Tag: கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
கொரோனா வைரஸ் மீள வேகமாக பரவி வருவதால் , அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,
இந்த கொடிய கொரனோ நோயானது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்து பல மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் பலியாகி இருந்தனர் .
அவ்வாறான கொரனோ வைரஸ் தற்போது வேகமெடுப்பதால் ,மக்கள் மீளவும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த படுகிறது .
பொது இடங்களில் பயணிக்கும் மக்கள் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முகமாக இந்த முகக்கவசம் அணிந்து செல்கின்றனர் .
அமெரிக்காவில் மட்டும் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த இந்த நோயினால் ஆறு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதே டிசம்பர் மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தாக்குதலில் பத்து ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
எனவே மக்களே இந்த கொரனோ நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள இப்பொழுதே தயாராகி கொள்ளுங்கள் .
பொது இடங்களில் பயணிப்பவர்கள் யாக்கிரதையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
பூங்காவில் புதிய வகை கொரோனா தொற்றால் சிங்கம் பாதிப்பு
பூங்காவில் புதிய வகை கொரோனா தொற்றால் சிங்கம் பாதிப்பு
கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஏப்ரல் மாதம் 20-ந்தேதி முதல் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய வகை கொரோனா தொற்றால் சிங்கம் பாதிப்பு
சிங்கம்
சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் மனிதர்களிடையே வேகமாக பரவ தொடங்கியது. விலங்குகளையும் விட்டு வைக்காமல் முதலில் அமெரிக்கா
நியூயார்க் சிட்டியில் உள்ள டிரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் புலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மே மாதம் முதல் முறையாக
ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ்
கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தால் சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஏப்ரல் மாதம் 20-ந்தேதி முதல் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 26-ந்தேதி பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கு தொடர் இருமல் இருப்பது ஊழியர்கள் மூலம் தெரியவந்தது. அதன் பின்னர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் அன்றைய தினமே உடல் சோர்வுடன்
காணப்பட்ட சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பரிசோதனை முடிவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 வயது உடைய நீலா என்ற பெண் சிங்கம் இறந்துவிட்டது.
கவிதா (23), புவனா (19) என்ற 2 பெண் சிங்கங்களின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்து வருகிறது.
இதையும் படியுங்கள்… வண்டலூர் உயிரியல் பூங்காவில் மனித குரங்கு குட்டி ஈன்றது
இதற்கிடையே பூங்காவில் உள்ள 4 வங்கப்புலிகள் மற்றும் 3 சிங்கங்களின் சளி மாதிரிகள் எடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய
நிறுவனத்திற்கு மருத்துவ குழுவினர் அனுப்பி வைத்தனர். இதில் 19 வயது உடைய ராகவ் என்ற ஆண் சிங்கம் சார்ஸ் கோவிட்-2, டிஸ்டெம்பர் என்ற புதிய வகை கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் அந்த சிங்கத்தை தனிமைப்படுத்தி தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த புதிய வகை தொற்று பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு பரவாமல் இருப்பதற்காக பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த புதிய வகை சார்ஸ் கோவிட்-2 டிஸ்டெம்பர் தொற்று வயது முதிர்ந்த விலங்குகளை விட, இளம் வயதுடைய விலங்குகளை அதிக அளவில்
தாக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு இந்த புதிய வகை தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் குழுவினர் பூங்கா நிர்வாகத்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயிலை விட்டு வெளியேற மறுக்கும் கைதிகள்
ஜெயிலை விட்டு வெளியேற மறுக்கும் கைதிகள்
மராட்டியத்தில் பரோலில் வெளியே விட்டாலும், 26 கைதிகள் ஜெயிலை விட்டு வெளியே செல்ல மறுத்து உள்ளனா்.
மராட்டியத்தில் உள்ள ஜெயில்களில் அதிகளவில் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். கொரோனா பரவலை அடுத்து, ஜெயில்களில் நெரிசலை குறைக்க அரசு முடிவு செய்து, தகுதி
உள்ள கைதிகளை சிறைத்துறை பரோலில் அனுப்பி வைத்தது. இந்தநிலையில் அரசு விட்டாலும், நாங்கள் ஜெயிலை விட்டு நகர மாட்டோம் என சில கைதிகள் அடம்பிடித்தது தெரியவந்து உள்ளது.
மாநிலம் முழுவதும் சுமார் 26 கைதிகள் பரோலில் செல்ல வாய்ப்பு இருந்தும், ஜெயிலிலேயே இருப்பது தெரியவந்து உள்ளது.
