மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

மட்டக்களப்பில் தலைவர் 71வைத்து பிறந்த நாள் கேக்க வெட்டி கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது .

மேற்படி காணொளி பகுதிகள் எமக்கு மட்டக்களப்பில் இருந்து கிடைக்க பெற்றுள்ளது .

வன்னி மைந்தன் எதிரி இணையம் தயாரித்த தலைவர் புதிய பிறந்த நாள் பாடல்கள் அங்கு ஒலிக்க விடப்பட்டு இந்த கேக் வெட்ட பட்டுள்ளது .

இந்த நிகழ்வு உணர்வு பூர்வமாக கொட்டு மழையிலும் கொண்டாடிய எங்கள் தேச தாய் தமிழ் உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் .

நன்றி துவா அண்ணா

மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake பிஸ்கட் ஸ்வீட்கேக்
Posted in சமையல் சமையல் cook

பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake

பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake

பிஸ்கட் ஸ்வீட் கேக் |mouth watering Sweet Cake recipe|How To Make Sweet Cake பிஸ்கட் ஸ்வீட்கேக் செய்வது எப்படி வாங்க இந்த காணொளியில் செய்முறையோடு பார்க்கலாம் .

பிஸ்கட் ஸ்வீட் கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள்.


டீ பிஸ்கட் 500g,
பால் 500 லிட்டர்(ml),


கொக்கோ பவுடர் 100g,
கார்ன் ஃப்ளார் 100g,
சீனி 50g,
வெண்ணிலா 1/2 T ஸ்பூன்.
கஸ்டர்ட் பவுடர் 3Tஸ்பூன்,

அகலமான பாத்திரம் ஒன்றில் பிஸ்கட்டுகளை பாலில் நனைத்து அடுக்கவும். வேறொரு பாத்திரத்தில் 1/2லிட்டர் பால், சோள மாவு 3T ஸ்பூன், கொக்கோ பவுடர் 4 ஸ்பூன், சீனி 3T.

ஸ்பூன், சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பில் வைத்து மூன்று நிமிடம் சூடாக்கிய பின் எடுத்து அந்தக் கலவையை அடுக்கி வைத்திருக்கும் பிஸ்கட்டுகளுக்கு மேல்

ஊற்றி பரவலாக பூசி பின்னர் அதற்கு மேல் இன்னும் ஒரு வரிசை பிஸ்கட்டுகளை அடுக்க வேண்டும்.

அதன் பிறகு வேறொரு பாத்திரத்தில் சீனி 1/4 கப், கஸ்டட் பவுடர் 1/4 கப்,தண்ணீர் 1/4 கப்,

வெண்ணிலா 1/2டீஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறவும். ( பீட் பண்ணவும் ) பின்னர் அடுக்கி வைத்திருக்கும்

பிஸ்கட்டுக்கும் மேலே அதையும் ஊற்றி சமமாக பூசி 1 மணித்தியாலத்திற்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

ஒரு மணித்தியாலம் சென்று வெளியில் எடுத்து அதனை சமமான துண்டுகளாக வெட்டி சாக்லேட் அல்லது

ஸ்ட்ரோபரி வைத்து அலங்கரிக்கலாம். இப்பொழுது அழகான, சுவையான பிஸ்கட் ஸ்வீட் ரெடி வாங்க சாப்பிடலாம்.

How To Make Sweet Cake

For Biscuit Sweet Cake
Necessary materials.
Tea Biscuits 500g,
Milk 500 liters (ml),
Cocoa powder 100g,
Corn Flour 100g,
Sugar 50g,
vanilla 1/2 T spoon.
Custard powder 3 tsp,

Dip the biscuits in milk and layer them in a wide pan. In another vessel 1/2 liter milk, corn flour 3t spoon, cocoa powder 4 spoon, sugar 3t. spoon, mix it well and heat it in the oven for three minutes Take the mixture and layer it over the biscuits

Add 1/2 tsp of vanilla and mix well. (Beat) Then pour it over the layered biscuits and coat evenly and refrigerate for 1 hour.


Take it out after an hour and cut it into equal pieces and decorate it with chocolate or strawberry. Now you can buy beautiful and delicious biscuits sweet ready to eat.

வீடியோ பார்க்க

கேக் கொண்டு சென்ற பெண்ணுக்கும் விற்றவருக்கும் விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

கேக் கொண்டு சென்ற பெண்ணுக்கும் விற்றவருக்கும் விளக்கமறியல்

கேக் கொண்டு சென்ற பெண்ணுக்கும் விற்றவருக்கும் விளக்கமறியல்

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும்

இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் கேக்கை விற்பனை செய்த பேக்கரியில் கடமையாற்றி வந்த ஆண் உட்பட இருவரையும் எதிர்வரும்

12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், பெண்ணை சட்டவைத்தியரிடம் உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் புதன்கிழமை (29) உத்தரவிட்டார்.

நாவற்குடாவில் வசித்துவரும் பாலிப்போடி உதயகுமாரி என்ற பெண் சம்பவதினமான கடந்த 26ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளையிட்டு நகரத்திலுள்ள பேக்கரி ஒன்றில்

பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கி அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வே.பிரபாகரன் அண்ணா தலைவர் என பெயரை எழுதி வாங்கி கொண்டு அங்கிருந்து கொக்கட்டிச்சோலைக்கு பஸ்வண்டியில் பயணித்துள்ளார்.

கேக் கொண்டு சென்ற பெண்ணுக்கும் விற்றவருக்கும் விளக்கமறியல்

அங்கு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை நோக்கி வீதியால் நடந்து சென்றவர், தலைவரின் பிறந்தநாள் கேக் வெட்ட போறேன் கடையை ஏன் பூட்ட வில்லை? தலைவரை காட்டி கொடுத்து விட்டார்கள், என சத்தமிட்டு சென்ற

நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து புலனாய்வு பிரிவினர் அவரை பின் தொடாந்து சென்று, துயிலும் இல்லம் சென்ற நிலையில் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இவரது கணவர் விடுதலைப் புலிகளில் இருந்து உயிரிழந்துள்ளதாகவும், புலிகளின் மட்டக்களப்பு படை

தளபதி றமேஷ் மச்சாள் முறையான உறவினர் எனவும் தற்போது தனிமையில் நாவற்குடாவில் வசித்து வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த கேக்கை விற்பனை செய்த மட்டு நகரிலுள்ள பேக்கரியில் கடமையாற்றிவரும் கொக்கட்டிச்சோலையைச் சோந்த 35 வயதுடைய பரமேஸ்வரன் முனீஸ்வரன் என்பவரை கைது செய்து

விசாரணையில் குறித்த பேக்கரிக்கு சென்ற பெண் பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கி அதில் பிரபாகரன் பெயர் எழுதிதருமாறு கேட்டுக் கொண்டதற்கு இனங்க பெயரை பொறித்து கேக்கை விற்பனை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண்னை தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட முயற்சித்த குற்றச்சாட்டிலும் அவருக்கு உதவிபுரிந்த குற்றச்சாட்டில் பேக்கரியில்

கடமையாறிவந்து கேக்விற்பனை செய்தவர் உட்பட இருவருக்கும் எதிராக பயங்கரவாத தடைச் சடத்தின்கீழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து 29ம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பீற்றர்

போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இருவரையும் எதிர்வரும் டிசம்பர் 12 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் பெண்ணை

மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாரா என கண்டறிய சட்டவைத்தியரிடம் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார்