Tag: குற்றம்
ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்
ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் எனக் கூறப்படும் விவரங்களை ஈரான் கசியவிட்டிருப்பது, “ஒப்புக்கொள்ளப்பட்ட
நிபந்தனைகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை” என்றும், “உண்மையுடன் எந்தத் தொடர்பும் இல்லை” என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.
அவர்கள் “கையாள்வதற்கு மிகவும் கண்ணியமற்றவர்கள்” என்றும், “தங்கள் செயல்களை விரைவாகச் சரிசெய்துகொள்ள வேண்டும்!” என்றும் டிரம்ப் கூறினார்.
தெஹ்ரான் பகிரங்கமாகக் கோரி வந்த மற்றும் அமெரிக்கா நிராகரித்து வந்த பல அம்சங்களை உள்ளடக்கியதாகக் கூறப்படும் விவரங்களை ஈரான்
ஊடகங்கள் வெளியிட்ட நிலையில் இந்த எதிர்வினை வந்துள்ளது. ஈரான் தொடர்ந்து நிராகரித்து வரும் நிபந்தனைகளையும் அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு ஒப்பந்தம் “முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக” உள்ளது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி கூறினார்,
மேலும் “அதன் உள்ளடக்கம் குறித்து ஊகங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு” ஊடகங்களை அவர் கேட்டுக்கொண்டார்.
பிப்ரவரி 28 அன்று ஈரான் முழுவதும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய பரந்த அளவிலான தாக்குதல்களுடன் தொடங்கிய போரை
முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்தின் சாத்தியக்கூறுகள் குறித்தும் டிரம்ப் பலமுறை பேசியுள்ளார்.
ஈரான், வளைகுடாவில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துள்ள நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியதுடன், உலகின் எண்ணெய்
மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியையும் திறம்பட மூடியது.
ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் செய்துகொள்ள ஒப்புக்கொண்ட போதிலும், அமெரிக்காவும் ஈரானும் அவ்வப்போது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு
வருகின்றன; இந்த வாரம் நடந்த இரண்டு சுற்று பதிலடித் தாக்குதல்களும் இதில் அடங்கும்.
வியாழக்கிழமை, அமெரிக்க அதிபர் புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என அச்சுறுத்தியிருந்தார். ஆனால் பின்னர், பேச்சுவார்த்தையாளர்கள் ஈரானுடன்
“ஒரு சிறந்த உடன்பாட்டை எட்டியுள்ளதால்” அவற்றை ரத்து செய்துவிட்டதாகக் கூறினார் – அந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படும் என
எதிர்பார்க்கப்பட்டது. இது, ஒப்பந்தம் குறித்த செய்திகள் “ஊகமானவை” என்றும் “எதுவும் இறுதி செய்யப்படவில்லை” என்றும் ஈரான் கூறத் தூண்டியது.
வெள்ளிக்கிழமை, ஈரானிய ஊடகங்கள் ஒரு ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் என்று தாங்கள் விவரித்ததை வெளியிட்டன. அமெரிக்கக் கடற்படை
முற்றுகையை நீக்குவது மற்றும் ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ய “குறைந்தது $300 பில்லியன் (£223 பில்லியன்)” ஒதுக்குவது ஆகியவை அந்த விவரங்களில் அடங்கும்.
பெரும்பாலும் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் ஈடுபடவில்லை. இந்தப் பேச்சுவார்த்தைகள்
, போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கும், ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கும் வழிவகுக்கும் நோக்கம் கொண்டவை.
பல தசாப்தங்களாக, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க முயற்சிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. தனது திட்டம் மின்சாரம்
தயாரித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அமைதியான நோக்கங்களுக்காகவே என்று கூறி, ஈரான் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கூறப்படும் உள்ளடக்கங்களை வெளியிட்ட ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம், இறுதி ஒப்பந்தத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானத்தின் ஒப்புதல் தேவை என்று ஈரான் விரும்புவதாகக் கூறியது.