கொரோனா வைரஸ்
இதில் நவிமும்பை தலோஜா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஒடிசாவை சேர்ந்த கைதி ஒருவர், வெளியே போனால் குடும்பத்திற்கு பாரமாக இருந்துவிடுவோம் என நினைத்து வீடு திரும்ப மறுத்துவருவதாக ஜெயில் சூப்பிரண்டு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “பரோலில் வீட்டுக்கு போக சொன்னால், ஒடிசாவை சேர்ந்த கைதி ஜெயிலில் வேலை பார்த்து பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என கூறுகிறார்’’ என்றார்.
இதேபோல ஒருசில கைதிகள் வெளியே சென்றால் வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுவோம் என பயந்தும், தண்டனை காலத்தை முடித்துவிட்டு வெளியே செல்லலாம் என சிலரும் பரோலில் செல்லாமல் உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.
மேலும் இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நாங்கள் கைதிகளுக்கு எல்லா மருத்துவ வசதிகளையும் வழங்குகிறோம். கைதிகளுக்கு என தனியாக கொரோனா சிகிச்சை மையம்
வைத்து உள்ளோம். எனவே தொற்று காலத்தில் ஜெயிலில் இருப்பது பாதுகாப்பானது என கைதிகள் நினைக்கின்றனர்’’ என்றார்.
கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் – அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் – அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் சுவாச வைரஸ் என்று அறியப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட இது இதய தசையை நேரடியாக தாக்கும் என தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் இதயத்தை தாக்கும் – அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் சுவாச வைரஸ் என்று அறியப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட இது இதய தசையை நேரடியாக தாக்கும் என தெரிய வந்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர் டாக்டர் சீன் பின்னி கூறும்போது, “இதய நோயால்
பாதிக்கப்பட்டவர் களின் இதயம், வைரசால் சேதம் அடையும் ஆபத்து உள்ளது. மேலும், முந்தைய நோய்கள் இல்லாத கொரோனா
நோயாளிகளுக்கும் இதய சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன” என குறிப்பிட்டார்.
அமெரிக்க இதய மருத்துவ கல்லூரி பத்திரிகை நடத்திய ஆய்விலும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிற கொரோனா நோயாளிகளுக்கு 25-
30 சதவீதம் பேருக்கு இதயத்தில் பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்
இலங்கையில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்
இலங்கையில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் வகையைச் சேர்ந்தது என
சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டொக்டர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார்.
இந்த நுண்ணுயிர் முன்னர் பரவியதைவிட வித்தியாசமான வைரசாக உள்ளது. இது ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக செயலாளர் கூறினார்.
இந்த வைரஸ் கந்தக்காட்டில் பரவிய வைரஸ் வகை அல்ல என்பதை பல்கலைக்கழக ஆய்வு அறிக்கையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்ததாக செயலாளர் நேற்று தெரிவித்தார்.
இந்த வைரஸ் வீரியத்தைக் கொண்டது. இது தீவிரமாக மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டது. இதனால்தான் குறுகிய கால்திற்குள் பெரும் எண்ணிக்கையிலானோர் வைரஸ் தொற்றுக்குள்ளாகினர் என்றும் அவர் தெரிவித்தார்.
நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் (Department of Immunology and Molecular Medicine and Allergy> Immunology and Cell Biology Unit of
University) பிரிவைச் சேர்ந்த, பேராசிரியர் நீலிகா மலவிகே தலைமையில், வைத்தியர் சந்திம ஜீவந்தர, வைத்தியர் டெஸ்னி
ஜயதிலக, வைத்தியர் தினுக ஆரியரத்ன, லக்சிறி கோமஸ், தியனாத் ரணசிங்க ஆகியோரினால் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்ரீ ஜயவர்தனபுர பலலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மருத்துவம் தொடர்பான ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சந்தீம ஜிவன்தர இது தொடர்பாக தெரிவிக்கையில், மினுவங்கொடை
மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட 16 வைரசு மாதிரிகளில் 13 வைரஸ் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அவை அனைத்தும் வெவ் வேறு இடங்களில் பெறப்பட்டாலும் இவை அனைத்தும் ஒரே மாதிரியானவை. B1 42 சார்ஸ் வகைக்கு உட்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவை. B 1, 6 1 4 G வைரஸ் இனத்தைச் சேர்ந்தவை என எண்ணுகின்றோம். இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் என நம்புகின்றோம்.
B 1, B 2, B 4 ஆகியவற்றில் B 1 னே ( பீ ஒன்றே) ஆரம்பத்தில் ஜரோப்பிய நாடுகளில் அதிகாமாக பரவியுள்ளது. இந்த வைரஸ் தற்பொழுது டென்மார்க்கிலும் சுவிடனிலும் காணப்படுகின்றது. மற்றவர்களுக்கு தொற்றக்கூடிய வாயப்புகள் அதிகம். இது தொடர்பில் எமக்கு சரியான தெளிவு இன்னும் இல்லை.
