ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

சட்டவிரோதமான செயற்பாடுகளை விடுத்து முறையாக தேர்தலை நடத்துங்கள்

சட்டவிரோதமான செயற்பாடுகளை விடுத்து முறையாக தேர்தலை நடத்துங்கள்

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், பணமில்லை எனக் கூறி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டாலும், சுற்றறிக்கைகள் மூலம் அரசியல் கைக்கூலிகளை

நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை தமக்கு விருப்பமானவாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (06) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

இந்த சுற்றறிக்கையின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை ஒருங்கிணைக்க, ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க, ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம்

புதிய சபைகளை ஏற்படுத்தாமல் அரசியல் அடியாட்கள் மூலம் உள்ளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சட்டவிரோதமான செயற்பாடுகளை விடுத்து முறையாக தேர்தலை நடத்துங்கள்

அத்துடன் நீதித்துறைசாரார்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனவும், பாராளுமன்றத்தில் எவருக்கும் 50 சதவீத பெரும்பான்மை இல்லை எனவும் தெரிவித்திருந்ததாகவும், சபையில்

எதிர்க்கட்சித் தலைவர், பிரதமருக்கு சவால் விடுத்து தேர்தலொன்று நடத்தினால் 2/3 அல்லது 5/6 ஆக இருந்தாலும் தம்மால் பெருன்பான்மையை எடுத்துக் காட்டலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதிபதிகளை விருந்துபசாரத்துக்கு அழைத்து, இது போன்ற நீதி நியாயமான நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டிய நிலையில், விருந்துபசார நிகழ்ச்சிகளை நடத்துவது தார்மீகமல்ல என்றும், சுதந்திர தீர்ப்புகளுக்கு இது இடையூறாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறும், இதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான கூடிய ஒத்துழைப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்குகிறது

அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்குகிறது

நமது நாடு வளமான நாடாக இருந்தாலும், தற்போது வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாகவும், இந்த வங்குரோத்தில் இருந்து மீள்வதற்கு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குப் பதிலாக தற்போதைய அரசாங்கம்

பொருளாதாரத்தை சுருக்கி வருவதாகவும், வட்டி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் வியாபாரங்களையும் அரசாங்கம் முடக்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாடு இவ்வாறான நிலையில் இருக்கும் போது தற்போதைய அரசாங்கம் பல்வேறு சட்டதிட்டங்கள் ஊடாக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறிவருவதாகவும், தற்சமயம் உண்மையை மக்களிடம் கொண்டு செல்லும்

சுதந்திர ஊடக நிறுவனங்கள் கூட அடக்குமுறைக்குட்படுத்த சட்டங்களைக் கொண்டு வருவதாகவும், அச்சட்டங்களின் ஊடாக தம்மை விமர்சிக்கும் ஊடக நிறுவனங்களை ஒடுக்க முயற்சித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை ஒடுக்குகிறது

புதிய சட்டங்கள் மூலம் மக்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தவும் தயாராகி வருவதாகவும், இந்த சட்டமூலங்கள் மூலம் மக்களுக்கு அதிகபட்ச இடையூறுகளை பிரயோகிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டை வீழ்ந்த இடத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்காத இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களை ஒடுக்கும் செயற்பாடுகளை

மேற்கொண்டு வருவதாகவும் இந்நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

அரலகங்வில தம்மின்ன பகுதியில் உள்ள மட்பாண்ட உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (02) ஆராயச் சென்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ல் சம்பவம் தொடர்பில் சஜித்தின் சந்தேகங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ல் சம்பவம் தொடர்பில் சஜித்தின் சந்தேகங்கள்


எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் மூலம் நமது கடற்பரப்பில் அதிக அளவு இரசாயனங்கள் கலந்ததால் சுற்றுச்சூழலுக்கும் மீனவர்களுக்கும் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதற்கு முன் நிவ் டயமன்ட் விபத்து இடம் பெற்றதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு

பிறகு கடற்ப்பரப்பை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இந்நிகழ்வுகளை பார்க்கும் போது இதில் ஒரு சதி நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

உலக நாடுகள் பசுமைப் பொருளாதாரம், நீலப் பொருளாதாரம் குறித்து பேசினாலும், நமது நாட்டில் அது வெறும் வார்த்தைகளில் மட்டும்தான் இருப்பதாகவும், அமைச்சுக்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் இது மேலும் தெளிவாகுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