“செறிவூட்டப்பட்ட பொருட்களின் எதிர்காலம் மற்றும் செறிவூட்டும் நடவடிக்கைகள், தடைகளை நீக்குதல், மற்றும் ஈரானின் பொருளாதாரத்தை
மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மட்டுமே இறுதி ஒப்பந்தம் வரையறுக்கப்படும்” என்று அது கூறியது.
மேலும், “ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களில் பாதி விடுவிக்கப்படும் வரையிலும், ஈரானிய எண்ணெய் மீதான தடைகள் இடைநிறுத்தப்படும்
வரையிலும், மற்றும் கடற்படை முற்றுகை நீக்கப்படும் வரையிலும் இறுதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படாது” என்றும் அது கூறியது.
இந்தப் பிரச்சினைகளின் பட்டியலில், லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவுடனான இஸ்ரேலிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட, ஈரானின் வழக்கமான கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
அமெரிக்காவின் பார்வையில், அணுசக்திப் பொருட்கள் அழிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும் மற்றும் அணுசக்தித் திட்டம் கலைக்கப்பட வேண்டும்
என்ற எதிர்பார்ப்பை ஈரான் ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது என்று ஒரு மூத்த நிர்வாக அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
ஈரானியர்கள் அமெரிக்காவின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையிலும், ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரையிலும், ஈரான் பயங்கரவாதக்
குழுக்களுக்கு நிதியளிக்கக் கூடாது என்று எதிர்பார்க்கப்படும் வரையிலும் ஈரானின் பணம் எதுவும் விடுவிக்கப்படாது என்று அந்த அதிகாரி கூறினார் –
இது ஹிஸ்புல்லா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள பிற ஈரானிய ஆதரவுக் குழுக்களைக் குறிக்கிறது.
பின்னர் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தனது கருத்தைச் சேர்த்து, “கடந்த சில மணிநேர செய்திகளில் சில விசித்திரமான விஷயங்களைக் கவனித்ததாக”க் கூறினார்.
“ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காகவோ அல்லது ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டதற்காகவோ ஈரானியர்கள் எந்தப் பணத்தையும் பெறவில்லை, எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை,” என்று வேன்ஸ் X தளத்தில் ஒரு பதிவில் கூறினார்.
“அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கவலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும், ஈரான் இஸ்லாமியக் குடியரசு தனது கடமைகளை நிறைவேற்றினால், பொருளாதாரப் பலன்கள் அவர்களுக்கும் முழுப்
பிராந்தியத்திற்கும் சென்றடையும் என்பதையும் உறுதிசெய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் கட்டமைக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் மேலும் கூறினார்.
இது செய்தால் இலங்கையில் குற்றம்
இது செய்தால் இலங்கையில் குற்றம்
இது செய்தால் இலங்கையில் குற்றம், இலங்கை சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சட்ட நடைமுறையோட காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் வாகனங்கள் ஒளி மற்றும் ஒளிச்சத்தங்கள் அதிகமாக காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
வாகனங்கள் செல்கின்ற பொழுது அதிகமாக கோன் அடித்து சென்றாலும் அல்லது லைட்டை அது வெளிச்சமாக போட்டு
சென்றாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் வாகன சாதிகளுக்கு காட்டும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அதிக வெளிச்சம் பாய்ச்சி வாகனசங்கள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் எதிரே வருகின்ற வாகனங்களால் அவற்றை திறப்பட ஓட்டி செல்ல முடியாத இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .
வீதி விபத்துக்களை தடுக்கின்ற நோக்கில் இவ்வாறு அதிகமாக வாகனங்கள் வெளிச்சங்களை வைத்து ஓட்டிச் செல்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உடன் சட்டத்தின் நிறுத்தப்படுவார்கள் எனவே வாகனச் சாரதிகளே மிக எச்சரிக்கை.