பல்வேறு மட்டத்தில் இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த தொற்று ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் என்று கூறமுடியாது இருப்பினும் விசேடமாக வேறு நோய் உள்ளவர்களை இந்த வைரஸ் வெகுவாக பாதிக்கக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் மார்ச் மாதம் தொடக்கம் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வைரஸ்கள் காணப்பட்டன. இவை அனைத்திலும் பார்க்க இது வேறுபட்டது. இதற்கு முன்னர் இலங்கையில் இந்த புதிய வைரஸ் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும்
என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிப்படைய செய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
முதலில் நுரையீரலில் நுழையும் கொரோனா வைரஸ் இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறிகளுக்கு
பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமான நிலைக்கு சென்று விடும்.
கொரோனா பற்றிய ஆய்வுகளில் அந்த வைரஸ் நுரையீரலை தவிர இதயம், நரம்பு மண்டலம் உள்ளிட்ட உறுப்புகளையும் பாதிப்படைய செய்கிறது என்பது தெரிய வந்தது.
மேலும் தலைவலி, குழப்பமான மனநிலை, வாந்தி போன்றவையும் கொரோனா
வைரசின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளின் அடுத்தடுத்த ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஆய்வில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு தலைவலி, குழப்பம் மற்றும் மயக்கம் ஏற்படுகின்றன. இது
கொரோனா வைரஸ் மூளைக்கு நேரடியாக செல்வதன் விளைவாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நோய் எதிர்ப்பு நிபுணர் அகிகோ இவாசாகி தலைமையிலான ஆய்வறிக்கையில், “வைரஸ் மூளைக்குள் கொந்தளிக்க முடிகிறது
என்றும், மூளைக்கு அருகே ஆக்சிஜன் செல்களை பாதிக்கிறது என்றும்
தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இதன் பாதிப்பு இன்னும் தெளிவாக தெரியவில்லை” என்று கூறப்பட்டு இருக்கிறது போதுமாம் இது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
இந்த ஆராயச்சி பூர்வாங்க கட்டத்தில்தான் இன்னும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சான்பிரான்சிஸ்கோவில் கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் துறை தலைவர் ஆண்ட்ரூ ஜோசப்சன் கூறும்போது,
“மூளையில் வைரஸ் நேரடி ஈடுபாடு உள்ளதா, இல்லையா என்பதை புரிந்து கொள்வது அசாதாரணமானது. ஆனாலும் அந்த
ஆய்வறிக்கை மதிப்பாய்வுக்கு வரும்வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.
கொரோனா வைரஸ் தடுக்க இரண்டு வருடங்கள் ஆகும் என அறிவிப்பு
கொரோனா வைரஸ் தடுக்க இரண்டு வருடங்கள் ஆகும் என அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் இரு வருடங்கள்
செல்லுமென எதிர்பார்ப்தாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோசு அதானோம் தெரிவித்துள்ளார்.
1918 காலப்பகுதியில் ஸ்பானிய வைரஸ் என்ற பேரில் உலக முழுவதுமாக
பரவிய வைரஸ் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சுமார் 2 வருட காலம் தேவைப்பட்டதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது உலக நாடுகளிலிடமிருக்கும் மருத்து
வசதிகளுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை 2
வருடங்களுக்கு முன்பாகவே கட்டுப்படுத்தும் இயலுமை உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் – வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு
கொரோனா வைரஸ் – வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு
இழப்பீடு வழங்கப்படும் என்று இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
பணியகத்தின் காப்புறுதி நிதியத்தின் மூலம் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொரோனா நோயினால் வெளிநாடுகளில் பணியாற்றிய 23 தொழிலாளர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
கொரோனா வைரஸ் தகவல்களை மூடிமறைப்பதாக கடற்படை மீது குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் தகவல்களை மூடிமறைப்பதாக கடற்படை மீது குற்றச்சாட்டு
கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் கடற்படை வீரர்கள் தொடர்பான தகவல்களை சுகாதார அதிகாரிகளுக்கு வழங்குவதை இலங்கை கடற்படையினர் தவிர்த்து வருவதாக சில
ஊடகங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுத்துள்ளது..
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்பில் இலங்கை கடற்படையின் முதலாவது கடற்படை வீரர் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அடையாளங் காணப்பட்டதிலிருந்து வெலிசர
கடற்படை தளத்தில் கடையாற்றிய அனைத்து கடற்படை வீரர்களையும் பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில் கடற்படை தனது நடவடிக்கைகளை விஸ்தரித்தது.
இலங்கை கடற்படைக்குள் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான உண்மை நிலைமையை கடற்படை மூடிமறைப்பதாக சில இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களினால்
தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக மறுப்பதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன
தெரிவித்தார். இலங்கை கடற்படை உள்ளிட்ட முப்படை வீரர்கள் மத்தியில் ஏற்படும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கள் மற்றும் அது
தொடர்பில் முன்னெடுக்கப்படும் பரிசோதனை தொடர்பான தகவல்களை வழங்குவதில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிப்பதாக அவர் தெரிவித்தார்.