கோட்டாபய ஜனாதிபதி அன்று செயற்பட்டது போன்று எந்த மாற்றமும் இன்றி தற்போதைய ஜனாதிபதியும் செயற்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், நிவ் டயமன்ட் சம்பவத்திற்குப் பிறகு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை யாது என தான் கேள்வி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் அவ்வாறானதொன்றிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் தெளிவான நோக்கம் தனக்கு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் சம்பவம் தொடர்பில் சஜித்தின் சந்தேகங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ல், நிவ் டயமன்ட் ஆகிய இரு துயர சம்பவங்களில் இருந்தும் இந்த அரசாங்கம் இன்னும் பாடம் கற்கவில்லை எனவும், இந்த முறையற்ற போக்கால் நாடு பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் கசிவு இருப்பது முதற்கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை அந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதித்த தரப்பினர் யார் என்பது தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலகில் மிக உயர்தரத்திலான சேவைகளைக் கொண்ட துறைமுகம் எங்களிடம் காணப்பட்டாலும் இந்த விபத்தின் போது, அதைத் தடுக்கத் தேவையான உபகரணங்கள் எங்களிடம் இருக்கவில்லை எனவும், இந்த அரசாங்கம் கப்பலை காப்பாற்ற முயற்சித்ததாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய இந்த விவாதத்தை நிறுத்த பாரிய சதி நடந்ததாகவும், தாம் கப்பல் தரப்பு சார்பில் பேசவில்லை எனவும், நாட்டு மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் தரப்பினர் சார்பாகவே பேசுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீபற்றியதால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இன்று (10) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் நோன்புப் பெருநாள் வாழ்த்து

எதிர்க்கட்சித் தலைவர் நோன்புப் பெருநாள் வாழ்த்து

நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் மூலம் இறைவனுக்கும் அடியானுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்கி அதன் மூலம் உயர்ந்த மனித நற்பண்புகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களின் மதிப்பை எடுத்துரைப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

பரஸ்பர நல்லிணக்கத்துடனும், மனிதாபிமான நெருக்கத்துடனும் நாம் நடந்து கொண்டால்,உலகம் இதனைவிட மிகவும் அமைதியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் நோன்புப் பெருநாள் வாழ்த்து

பரோபகார அடிப்படையில் சமூகத்தில் வசதியுள்ளோர் இல்லாதோர் இடைவெளியைக் குறைத்து அனைவருக்கும் சகோதரத்துவ கரங்களை நீட்டும் ஒரு வாய்ப்பாகவும் இந்த பெருநாளைக் குறிப்பிடலாம்.

நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்க இவ்வாறான கலாசார,சமய நிகழ்வுகள் மூலம் கிடைக்கின்ற ஆதரவு அளப்பரியது.குறிப்பாக பல்லாண்டு காலம் இந்நாட்டு சகோதர முஸ்லிம் மக்கள் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், இலங்கையின் அடையாளத்தில் முஸ்லிம் சகோதரர்களும் பங்குதாரர்களாவர்.

அதனை நாம் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூர்வதுடன்,மனித குலத்தின் முன்னேற்றத்திற்கும் நல்லிணக்கப் பாதைக்கும் துணிச்சலுடன் உழைக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம் என்று தெரிவித்துள்ளார்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றாக எழுவோம் சஜித்

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றாக எழுவோம் சஜித்


அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றாக எழுவோம் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் .

மக்களுக்கு பயந்த, மக்கள் அபிப்பிராயத்தை ஊசலாட்டும் திறமையற்ற தற்போதைய அரசாங்கம் 24 மணிநேரமும் 365 நாட்களுமாக தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ளும்

அச்சத்தினால் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வழங்காமல் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அழுத்தங்களை பிரயோகித்தும் தேர்தலை சீர்குலைக்க முயற்சிப்பது மக்கள் பயத்திற்கே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றாக எழுவோம் சஜித்

அவ்வாறே, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டம் போன்ற சட்டங்களின் ஊடாகமக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்தி மக்களை அடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் கீழ், ஊடகங்களை அடக்கி, மக்கள் தங்கள் உரிமைகளுக்காக முன்நிற்கும் போது அவர்களை பயங்கரவாதிகள் என்று அழைத்து