உங்களை தேடி உங்கள் வாசலுக்கு புதிய சட்டம் வந்திருக்கிறது.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்
தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்
மருத்துவர் அர்ச்சுனாவை முகநூலில் தொடரும் ஆதரவாளர்களாகிய எங்களுக்கும் அந்தக் குற்றத்தில் பங்கு உள்ளதாகவே நான் கருதுகிறேன்.
திங்கள் இரவு சுமார் 9pm, மருத்துவர் அர்ச்சுனாவின் முகநூல் செயல் இழந்து போகிறது.
முகநூல் ஆதரவாளர்கள் பரபரப்பாக தொடங்கிறார்கள்.
தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி நடக்கிறது.
தொலைபேசியும் துண்டிக்கப் பட்டுள்ளது. பரபரப்பு உச்சத்தை தொடுகிறது.
யாரிடம் கேட்பது? யாரை தொடர்பு கொள்வது? எல்லோருக்கும் படபடப்பு.
முகநூல் நண்பர்களாக இருந்தாலும் ஏற்கனவே அறிமுகம் இல்லாதவர்கள் கூட ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள்,
WhatsApp, Tik Tok குழுக்களில் இருப்பவர்கள் தங்களுக்குள் ஒவ்வொரு கருத்துக்களை பரிமாறுகிறார்கள்,
நெருங்கிய தொடர்பில் உள்ள நண்பர்கள் யார்? என்ற தேடல்,
“ஐயோ டொக்டருக்கு ஏதோ ஆகிவிட்டது, யாராவது அவரை போய் பாருங்கள், காப்பாற்றுங்கள் என்ற கதறல்கள்”,
பொலிசால் கைது செய்யப் பட்டாரா?
ஏதாவது குழுக்களால் கடத்தப்பட்டாரா?
உயிரோடு இருக்கிறாரா, இல்லையா?
ஆயிரம் கேள்விகள், குழப்பங்கள்…
வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் உள்நாட்டு நண்பர்களுக்கு அழைப்பு எடுக்கிறார்கள்…
இந்த இடத்தில்தான் தம்பி ஐயா மாட்டுப் படுகிறார்…
போனுக்கு மேல் போன்,
“ஐயா டொக்டர் அர்ச்சுனாவை காணவில்லை ஐயா, ஒருக்கால் போய் பாருங்க, எங்க இருக்கிறார், என்ன நடந்தது ஒண்டும் தெரியவில்லை, ஒருக்கா போய் பாருங்க ஐயா”
கதறல்கள்…
சுமார் இரவு 10:00 மணி, வயதான அந்த மனிதர் மருத்துவர் அர்ச்சுனாவை தேடி புறப்படுகிறார்…..
தம்பி ஐயாவின் தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது…
எங்களுக்கு இருந்த பரபரப்பை நாம் அவர்மேல் கொட்ட, அவற்றை சுமந்து கொண்டு ஐயா போகிறார்…
ஆனால் சாவகச்சேரி மருத்துவமனையில் நின்ற ஊழியர்களுக்கு அந்த பரபரப்பு இல்லை,
காரணம் அர்ச்சுனாவின் முகநூல் அவர்களால் கவனிக்கப் படவில்லைபோல் உள்ளது,
மேலும் சற்று முன் எப்போதும்போல அவர் காரில் வந்து இறங்கி, விடுதிக்கு போனதை நேரடியாக பார்த்திருக் கிறார்கள்.
அதன் காரணமாக அங்கிருந்த ஊழியர்கள் நிலமையை சாதாரணமாக கையாள முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் தொலைதூரத்தில் இருந்து கொண்டு நிலமையை நேரடியாக பார்க்க முடியாத Dr.அர்ச்சுனாவின் அன்பு உறவுகளுக்கு பதட்டம் தணியவில்லை,
இறுதியில் ஏதேதோ நடந்து முடிகிறது.
பல நாட்கள் சரியான ஓய்வு உறக்கம் இல்லாத நிலையில் அன்று உள்ளே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த Dr.அர்ச்சுனாவுக்கு வெளியில் நடந்த இந்த கலோபரங்கள் எதுவும் தெரியாது.