கடற்படைவீரர்களுடன் தொடர்பைப் பேணியோர்களை கண்டறியும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
இவர்களில் பிசிஆர் பரிசோதனைகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என அடையாளம் காணப்படுபவர்கள்
சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
எவ்வாறாயினும்இ வெலிசர கடற்படை தள வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாம் நபர் அடையாளம் காணப்பட்டதிலிருந்துஇ பொது சுகாதார சேவைகள்
பிரதி பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் பபா பலிஹவதனஇ சுகாதார அமைச்சின் தொற்று
நோய்களுக்கான வைத்திய நிபுணர் டாக்டர் திலங்க பதிரன மற்றும் கம்பஹா பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின்
அதிகாரி ஆகியோரின் பரிந்துரைகளைக்கு அமைய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இலங்கை கடற்படை மேற்கொண்டது.
இலங்கை கடற்படைஇ கம்பஹா பிராந்திய சுகாதாரபணிப்பாளர் பணிமனையின் மருத்துவ ஆலோசனைகளை கோரியுள்ள
அதேவேளைஇ அரசாங்கத்தால் பயிற்சியளிக்கப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் கடற்படை தளத்தில் தங்கியிருந்து பணிகளை முன்னெடுத்தும் வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் கடற்படை வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளில் வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றும்
தொற்றுக்குள்ளாகாத கடற்படை வீரர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் கொரோனா வைரஸ் தொடர்பிலான ஜனாதிபதி செயலணிஇ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்இ
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகள் மற்றும் இலங்கை பொலிஸ்
ஆகியவற்றுக்கு இலங்கை கடற்படையினரால் சமர்ப்பிக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கடற்படைவீரர்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் பரிசோதனை செயல்முறை தொடர்பாக சுகாதார மற்றும் பொறுப்பான ஏனைய
அதிகாரிகளுடன் தொடர்புகளை பேணி தேவையான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையானது ஒரு பொறுப்புவாய்ந்த அரச நிறுவனம் என்ற வகையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் அரசாங்க பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அந்த
அடிப்படையில் கொரானா வைரஸினால் பாதிக்கப்படும் மற்றும் பரிசோதிக்கப்படும் கடற்படை வீரர்கள் தொடர்பிலான சகல தகவல்களையும் கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பிலான
ஜனாதிபதி செயலணிஇ பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக அலுவலகம்இ மாவட்ட பொது சுகாதார சேவைகள்
அலுவலகம் மற்றும் ஏனைய பொறுப்பான அரசஅலுவலகங்கள் ஆகியவற்றுக்கு சமர்பிக்க கடமைப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
நாட்டில் வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படையினார் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி
வருவதாக தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்னஇ எனவேஇ இலங்கை கடற்படை கொரோனா
வைரஸ் தொற்று தொடர்பான எந்த தகவலையும் மறைக்காது என சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு 771 பேர் பாதிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு 771 பேர் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு சிக்கி இதுவரை 771 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்
இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் சுமார் 300 பாதுகாப்பு படையினரும் உள்ளடங்குகிறது
தொடர்ந்து இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ளது

கொரோனா வைரஸ் – பின் போடப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்
கொரோனா வைரஸ் – பின் போடப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்
அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் அண்மைக் காலத்தில் துரிதமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துக்
கொண்டு, பலமாக காணப்பட்ட நிலையிலேயே அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பாதிப்பு ஏற்பட்டது.
எனினும், இலங்கை கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் மத்தியிலேயே இந்த பேரிடருக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு
வரை இடம்பெற்ற மோசமான ஆட்சி காரணமாக எமது கடன் சுமை 71% இதனால் அதிகரித்தது. ரூபாயின் பெறுமதி 30% இதனால் வீழ்ச்சியடைந்தது. பொருளாதார வளர்ச்சி வேகம் 2.7% வரை
குறைவடைந்தது. 2019 நவம்பரில் நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசாங்கமொன்றை அமைத்த போதிலும்,
எமக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமையினால், கடந்த அரசாங்கத்தின் மருந்து மற்றும் உர வழங்குனர்களுக்கு
நிலுவைப் பணத்தைச் செலுத்துவதற்கேனும் இடைக்கால கணக்கறிக்கையொன்ற நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையேற்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 150(3) ஆம் உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு கிடைக்கும் நிதி தொடர்பான ஏற்பாடுகள் மாத்திரமே ஆறுதலாக உள்ளது. இந்த அனைத்து பாதகமான
நிலைமைகளின் மத்தியிலேயே நாம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. கடந்த மார்ச் 11 ஆந் திகதி முதலாவது கொரோனா நோயாளி அடையாளங்
காணப்பட்டவுடன், நாம் நோயினை முன்னரே இனங்காணுதல், நோயாளிகளை வேறுபடுத்தி சிகிச்சையளித்தல், அபாயத்தை எதிர்நோக்கிய நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தல்,
நோயாளிகளுடன் பழகிய நபர்களைக் கண்டறிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற கட்டுப்பாட்டு முறைமைகளை அறிமுகப்படுத்தினோம். எமது வாழ்க்கையில் இவ்வாறானதொரு
நடவடிக்கையை ஒருபோதும் கண்டதில்லை. நோய் பரவுவதைத் தடுப்பதற்காக பல வாரங்கள் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியேற்பட்டது.