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை கூட மீறும் வகையில் அரசாங்கம் செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறு மக்களின் ஜனநாயக உரிமைகள், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள்மீறப்படுவதால், இன, மத, சாதி பேதமின்றி சிவில் அமைப்புக்களும், பிரஜைகளும் இதற்கு எதிராக ஒன்றாகப் போராட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

எதிர்க் கட்சித்தலைவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

எதிர்க் கட்சித்தலைவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

தமிழ், சிங்கள புத்தாண்டு சமூக உறவுகளை மேம்படுத்துவதற்கும் பழைய பழக்கவழக்கங்களைத் தொடரவும், ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும் உதவும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு வாழ்த்துச் செயதியிலேயே எதிர்க்கட்சித் தலைவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்க் கட்சித்தலைவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை கொண்டிருந்த நம் நாடு, தற்போது கண்ணீர் வடிக்கும் நாடாக மாறியதோடு, புத்தாண்டை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் கொண்டாடும் வாய்ப்பு கூட பல ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்டது.எமது நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைமைகளுக்கு அசாதாரணமான சவால்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த இருள் சூழ்ந்த காலம் முடிந்து,நமது நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களும் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் வளமான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உறுதியுடன் அணிதிரள்வதற்கான வலிமையைப் பெற பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் .

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார்

ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார்

நாட்டு மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை அரசாங்கம் மீறி நாட்டின் பக்கச்சார்பற்ற நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகளையும்

அரசியல் சதித்திட்டங்களினூடாக அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கும், நாட்டின் உயர் நீதிமன்றத்திற்கும், நிதி அமைச்சுக்கும் மற்றும் அரச அச்சகத்திற்கும் கூட இடையூறுகளை ஏற்படுத்தி தேர்தலை சீர்குலைக்கும் செயலிலும் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு ஆதரவு

தெரிவித்து துணைபோகும் விதமாக தேர்தலை சீர்குலைக்கும் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித தலைவர் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் முறைமை மாற்றமொன்று வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தாலும், தற்போது முறைமை மாற்றம் ஒன்று நிகழாது ராஜபக்சர்களை பாதுகாக்கும் திட்டமொன்றே இயங்கி வருவதாக தெரிவித்த

ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார்

எதிர்க்கட்சித்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிக்கப்பட்ட வீடுகளுக்கு நட்டஈடு வழங்குதல், மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் மற்றும் முழு பதவிக் காலம் முடியும் வரை பொதுத்

தேர்தலுக்கு செல்லாதிருத்தல் என்ற காரணங்களுக்காக மாத்திரமே இந்த ஜனாதிபதி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.

பொரளை குப்பியாவத்த பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No posts found.
சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

விமானி ஆக ஆசைப்பட்டேன்: எதிர்கட்சித் தலைவ

விமானி ஆக ஆசைப்பட்டேன்: எதிர்கட்சித் தலைவர்

அரசியலுக்கு வரவில்லை என்றால் தான் ஒரு விமானி ஆக வேண்டும் என ஆசைப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பயணிகளின் உயிருக்கு விமானி பொறுப்பாளியாக இருப்பது போல் அரசாங்கத்திற்கும் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது . அரசாங்கம் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக அதை வலுவற்றதாக்கிக்

கொண்டு இருக்கிறது என கடந்த சனிக்கிழமை கொலன்னாவையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது அவர் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் கூட அப்போதிருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்து ஆலோசித்து IMF இன் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தியிருந்தார்.

ஆனால் ஒருபோதும் மக்கள் மீது சுமையை ஏற்றும் திட்டங்கள் முன்மொழிவுகளுக்கு அவர் உடன்படவில்லை.

அப்போது இலங்கையின் சொந்த திட்டங்களை IMF விடம் முன்வைக்க அவரால் முடிந்தது. ஆனால் இப்போது IMF முன்மொழியும் திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதுதான் இப்போதைய அரசாங்கத்திற்கும் அப்போதைய அரசாங்கத்திற்கும் இருக்கும் வித்தியாசம் என அவர் தெரிவித்தார்.

No posts found.
ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு பைத்தியம் சாடுகிறார் சஜித்

ஜனாதிபதிக்கு பைத்தியம் சாடுகிறார் சஜித்

ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் எனவும்,தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மேலும், தேர்தல் இல்லை என்றால்,இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது எவ்வாறு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேசத்தில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியும் அறிவிக்கப்பட்டு, தேர்தலை நடத்தும் திகதியும் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசி கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார்.