ஏதோ சத்தம் கேட்டு திடீரென கண்முழித்த போது கதவை உடைத்துக் கொண்டு காவலர்கள் உள்ளே நின்றதை பார்த்து திகைத்து போகிறார் மருத்துவர்….
இதில் தம்பி ஐயா சிறு சிறு தவறுகள் விட்டுள்ளார் என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன்.
அதற்கு நாமும் ஒரு காரணம் என்பதையும் முழுமையாக ஏற்கிறேன்.
அந்த தவறுகள் நிச்சயம் மன்னிக்கப்பட வேண்டியவையே!
இந்த நேரத்தில் நாம் தம்பி ஐயாவுக்கு ஆதரவாக நிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அவருடைய கட்சி, கொள்கைகள் சார்ந்த பழைய தவறுகள் எதுவும் இங்கே பொருத்தப் படுவது ஞாயம் இல்லை என்பது என்கருத்து.
அதே வேளை இரவிரவாக நித்திரை கொள்வதற்குகூட விடாமல் நடுச்சாமம் கடந்து டிக் டொக் உரையாடல்களுக்கு Dr.அர்ச்சுனாவை அழைக்கும் வன்னி மைந்தனின் செயல் தவறானது என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
வெளிநாட்டில் இருப்பவர்களை விடவும் உள்நாட்டில் இருக்கும் மக்களோடு அதிக உறவை வளர்க்க நேரத்தை செலவிடும்படி என் அன்புத் தம்பி Dr. அர்ச்சுனாவை கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு வெளிநாட்டில் வாழும்
அன்பு +அக்கறை உள்ள
Dr. அர்ச்சுனாவின் அக்கா..இவ்வாறு அர்ச்சுனா முக நூலியில் வெளியிட .பட்டுள்ளது
இதற்கு எனது கருத்து கீழ்வருமாறு .அமைகிறது
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் காணியானது பறிக்க படும் நிலையில் ,வைக்க படும் பொறி ,
ஆரம்பமாகும் சம்பவங்கள் .திரளும் மக்கள் கூட்டம்
அக்கா வன்னி மைந்தன் ஆகிய எம் மீது வைத்த கருத்து தவறு என்பதையும் அதன் உள்ளார்ந்தம் எது என்பதை புரியமுடிகிறது ,மக்கள் சேவைக்கு வந்தவன் நேரத்தை கருத்தில் கொள்வதில்லை ,தனது நோக்கத்தில் குறியாக இருப்பான் .
இந்த சம்பவம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் மக்கள் பலம் , செயல்பாடுகள் கண்டு ஆதிக்க சமூகம் அலறியுள்ளது நாம் அறிவோம் .
.இது அர்ச்சுனாவுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி .அர்ச்சுனா எமக்காக இருக்கும் வரை அவருக்கான ஆதரவு வன்னி மைந்தன் ஆகிய என்னால் ,எம் டிக் டாக் அணியினரால் வழங்க படும் ,எமது எதிரி இணையமும் களத்தில் நிற்கும் ,
களத்தை கண்டவர்கள் நாங்கள் ,சரித்திரம் படைக்க வந்திருக்கும் சாதனையாளன் வீர மகன் மக்கள் நாயகன் அர்ச்சுனவோடு நான் நிற்பேன் .
காலம் பலவிடயங்களை பகிரும் பொழுது நம் உயிரோடு இருக்க மாட்டோம் ,வரலாறு அப்படி தான் காணப்படுகிறது நன்றி –
நட்புடன் -வன்னி மைந்தன்
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்த பெண்
இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்த பெண்
india ;இந்தியாவில் 24 வயதுடைய Kshama Bindu என்ற இளம் பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ள விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இயல்பாக திருமணம் என்றால் ஆண் பெண் இணைவது திருமணமாகும் .
அது கடந்து ஓரினத் திருமணம் பெண்ணும் பெண்ணும் அல்லது ஆணும் ஆணும் செய்து கொள்ளவர்கள் .
பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது
பள்ளி மாணவனை அழைத்து சென்று ரகசிய திருமணம் செய்த ஆசிரியை
ஆனால் இங்கே யாவற்றுக்கும் முரணாக தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளாராம் இந்த பெண் .

இது என்னங்கடா என்று நீங்கள் மட்டும் அல்ல இந்த உலகமே விசித்திரமாக பார்க்கிறது .
இந்த பெண் திருமணத்தை கேள்வியுற்ற நெட்டிசன்கள் கழுவி ஊற்றிய வண்ணம் உள்ளனர் .
என்னத்த சொல்ல எல்லாம் தனிமனித சுதந்திரம் சாமிகளா .கேள்வி கேட்கப்படாது
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
காதலனுக்கு பெண்களை கூட்டி கொடுத்த காதலி
காதலனுக்கு பெண்களை கூட்டி கொடுத்த காதலி
தவறான சேர்க்கையால், பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றி கொலைக்கும் காரணமாகி, தன் வாழ்க்கையையே கெடுத்துக்கொண்ட மயக்கமருந்து பெண்ணின் கதை இது.
பெண்களை நம்பவைத்து ஏமாற்றிய `மயக்கமருந்து பெண்’ வெளிப்படுத்தும் பதறவைக்கும் உண்மைகள்
மனித சமூகத்தில் மோசமான மனிதர்களும் உண்டு. அதனால்தான் நல்ல மனிதர்களை அடையாளங்கண்டு அவர்களிடம் பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்படைக்கவேண்டும்.
தவறான மனிதர்களுடன் இணையும்போது அந்த பெண்களும் தவறான வழிக்கு சென்று தீராத பழி பாவத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். தவறான சேர்க்கையால், பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றி
கொலைக்கும் காரணமாகி, தன் வாழ்க்கையையே கெடுத்துக்கொண்ட மயக்கமருந்து பெண்ணின் கதை இது.
பெண்ணின் கொலைக்கு உடந்தையாக இருந்ததால் தண்டனை பெற்று சிறையில் வாடிக்கொண்டிருக்கும் சந்தியா (பெயர்மாற்றம்), நெஞ்சை பதறவைக்கும் தனது உண்மைக்கதையை சொல்கிறார்:
‘‘சிறுவயதில் இருந்தே நான் ரத்தத்தை பார்த்து வளர்ந்தவள். அப்பா ஆடுகளை வெட்டி வியாபாரம் செய்பவர். ஆடுகளையும், சில நேரங்களில் மாடுகளையும் வீட்டின் பின்பகுதிக்கு கொண்டு
சென்று, கொன்று, அறுப்பார். அவைகள் உயிரை விடும் நேரத்தில் எழும் அலறல் சத்தமும், பீறிட்டு வழியும் ரத்தமும் காலப்போக்கில் எனக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத அன்றாடக் காட்சிகளாகிவிட்டது.
வெட்டிப்போட்ட ஆடுகளையும், மாடுகளையும் சுத்தப்படுத்தி கறியாக்க ஆண்கள் வருவார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் அந்த வேலையை பார்ப்பேன். எனக்கு பத்து வயதாக இருந்தபோது
ஒரு நாள் எனது அம்மாவுக்கும்- அப்பாவுக்கும் சண்டை வந்தது. அப்பா, அம்மாவை குத்திக்கொன்றுவிட்டார். அதன் பின்பு அப்பா எங்கே போனார் என்றே குழந்தைகளான எங்களுக்கு தெரியாது.
அதன் பின்பு நாங்கள் அனாதை இல்லத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. என் சகோதரர்கள் ஓரிடத்திலும், நான் இன்னொரு இடத்திலும் வளர்ந்தேன்.