நாடு முழுவதும் தமது வீடுகளிலிருந்து வெளியேற முடியாத மக்களுக்கு உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான முறைமையொன்றைத்
தயாரிக்க வேண்டியேற்பட்டது. குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு உதவி வழங்க வேண்டியேற்பட்டது. நாட்டின்
உற்பத்திச் செயற்பாட்டை நடாத்திச் செல்வதற்காக விவசாயிகள், மரக்கறி விவசாயிகள் மற்றும் மீனவர்களின உற்பத்திகளைக்
கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டது. இந்த அனைத்தையும் ஒரே தடவையில் மிகவும் குறுகிய காலப்பகுதியில் ஒழுங்குபடுத்திக்
கொள்ள முடிந்தமை உண்மையில் முகாமைத்துவத்தின் பிரதிபலனாகும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை இன்று முழு உலகமும் ஏற்றுக்கொள்கிறது. ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பாக
தனித்துவமான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார். எமது அரசாங்கத்தின் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாட்தொகுதியினர் முழு உலகினதும் கவனத்தை
ஈர்த்துள்ளனர். நோயாளிகள் பழகிய நபர்களைக் கண்டறிவதில் எமது உளவுப் பிரிவு வெளிப்படுத்தியுள்ள திறமை, அர்ப்பணிப்பு
காரணமாகவும், தனிமைப்படுத்தல் செயற்பாட்டை மேற்கொண்டு செல்வதில் முப்படையினர் வெளிப்படுத்தியுள்ள வினைத்திறன் காரணமாகவும் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிசார் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலான அரச ஊழியர்களும் கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்தின்
வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கியுள்ளனர். இன்று கொரோனா வைரஸ் காரணமாக பாதுகாப்பற்றதாக மாறியுள்ள உலகில் எமது நாடு மிகவும் பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது. அழிக்கப்பட்ட
பொருளாதாரம், இயலுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்திற்கு இடையூறு விளைவிக்கின்ற, நாட்டின் மீது அன்பு
இல்லாத சந்தர்ப்பவாத எதிர்க்கட்சியொன்று இந்த நாட்டில் உள்ள நிலைமையிலேயே நாம் இவ்வாறான கட்டத்தை அடைந்துக் கொண்டோம்.
தனிமைப்படுத்தலுக்குச் செல்வதை நிராகரித்தவர்களை ஊக்குவித்தமை மூலம் எதிர்க்கட்சித்தலைவர் ஆரம்பத்திலிருந்தே கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்தினைச் சீர்குலைக்க
முயற்சித்தார். அதன் பின்பு, பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அரச நிதியை செலவிடுவதற்கு ஜனாதிபதிக்கு
அதிகாரம் இல்லை எனக் கூறி அவர்கள் சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து அரச சேவைகளையும் சீர்குலைக்க முயற்சித்தனர்.
புதிய பாராளுமன்றம் ஜூன் இரண்டாம் திகதிக்கு முன்னர் கூட வேண்டும் எனவும், பாராளுமன்றத் தேர்தலை அதற்கு முன்னர்
நடாத்த முடியாது எனவும், அதனால் பாராளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் இன்று அவர்கள் கூறி வருகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம் மூன்று வருடங்களுக்கு உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைத்தமையை நாம் அறிவோம். வழக்குகள் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கேனும் தேர்தலை
நடாத்துவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தமையினால் மாத்திரமே நீதிமன்றம் சென்று தேர்தலை குறிப்பான திகதியின்றி ஒத்திவைக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில்
முடிந்தது. 2017 ஆம் ஆண்டு மாகாண சபைகள் கலைக்கப்படுவதற்கு சில நாட்களே இருந்த சமயத்தில், மாகாண
சபைத் தேர்தல் நடாத்தப்படுவதைத் தடுப்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல் முறைமையை மாற்றியமைத்தது.
அந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் என சட்டமா அதிபர்
தெரிவித்தபோது, அவர்கள் பாராளுமன்றத்தின் நடைக்கூடத்தில் மேற்கொண்ட பேரம் மூலம் வாக்குகளுக்காக கொள்கைகளைக்
காட்டிக்கொடுத்து தேவையான பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர்.
அந்த இழிவான கொடுக்கல் வாங்கலின் பிரதிபலனாக 2017 ஆகஸ்ட் 25 ஆந் திகதி நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்
சட்டத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ சதவீதம் 40% ஆக காணப்பட்டதுடன், அதன் ஒரு மாதத்தின் பின்பு நிறைவேற்றப்பட்ட
மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ சதவீதம் 50% ஆக காணப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் மனுச் சமர்ப்பித்து,
பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பாராளுமன்றத் தேர்தலை ரத்துச் செய்த அரசியல் கட்சிகள் உள்ள உலகின் ஒரே ஜனநாயக நாடு இலங்கையாகும். தற்போதைய பாராளுமன்றத் தேர்தலை
ஒத்திவைப்பதற்கு இன்று மேற்கொள்ளும் முயற்சி அந்த இழிவான வரலாற்றின் ஒரு நீட்சியாகும். நாட்டில் எந்த சந்தர்ப்பத்திலாவது
பொது சமூக வாழ்வு மீண்டும் ஆரம்பமாக வேண்டியுள்ளது. எமது 25 நிர்வாக மாவட்டங்களில், பதினொரு மாவட்டங்களில் கொரோனா
வைரஸ் தொற்றுள்ள ஒருவரேனும் இல்லை. மேலும் ஏழு மாவட்டங்களில் தொற்றுடைய ஒருவர் அல்லது இருவரே
அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு மாவட்டங்களில் ஐந்திற்கும் ஏழுக்குமிடையிலான எண்ணிக்கையைக் கொண்ட
நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஐந்து மாவட்டங்களில் மாத்திரமே குறிப்பிடத்தக்களவான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் இரண்டாம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தல் நடாத்தப்படும் திகதி ஏப்ரல் 25 எனவும், புதிய
பாராளுமன்றம் முதலாவது கூடும் திகதி மே 14 எனவும் அறிவித்தார். அதன் பிறகு பத்து நாட்களின் பின்பு முதலாவது கொரோனா நோயாளி கண்டறியப்பட்ட சந்தர்ப்பத்தில் தேர்தல் நடாத்தப்படும்
திகதியை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படவில்லை. 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 24(3) ஆம் பிரிவுக்கு ஏற்ப,
ஜனாதிபதி குறிப்பிட்ட திகதியில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த முடியாவிடின், அதற்கு வேறொரு திகதியைக் குறிப்பதற்கான கடப்பாடு தேர்தல் ஆணைக்குழுவுக்கு காணப்படுகிறது.
திகதியொன்றைக் குறிப்பிடாது பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது. எதிர்காலத்தில் பல வாரங்களில் அல்லது பல
மாதங்களில் இடம்பெற முடியுமான அல்லது இடம்பெற முடியாத விடயங்கள் தொடர்பாக ஏற்படுத்திக்கொள்ளும் ஊகங்களின்
அடிப்படையில் கட்டாயமாகப் பின் பற்ற வேண்டிய சட்டரீதியான ஏற்பாடுகளை ஒதுக்கித்தள்ளி விட முடியாது.
தேர்தல் ஆணைக்குழு முதலில் 24(3) ஆம் பிரிவின் கீழ் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைப்பொறுப்பினை சட்டத்திற்கு
ஏற்புடையவாறு நிறைவேற்றி விட்டு, அதன் பின்பு கலந்துரையாட வேண்டிய விடயம் ஏதாவது இருப்பின், அது தொடர்பாக கவனஞ் செலுத்த வேண்டும்.
பிரதம அமைச்சர்
மஹிந்த ராஜபக்ஷ
கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்
கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்
நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள் கொண்டவர்கள் மற்றும்
நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவன் சந்தித்துவரும் முக்கியமான சவால்களில் ஒன்று வைரஸ்கள் மூலம் பரவும்
உயிர்கொல்லி நோய்கள். தற்போது மக்களை மிரட்டும் கொரோனா வைரஸ் நம்மைத் தாக்கிவிடாமல் தடுக்க ஒரு நாளில் பலமுறை கை
கழுவுவதுதான் மிகச்சிறந்த வழி என்கிறது மருத்துவ உலகம்.