இந்நாட்டில் ஜனநாயகத்தை சீர்குலைத்து தேர்தலை நிறுத்துவதற்கு
பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர் வேறு யாருமல்ல, ஜனாதிபதியே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No posts found.
ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

சுதந்திர தினத்தை புறக்கணித்த சஜித்

சுதந்திர தினத்தை புறக்கணித்த சஜித்

இலங்கையின் 75 தாவது சுதந்திர தினத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா புறக்கணித்துள்ளார் .

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறை விலைவாசி அதிகரிப்பு ,மற்றும் மக்களின் துயர் நிலைகளை அடுத்து இந்த புறக்கணிப்பை சஜித் செய்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

Posted in இலங்கை செய்திகள்

எம்பிகளுக்கு சொகுசு வீடு எதற்கு சொகுசு வீட்டில் வாழும் சஜித் கேள்வி

எம்பிகளுக்கு சொகுசு வீடு எதற்கு சொகுசு வீட்டில் வாழும் சஜித் கேள்வி

இலங்கையில் சிறுவர்கள் போசாக்கு இன்றி காணப்படு பொழுது ,எம்பிக்கள் ஆடம்பர சொகுசு வீடுகளில் வாழ்வது ஏன் என்ற கேள்வியை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா எழுப்பியுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் இலங்கையின் ஜனாதிபதியாக. சஜித் வருவார் என எதிர் பார்க்க படும் வேளையில் ,
இவ்வாறான கேள்விகளை அவர் எழுப்பி வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது.

    சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பு
    Posted in இலங்கை செய்திகள்

    சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பு

    சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பு

    இலங்கையில் எதிர்கட்சி தலைவர், சஜித் பிரேமதாசாவுடன் ,இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் யூலி சங் சந்தித்து பேசியுள்ளார் .

    அமெரிக்கா தூதுவர், சஜித் பிரேமதசாவுக்கு இடையிலான ,சந்திப்பின் பொழுது,நாட்டில் இடம் பெறும் கைதுகள் ,கடத்தல்கள் ,மற்றும் அடக்குமுறை தொடர்பில் பேச பட்டுள்ளது .

    மேலும் ஆளும் அரசு ,போராட்ட காரர்களை ,கைது செய்திடும் நடவடிக்கை தொடர்பிலும் ,சஜித் பிரேமதாசா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளாக தெரிவிக்க பட்டுள்ளது.

    எனினும் இது தவிர வேறுஉள்ளக அரசிய ,நிலைப் பாடுகள் எதிர்கால நடவடிக்கைகள், அதன்பொழுது ,தமது ஆதரவு நிலை ,என்பது தொடர்பாகவும் சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பில் பேச பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.

      Posted in இலங்கை செய்திகள்

      புதிய ஜனாதிபதி மீதான எதிர்ப்பார்ப்பு 12 மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது சஜித்

      புதிய ஜனாதிபதி மீதான எதிர்ப்பார்ப்பு 12 மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது சஜித்

      பதவிப்பிரமாணம் செய்த நாள் இருந்த எதிர்பார்ப்பு, பன்னிரெண்டு மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது. சந்தர்ப்பவாத அரசியல் எங்களிடம் இல்லை.

      ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயல்பட முடியுமான எதிர்பார்ப்பை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால்

      நழுவவிடப்பட்டதாகவும், சந்தர்ப்பவாத அரசியல் தம்மிடம் இல்லை எனவும், அரசாங்கத்துடன் இணையாமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு

      எதிர்க்கட்சியில் இருந்த வன்னம் கூடிய ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

      ஜனநாயக ரீதியாக சுதந்திரமாக போராடிய போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் தற்போது புதிய கதைகளை கூறி வருவதாகவும், உண்மையில்

      வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டது மகிந்த ராஜபக்ஸவின் பிரியாவிடை “அலரி மாளிகை நிகழ்வின்” போதே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

      வன்முறைக்கும் தீ வைப்புச் சம்பவங்களுக்கும் தான் முற்றாக எதிரானவன் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஒன்பதாம் திகதியான அன்றைய நாள் முழுவதும் நடந்தது பயங்கரவாதமே என்றும் அவர் தெரிவித்தார்.