நான் பள்ளிப்படிப்பை முடித்ததும், தூரத்து சொந்தமான உறவினர் ஒருவர் வந்து என்னை அவரோடு அழைத்துச்சென்றார். கொஞ்ச காலம் கடந்ததும் என்னைவிட மிக அதிக வயது கொண்ட ஒருவரை எனக்கு திருமணம் செய்துவைத்தார். நான் அவருக்கு மூன்றாவது மனைவி.
அவரோடு வாழ்ந்து நான் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தேன். அவருக்கு என் மேல் கொஞ்சமும் அன்பு கிடையாது. அதனால் நான் அவரையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு என்னுடன் சினேகம் காட்டிய ஒருவனோடு சென்றுவிட்டேன்.
நாங்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு திருடன் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் அவன் என்னை நேசித்ததால், அவனை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.
அவன் எனக்கும் திருட்டுத் தொழிலுக்கு பயிற்சி கொடுத்தான். நிறைய தங்க நகைகள் அணிந்து செல்லும் பெண்களின் வீடுகளை கண்காணித்து என்னிடம் சொல்வான். அவர்கள் தனியாக இருப்பார்கள். அந்த பெண்களுக்கு உறவினர்களும் இருக்கமாட்டார்கள்.
நான் அவர்களிடம் அறிமுகமாகி நட்பு பாராட்ட முயற்சிப்பேன். முதலில் சில நாட்கள் அவர்களை பார்த்து சிரிப்பேன். தொடக்க நாட்களில் சிரிக்காவிட்டாலும் அடுத்தடுத்த நாட்களில் என் முயற்சிக்கு வெற்றிகிடைத்துவிடும். அவர்கள் என்னை பார்த்து சிரித்துவிட்டால் எனக்கு வெற்றிதான். எப்படியாவது அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திவிடுவேன்.
சில மாதங்களில் அல்லது ஒரு வருடத்திற்குள் நான் அவர்களை நம்பவைத்து எனது ஆள் சொல்லும் இடத்திற்கு அவர்களை அழைத்துச்சென்றுவிடுவேன். மீதமுள்ள வேலையை அவன்
செய்துவிடுவான். கொலையும் நடக்கும். பெரும்பாலும் நகையை பறித்துக்கொண்டு மிரட்டி அனுப்பிவிடுவான். பின்பு அந்த ஊரில் இருந்து இடம்மாறி வேறு ஊருக்கு போய்விடுவோம்.
நான் கர்ப்பிணியானதும் அடிக்கடி இடம்மாறிச்செல்ல என்னால் முடியவில்லை. அந்த காலகட்டத்திலும் அவன் அந்த பகுதியில் உள்ள சில பெண்களின் விவரங்களை சேகரித்து என்னிடம் தந்தான். நிறைந்த வயிறுடன் நான் சென்றபோது என் ஏமாற்று வேலைகள் எளிதானது. கனமான வயிற்றுடன் சோர்ந்து போய் காட்சியளிக்கையில் நான் சொல்வதை மற்றவர்கள் எளிதாக நம்பிவிடுவார்கள்.
எனக்கு எதிராக மூன்று வழக்குகளே பதிவாகியுள்ளன. அவற்றில் ஒன்றில் தண்டிக்கப்பட்டுதான் நான் இப்போது சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். கொலையாளிக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கிறார்கள். அவனும் சிறையில்தான் உள்ளான். ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறான்.
எனக்கு இன்னும் வயது ஐம்பது ஆகவில்லை. பெண்களை ஏமாற்றுவதற்காக என்னை என் காதலன் வேஷம் போடச்சொன்னான். நெற்றியில் எப்போதும் சந்தனமும், குங்குமமும் இடம்பெற்றிருக்க
வேண்டும் என்பான். அதனால் தினமும் காலையில் கோவிலுக்கு செல்லும் வழக்கம் உருவானது. விலை உயர்ந்த ஆபரணங்கள், புடவைகள் வாங்கித்தந்து எப்போதும் மற்றவர்களை கவரும்
விதத்தில் அழகோடு காட்சியளிக்க வேண்டும் என்றான். நானும் நேர்த்தியாக உடை அணிந்து எப்போதும் அழகாகவே வலம் வருவேன்.