இருப்பினும் நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள்
கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை இந்த வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்துஉள்ளது
என்கிறார்கள் மருத்துவர்கள். இவர்களில் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்கும்
வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தெளிவான புரிதல் இதுவரை இல்லாமல் இருந்தது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இறந்துபோன மற்றும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள்
மீதான ஒரு சமீபத்திய ஒரு ஆய்வில் நீரிழிவு நோய் உள்ளவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவது ஏன் என்பதற்கான
கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்
காரணத்தை கண்டுபிடித்துள்ளதாக லெய் பாங் தலைமையிலான சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வாளர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த நோயாளிகளில் பலருக்கு நீரிழிவு
மற்றும் பெருமூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் (Cerebrovascular diseases) இருந்தது கண்டறியப்பட்டது.
சீனாவில் நடந்த மற்றொரு ஆய்வில், கொரோனா வைரஸ் தாக்கிய 173 பேர்களில் சுமார் 41 நோயாளிகளுக்கு ரத்தக்கொதிப்பு
இருந்ததும், சுமார் 28 நோயாளிகளுக்கு நீரழிவு நோய் இருந்தது என்றும், 10 நோயாளி களுக்கு இதய நோய் இருந்தது என்றும், 4
நோயாளிகளுக்கு பெரு மூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.
இறுதியாக, மூன்றாவது ஆய்வில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுமார் 140 நோயாளிகளில், 42
பேருக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததும், 17 பேருக்கு நீரிழிவு நோய் இருந்ததும் கண்டறியப்பட்டது.
இந்த மூன்று ஆய்வுகளிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் அனைவரும் ஒரு வகை மருந்துகளை (angiotensin-

converting enzyme (ACE) inhibitors) எடுத்துக்கொண்டார்கள் என்பது கண்டறியப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, மனிதர்களைத் தாக்கும்
கொரோனா வைரஸ்கள் ஒருவகையான என்சைம் (angiotensin-converting enzyme 2 (ACE2) மூலமாகவே மனித உயிரணுக்களைத்
தாக்கி அவற்றினுள்ளே நுழைகின்றன என்றும், இந்த என்சைமை நுரையீரல், குடல், சிறுநீரகம் மற்றும் ரத்த நாளங்கள் ஆகிய
அனைத்து உடல் பாகங்களும் உற்பத்தி செய்கின்றன என்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
முக்கியமாக, இந்த என்சைம் செயல்பாட்டை தடை செய்யும் மருந்தை உட்கொள்ளும் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு
நோயாளிகளின் உடலில் இந்த என்சைம் உற்பத்தியானது மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோல ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உட்கொள்ளும் சில மருந்துகள் கொரோனா வைரஸ் மனித உயிரணுக்களுக்கு உள்ளே
நுழைய உதவும் என்சைம் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குகின்றன என்கிறது இந்த ஆய்வு. இது தவிர, நீரிழிவு
நோயாளிகளின் உடலில் உள்ள (ACE2) மரபணுவும் மாற்றங்களுக்கு உள்ளாகி என்சைம் (ACE2) உற்பத்தி அதிகமாகலாம் என்பதும் இங்கு
கவனிக்கத்தக்கது. அதனால், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்க வேண்டுமானால், நீரிழிவு
நோயாளிகள் தாங்கள் வழக்கமாக எடுக்கும் மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்து வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாமா
என்று மருத்துவர்களை ஆலோசித்து முடிவு செய்தால் கொரோனா வைரஸ் தாக்குதலை அவர்களால் தவிர்க்க முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கொரோனா வைரஸ்- எகிப்து கப்பலில் உணவு இல்லாமல் தவிக்கும் தமிழர்கள்
கொரோனா வைரஸ்- எகிப்து கப்பலில் உணவு இல்லாமல் தவிக்கும் தமிழர்கள்
எகிப்துக்கு சுற்றுலா சென்ற கோவை கிணத்துக்கடவை சேர்ந்த வனிதா ரங்கராஜ் உள்பட கொங்கு மண்டலத்தை சேர்ந்த 17 பேர் நைல் நதியில் கப்பலில் தவித்து வருகிறார்கள்.
கொரோனா வைரஸ்- எகிப்து கப்பலில் உணவு இல்லாமல் தவிக்கும் தமிழர்கள்
எகிப்து கப்பலில் தவிக்கும் வனிதா
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவில் சரணாலயம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர்
வனிதா ரங்கராஜ். இவரது கணவர் ரங்கராஜ். இவர்கள் வருடந்தோறும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.
அதன்படி கடந்த மாதம் வனிதா ரங்கராஜ் தனது கணவர் ரங்கராஜ் மற்றும் சென்னை, சேலத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 17 பேர்
சேலத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் 10 நாள் சுற்றுலாவாக கடந்த மாதம் 27-ந் தேதி எகிப்து நாட்டுக்கு சென்றனர்.
இந்நிலையில் எகிப்துக்கு சுற்றுலா சென்ற 17 பேர் நைல் நதியில் கப்பலில் தவித்து வருகிறார்கள்.