      புதிய ஜனாதிபதி மீதான எதிர்ப்பார்ப்பு 12 மணித்தியாலங்களுக்குள் முடிந்துவிட்டது சஜித்

      சந்தர்ப்பவாத அரசியல் தவளைகளுக்கு நிச்சயம் மக்கள் நீதிமன்றத்தில் நஷ்டஈடு வழங்க வேண்டிவரும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அதிலிருந்து யாரும் விடுபட முடியாது எனவும் தெரிவித்தார்.

      புதிய பயணமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி அழைப்பு விடுத்த போது, அது குறித்து இன்னும் நேர்மறையாகச் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில், நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் காலிமுகத்திடல்

      போராட்டக்காரர்கள் மீது கோழைத்தனமான தாக்குதலைத் தொடுத்த வன்னம் அரசாங்கத்தின் ஆட்சி முறை இயல்பை நாட்டுக்கு வெளிப்படுத்தியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

      அது ஒரு மூர்க்கத்தனமான முட்டாள்தனம் எனவும், இதனால் ஏற்பட்ட அழிவை
      எந்த நாகரீகமுள்ள ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

        Posted in இலங்கை செய்திகள்

        ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா

        ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா

        ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின் வழமையான மிருகத்தனம் மற்றும் உத்தியோகபூர்வ வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய “ராஜபக்ஸ நிழல்

        அரசாங்கம்” இன்று காலை காலிமுகத்திடல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

        அதனைப் செய்தியிட வந்த பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கவீனமான போர்வீரர்களும் அந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு

        முகங்கொடுக்க நேரிட்டதோடு இந்த தாக்குதல் உண்மையான அர்த்தத்திலயே கொடூரமான உத்தியோகபூர்வ வன்முறையாகும்.

        புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒரு நாள் கழிவதற்குள் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலைத் தொடுத்துள்ளதுடன் தனது எதிர்கால ஆட்சியின் தன்மை என்பதை இதன் மூலம் உணர்த்த முற்பட்டுள்ளார் என்றால், இவ்வாறான அட்டூழியங்களுக்கு

        அப்பாற்பட்ட பலமிக்க அரசாங்கங்கள் மக்கள் சக்தியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

        அந்தந்த சிவில் போராட்டத்தின் போராளிகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள் அனைத்தையும் மீள கையளித்து கொண்டிருக்கும் போதும், அதற்குள்,

        பாதுகாப்புப் படையினர் விடியற்காலையில் புகுந்து, “உயர் உத்தரவுப்படி” இந்த கோழைத்தனமான

        தாக்குதலை நடத்தியுள்ளனர். ராஜபக்ஸ அரசை வீட்டுக்கு அனுப்ப முற்படுவதற்கு எதிராக வெறியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது

        எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது அவ்வாறு இல்லை என்று நினைக்க எந்த காரணமும் இல்லை.

        ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா

        போராடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் நாட்டு மக்களுக்குள்ள ஜனநாயக உரிமையை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம்.

        அரச சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தாமல், வன்முறைக்குப் பதிலாக நாகரீகமான போராட்டங்களுக்காக நாங்கள் தொடர்ந்து முன் நிற்கிறோம்.

        ஒரு புறம் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுத்தது காலிமுகத்திடல் உட்பட இந்நாட்டு மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவினாலாகும்.

        எனினும் இந்த போராட்டம் அவரை ஜனாதிபதியாவதற்கு சிறிதும் ஊக்கமளிக்கவில்லை என்றாலும், அதன் மூலம் அவர் அதிகாரத்தைப் பெற்றார்.

        தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 12 மணித்தியாலங்கள் செல்வதற்கு முன் அதனை ஜனாதிபதி மறந்து விட்டார் என்பது வருத்தமளிக்கிறது என்பதோடு,

        ஒருவேளை ராஜபக்ஸ ஆட்சி கவிழ்க்கப்பட்டமைக்கு போராட்டம் காரணமாக அமைந்ததன் கோபமாக கூட இருக்கலாம்.

        முன்னைய ராஜபக்ஸ அரசாங்கம் நாகரீக நாடாக எழுந்து நிற்பதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் அழித்தொழித்தது என்பதோடு, அதுவே தற்போதைய “ராஜபக்ஸ நிழல் அரசாங்கத்தில்” நடக்க ஆரம்பித்துள்ளது.

        ராஜபக்ஸ வெறியை விடவும் தீவிர வெறியாக மாறியிருப்பது தான் வித்தியாசமாக உள்ளது.