நான் நயவஞ்சகத்தோடு பலரை ஏமாற்றியிருந்தாலும், ஒரே ஒரு பெண்ணை நம்பவைத்து கழுத்தறுத்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. நான் கர்ப்பிணியாக இருந்தபோது ஒருமுறை
சாலையில் தடுமாறிவிழுந்துவிட்டேன். கைமூட்டில் அடிபட்டுவிட்டது. அப்போது பலரும் உதவிக்கு வந்தாலும் ஒரே ஒரு பெண் என்னை தாங்கிப்பிடித்தார். நான் அவருக்கு நிறைந்த கண்ணோடு
நன்றி கூறினேன். இரண்டு நாட்கள் கழித்து நான் கோவிலுக்கு சென்றிருந்தபோது அந்த பெண்மணி என்னை தேடிவந்து, `எப்படி இருக்கிறாய்.. குழந்தைக்கு எதுவும் ஆகவில்லையே?’ என்று கேட்டு நலம் விசாரித்தார்.
ஸ்கேன் செய்து பார்த்தேன். குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை. எனக்குதான் முதுகுவலிக்கிறது. பலரும் உதவியது மகிழ்ச்சிக்குரியது. ஆனாலும் நீங்கள்தான் எனது நன்றிக்குரியவர்' என்றேன்.
என்னை பற்றி நிறைய சோகக் கதைகளையும் கூறி அவரது மனதில் இடம்பிடித்தேன். அவரது நம்பிக்கையை பெற பல காரியங்களை செய்தேன். கோவிலில் அவரது பெயருக்கு ஒரு வழிபாடும் நடத்தினேன்.எனது மூத்த சகோதரி என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துபோனார். அவரைப் போன்று நீங்களும் இருக்கிறீர்கள்’ என்றும் பொய் சொன்னேன். அவரும் ரொம்ப உருகிப்போய்விட்டார்.
அடுத்து என் காதலன் சொல்லிக்கொடுத்தபடி அந்த பெண்மணியை நயவஞ்சகமாக ஏமாற்ற திட்டம் தீட்டினேன். `அக்கா எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். நாளை நான் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்லவேண்டியதிருக்கிறது. என் கணவர் வெளியூரில்
இருப்பதால் அவரால் வரமுடியவில்லை. எனக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் யாராவது ஒருவர் என்னோடு வந்தால் நல்லது. உங்களால் வர முடியுமா? வரமுடியாவிட்டாலும் பரவாயில்லை..’ என்றேன். அந்த பெண்மணி உடனே சம்மதித்தார்.
மறுநாள் என் காதலன் டிரைவராகி, காரை ஓட்டிக்கொண்டு வந்தான். அந்த பெண்மணி நிற்பதாக சொன்ன இடத்திற்கு சென்று அவரை ஏற்றிக்கொண்டோம். மருத்துவமனையை நோக்கி செல்வதாக சொன்னேன். நான் அவரை யோசிக்கவிடாமல் தொடர்ந்து அவரிடம் பேச்சுகொடுத்துக்கொண்டே இருந்தேன். ஆனாலும் அவர், மருத்துவமனை எங்கே இருக்கிறது? அந்த இடத்தை அடைய இன்னும் எவ்வளவு நேரமாகும்? என்று கேட்டுக்கொண்டே வந்தார்.
தூரத்தில், ஆட்கள் இல்லாத ஒர்க்ஷாப் ஒன்றின் உள்ளே கொண்டு போய் காதலன் காரை நிறுத்தினான். நான் எனது ஹேன்ட்பேக்கில் இருந்து மயக்க மருந்து ஸ்பிரேயை எடுத்தேன். எனது வாயையும், மூக்கையும் பாதுகாப்பாய் துணியால் கட்டிக்கொண்டு, அவரது முகத்திற்கு நேராக அடித்தேன். வழக்கமாக நான் கையாளும் உத்தி இதுதான். முதலில் அந்த பெண்மணி என்னை தாக்க முயற்சித்தாலும் சில நிமிடங்களிலே நினைவிழந்தார். பின்பு அந்த ஒர்க்ஷாப்பின் ஷட்டரை என் காதலன் இழுத்து மூடினான்.
