் .
சிங்கள தேசம் உங்களுக்கு எதிராக நின்று குரல் கொடுக்கும் ,என்பதை மறந்துவிடாதீர்கள் இனவாதிகளே இனஅழிப்பு நாயகர்களே.
- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்

- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது

- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்

- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு

- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசு

- முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியது

- tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன

- பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு

- அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை

- 13 வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என CoPF உறுப்பினர் கோரிக்கை

- லோக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கினர்

- குடிநீர் ஆலை சட்டவிரோத மதுபானத் தொழிற்சாலையாக மாறியது 18575 புட்டிகள் பறிமுதல்