அங்கிருந்து வனிதா ரங்கராஜ் போனில் கூறியதாவது:
எகிப்து நாட்டில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு கடந்த 5-ந்தேதி நைல் நதியில் கப்பலில் சென்றோம். அந்த கப்பலில்
2 நாட்கள் தங்கிவிட்டு 7-ந்தேதி காலையில் வெளியே வர வேண்டும். அப்போது 6-ந்தேதி காலையில் திடீரென கப்பலில் இருந்த
தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவ குழுவினர் கப்பலில் பயணித்த அனைவரையும் பரிசோதனை செய்தனர். இதில் எங்களுடன் வந்த
என்ஜினீயர் உள்பட 33 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ்
இதையடுத்து அவர்கள் அனைவரும் எகிப்து நாட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்
. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாங்கள் சென்ற கப்பலை நைல் நதியிலேயே நிறுத்தி வைக்க எகிப்து அரசு உத்தரவிட்டது.
அத்துடன் அதில் இருந்து யாரும் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு கொரோனா வைரஸ் இல்லையே,
ஏன் எங்களை உள்ளே வைத்து இருக்கிறீர்கள் என்ற கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் நாங்கள் இருக்கும்
கப்பலில் உணவு சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே இருந்து வரும் உணவை மட்டுமே சாப்பிட
அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரட்தான் காலை உணவாக கொடுக்கப்படுகிறது. நாங்கள் அனைவருமே வயதானவர்கள்
என்பதால் அவர்கள் கொடுக்கும் உணவு எங்களுக்கு போதுமானதாக இல்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு கிடைக்காமல் தவித்து வருகிறோம்.
தற்போது நைல் நதி கரையில் உள்ள லக்சர் என்ற நகரத்தின் அருகே கப்பலில் தவித்து வருகிறோம். 15 நாட்கள் கப்பலிலேயே இருக்க
வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால் எங்களுக்கும், கொரோனா வைரஸ் தாக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்திய
அரசும், தமிழக அரசும் எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவாது தடுக்க நடவடிக்கை எடுக்க – கோட்டா உத்தரவு
கொரோனா வைரஸ் பரவாது தடுக்க நடவடிக்கை எடுக்க – கோட்டா உத்தரவு
கொரோனா வைரஸ் தொற்று நாட்டினுள் பரவாதவாறு தவிர்ப்பதற்கு உரிய விஞ்ஞானபூர்வமான முறைமை
ஒன்றை பின்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொரோனா ஒழிப்பு விசேட செயலணிக்கு பணிப்புரை விடுத்தார்.
அரசாங்கமும் சுகாதாரத்துறை நிபுணர்களும் ஆரம்பம் முதலே மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக
பிராந்தியத்தில் கொரோனா வைரசிற்கு வெற்றிகரமாக முகங்கொடுத்த நாடாக இலங்கை உள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்தும் இந்த நிலைமையை பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
கண்டறியுமாறும் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.
ஈரான், தென்கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது. அந் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை
தருகின்றவர்களை 14 நாட்களுக்கு நோய்த்தொற்று தடைகாப்பு செய்ய வேண்டும் என்று செயலணி, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயமற்ற நாடாக இலங்கையை தொடர்ந்தும் வைத்திருக்க முடியும் என்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
தற்போது முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் பல்வேறு வைத்தியசாலைகளில் சந்தேகத்திற்கிடமான
நோயாளிகள் வெற்றிகரமாக நோய்த்தொற்று தடைகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா
தொற்றுக்குள்ளான எந்தவொரு இலங்கையரும் நாட்டிற்குள் கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருகை
தருகின்றவர்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் இருக்குமானால் அதனை மறைத்துக் கொண்டிருக்காது
சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நோய்த் தொற்றுவதை தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களின் வாயிலாக
தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் நோய்த்தொற்று தடைகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியிருந்தால் அதற்குத்
தேவையான இடங்கள், வளவாளர்கள், வசதிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கு தயாராக இருக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீத்தா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர,
சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்
அணில் ஜாசிங்க ஆகியோரும் கொரோனா ஒழிப்பு விசேட செயலணியின் உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் ஆபத்து
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் ஆபத்து
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதாகவும், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் இது உலகம் முழுதும் பரவும் நிலை இல்லை என்றாலும், உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதால் அங்கு இது குறித்த கவலை எழுந்துள்ளது.
இருப்பினும் இந்த கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது சீனாவாகவே உள்ளது. அந்நாட்டில் இதுவரை 77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,600 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவுக்கு வெளியே சுமார் 30 நாடுகளில் 1200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 20 பேர் அதற்கு
பலியாகியுள்ளனர். இத்தாலியில் திங்களன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 உயர்ந்துள்ளது


