நினைவற்று கிடந்த அந்த பெண்மணியை கீழே இறக்கி, அவர் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றினோம். அவரது ஹேன்ட்பேக்கில் இருந்து டெபிட் கார்டையும் எடுத்துக்கொண்டோம். இன்னொரு பவுச்சில் இருந்து அதன் பின்நம்பரையும் எடுத்தோம். அதற்குள் என் காதலன், அந்த பெண்மணியை கொன்றுவிட்டான். பின்பு அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி, அந்த ஷெட்டிலேயே போட்டோம். காரை வெளியே எடுத்தோம்.
`ரொம்ப நாட்களாக இந்த ஒர்க் ஷாப் மூடிக்கிடக்கிறது. நேற்று இரவுதான் நான் வந்து இதன் பூட்டை உடைத்து திறந்தேன்’ என்று கூறி, ஷட்டரை இழுத்து மூடினான். கொலை செய்யப்பட்ட அந்த பெண்மணியின் டெபிட் கார்டை பயன்படுத்தி எவ்வளவு பணத்தை எடுக்க முடியுமோ அவ்வளவையும் எடுத்தோம்.
அந்த பெண்மணி விதவை. தனியாக வசித்து வந்தார். திருமணமான அவரது மகன் அரசு வேலை பார்க்கிறார். அவர் மனைவியோடு தனியாக வசித்து வருகிறார். அவர் தினமும் இருமுறை அம்மாவுக்கு போன் செய்யும் வழக்கத்தை கொண்டவராக இருந்திருக்கிறார். வழக்கம்போல் காலையில் அவர் தனது அம்மாவுக்கு போன் செய்தபோது அவர், `நான் கோவிலில் வைத்து பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட நிறை மாத கர்ப்பிணியுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, மதியம் திரும்பிவிடுவேன்’ என்று கூறியிருக்கிறார்.
இரவு வரை தாயாருக்கு அவர் பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை என்பதாலும், வீடு திரும்பவில்லை என்பதாலும் அவர் போலீசில் புகார்செய்துவிட்டார். நான் பிரவசத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
மகனின் புகாரின் பேரில் போலீசார் கோவிலில் போய் என்னை பற்றி விசாரித்திருக்கிறார்கள். அங்கிருந்தவர்கள் என்னை பற்றிய முழு விபரத்தையும் தெரிவித்துவிட்டார்கள். நான் பிரசவித்த இரண்டாவது நாளில் போலீசார் என்னை மருத்துவமனையிலேயே கைதுசெய்தார்கள். எனது குழந்தை இறந்து பிறந்தது. அதுவும் நல்லதுக்குதான். இல்லாவிட்டால் என்னோடு அதுவும் ஜெயில் வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கும்.
அந்த பெண்மணியின் உடலை நான்தான் காட்டிக்கொடுத்தேன். என் காதலனையும் காட்டிக்கொடுத்தேன். அவன் செய்த இதர கொலைகளை பற்றி எனக்கு தெரியாது. அந்த உடல்களை என்ன செய்தான் என்பதும் தெரியாது. தண்டனை காலம் முடிந்து நான் வெளியே செல்லவேண்டும். எனக்கும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்கிறாள், சந்தியா.
ஆண்களால் மட்டுமல்ல, பெண்களாலும் பெண்களுக்கு பேராபத்து இருக்கிறது. அதனால் தனியாக வசிக்கும் பெண்கள் அடுத்தவர்களை நம்பி ஒருபோதும் அவர்கள் பின்னால் சென்றுவிடக்கூடாது. அறிமுகமற்றவர்களுடன் நெருங்கவும் கூடாது.