        இந்த நாடு எவ்வளவு பாதாளப் படுகுழியில் வீழ்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்வதற்குப் பதிலாக, தனது அதிகாரத் திட்டத்திற்காக மட்டுமே செயல்படும் இந்த

        “ராஜ்பக்ஸவின் நிழல் அரசாங்கம்” மக்களின் அடிப்படை உரிமையான எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையையும், சுதந்திரத்தையும் மீறியுள்ளதோடு, ஊடகவியலாளர்களுக்கு உரித்தான சுதந்திரத்தையும் கொடூரமான முறையில் மீறியுள்ளது.

        ஆயுதம் ஏந்தியவர்கள், அங்கவீனர்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்திய உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அனைத்து

        அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதோடு, இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உத்தரவிட்ட அனைவருக்கும் எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

        இந்த வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான தாக்குதலால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்பதோடு, தாக்குதலின் உள்ளார்ந்த வெறுப்புடன் அதைக்

        கண்டிக்கிறோம். நமது நாட்டை கோத்திர நிலைக்கு தள்ள முயலும் “ராஜபக்ஸ நிழல் அரசுக்கு” எதிராக முழு நாடும் எழுந்து நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசுக்கு வலியுறுத்துகிறோம்!

        சஜித் பிரேமதாஸ – எதிர்க்கட்சி தலைவர்

          Posted in இலங்கை செய்திகள்

          சஜித் அணியில் இருந்து ஒருவர் ராஜினமா ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்

          சஜித் அணியில் இருந்து ஒருவர் ராஜினமா ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்

          சஜித் பிரேமதாசா அணியில் இருந்து ஒருவர் தனது பதவியை ராஜினமா செய்துளளர் .

          இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில் இவர் பதவி விலகியுள்ளார் .

          ரணில் விக்கிரமசிங்காவினால் நியமிக்க படும்அமைச்சரவை அமைச்சு பதவிகளில் இவருக்கு ஒன்று வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

          பேரம் பேச்சுக்களின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகி இருந்தார்.

          அவ்விதம் சஜித் பிரேமதாசா அணியில் இருந்து 14 ஓட்டுக்கள் ரணிலுக்கு சென்றிருந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இந்த ராஜினமா இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

            கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast
            Posted in இலங்கை செய்திகள்

            சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிறார்

            சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிறார்

            இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாச இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகிறார் .

            இவரை ஜனாதிபதியாகி நியமிக்குமாறு எதிர் கட்சிகள் பல பரிந்துரை செய்துள்ளதால் இவரே ஜனாதிபதியாகும் நிலை உருவாக்கம் பெறுகிறது எனப்படுகிறது .

            அவ்வாறு இல்லாவிடினும் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் சஜித் மகத்தான வெற்றியை தட்டி செல்வார் என எதிர்பார்க்க படுகிறது.

            பிரதமராக டலஸ் அழகப்பெரும நியமிக்க படலாம் என்கின்ற உள்ளக கசிவு தகவல்கள் வெளியாகியுள்ளன.


            ஜனாதிபதி கோட்டாவுக்கு அடுத்து மக்களினால் அதிக வாக்கு பெற்றவராக சஜித் உள்ளார் .

            எனவே அவரே ஜனாதிபதியாக்க வேண்டும் எனப்து மக்கள் பொது நிலைப்பாடாகவும் உள்ளது குறிப்பிட தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              ஊடகவியலாளர்களை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் சஜித்

              ஊடகவியலாளர்களை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் சஜித்

              பிரதமர் ரணிலின் இல்லத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்களை இலக்காக் கொண்டு தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்*!

              பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக அரச வன்முறையைப் பயன்படுத்தி சிரச ஊடகவியலாளர்கள் நால்வரை இலக்காக்

              கொண்டு அவர்கள் மீது பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் நடத்திய கொடூரமான மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

              அது மட்டுமன்றி, தாக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைக் கூட விரட்டி விரட்டி தாக்கும் அளவுக்கு பாதுகாப்புப் படையினர் மனிதாபிமானமற்றவர்களாக மாறிவிட்டனர்.

              ஊடகவியலாளர்களை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் சஜித்

              மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வதற்காக நாகரீகமான ஊடகப் பயன்பாட்டில் ஈடுபட்ட மற்றும் அது தொடர்பாக மக்களின்

              நன்மதிப்பைப் பெற்ற ஊடகவியலாளர்கள் குழுவொன்று குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டமை அதிகாரம் வாய்ந்த ஜனாதிபதியை நான்கு சுவர்களுக்குள்

              முடக்கி வீட்டுக்கு அனுப்பிய மக்கள் போராட்டத்திலிருந்து பிரதமர் இன்னும் பாடம் கற்கவில்லை என்பதையே இந்தக் கோழைத்தனமான தாக்குதல் உணர்த்துகிறது.

              மக்கள் இறையாண்மை மக்களிடமே உள்ளது என்பதை முன்னெப்போதையும் விட அதிகமாக நிரூபிக்கப்படும் இச்சூழ்நிலையிலும் கூட இவ்வளவு

              கொடூரமாக நடந்துகொள்ள பாதுகாப்புப் படையினருக்கு பனிப்புரை வழங்கியது யார் என்பதும், சிரச ஊடகவியலாளர்களையே குறிவைத்து

              தாக்குதலை நடத்தும் தேவை யாருக்குள்ளது என்ற விடயத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

              உடனடியாக பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.

              எந்தவொரு சக்திவாய்ந்த அதிகாரமும் மக்கள் சக்தியால் தோற்கடிக்கப்படும் என்பதை சட்டவிரோத பிரதமர் அறிந்திருக்க


              வேண்டும் என்பதோடு,நாடு அராஜக நிலைக்கு செல்ல வழிவகுக்காமல் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

                Posted in இலங்கை செய்திகள்

                சஜித் பிரேமதாசா அணியில் இருந்து ரணில் பக்கம் 25 பேர் தப்பி ஓட பேச்சு

                சஜித் பிரேமதாசா அணியில் இருந்து ரணில் பக்கம் 25 பேர் தப்பி ஓட பேச்சு

                ஐக்கிய மக்கள் சக்தி சஜித் அணியில் இருந்து ரணில் கட்சியுடன் இணைந்து செயல்பட இருபத்தி ஐந்து பேர்
                தயார் நிலையில் உள்ளனர்

                இவ்வாறு செல்வோர் அனைவரும் ரணில் அணியினர் என சஜித் அணியினர் தெரிவித்துள்ளனர்

                சஜித்தின் வெற்றியை தடுத்து ,அந்த கட்சியை உடைக்கும் நிலையில் ரணில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட
                தக்கது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  உடைக்க படும் சஜித் அணி – கைமாறும் பணம்

                  உடைக்க படும் சஜித் அணி – கைமாறும் பணம்

                  சஜித் அணியின் பலத்தை சிதைத்து அவர் ஜனாதிபதியாக வருவதை தடுக்கும் முயற்சியில் அவரது முக்கிய


                  உறுப்பினர்களுக்கு விலை பேச படுகிறது

                  இந்த விலை பேச்சின் வாயிலாக ஆறுபேர் சுயாதீனமாக செயல் பட உள்ளதாக அறிவித்துள்ளனர்

                    Posted in Uncategorized

                    சஜித்தை தூக்கும் முயற்சியில் ரணில் கோட்டா சதி

                    சஜித்தை தூக்கும் முயற்சியில் ரணில் கோட்டா சதி

                    எதிர்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரேமதாசாவை , அந்த தலைவர் பத்வியில் இருந்து ,அவரை துரத்தி புதியவரை நியமிக்கும் நகர்வில் ரணில்,கோட்டாபய ஈடுபட்டுள்ளனர்

                    இவர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் பொழுது இந்த விடயம் பேசப்பட்டுள்ளது

                    இதனை அடுத்து தற்போது தனக்கு மிரட்டல் அழைப்புக்கள் விடுக்க பட்டுள்ளதாக சஜித் தெரிவித்துள்ளார்


                    ரணில் இதுவரை ஜனாதிபதியாக துடித்த பொழுதும் அது முடியவில்லை ,தனக்கு பின் ஆசனத்தில் இருந்தவர் நாட்டின் தலைவராக வருவதை ரணில் விரும்பவில்லை

                    அதனாலேயே அவரது வெற்றியை மகிந்தாவுடன் இணைந்து தடுத்து கோட்டாவை வெல்ல வைத்தார் ,


                    அதன் பின்னர் மற்றுமொரு சதியில் ரணில் ஈடுபட்டு வருவதாக உள்ளக கசிவுகள் இடித்து கூறுகின்றன