Tag: கச்சத்தீவு
கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை
கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை
கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா நேற்று (14) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்து வடக்கு தமிழ் மக்கள் இடையே வேதனை அளிக்கின்றது.
இந்தியாவுடன் எங்களின் உறவுகளை தொடர வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும், பூகோள அரசியல் ரீதியாக இந்திய அரசுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகின்றது என தெரிவித்தார்.
Featured
கச்சத்தீவு யாருக்கு சொந்தமானது பட்டிமன்ற தலைவரான டக்கிளஸ்
கச்சத்தீவு யாருக்கு சொந்தமானது பட்டிமன்ற தலைவரான டக்கிளஸ்
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமா அல்லது இந்தியாவிற்கு சொந்தமா என்று பார்த்தால் இரண்டு தரப்புகளும் வெவ்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (04) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தரப்பு கூறுகின்றது கச்சத்தீவு தங்களுக்கு சொந்தம் என்று அதேபோல் இந்தியா தரப்பில் கூறப்படுகின்றது தங்களுக்கு சொந்தம் என்று எது எவ்வாறு இருந்தாலும் இந்தியாவில் இப்போது தேர்தல் ஒன்று நடைபெறுகின்றது தேர்தல் காலங்களில் இவ்வாறான கோஷங்கள் தான் வந்துக்கொண்டு இருக்கிறது.
1974ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாக இலங்கை அரசும் இந்தியா அரசும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் படி இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கையிலும் இலங்கை கடற்தொழிலாளர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று தொழில் செய்யலாம் என்று இருக்கிறது என தெரிவித்தார்.
Featured
கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது எப்படி? கருணாநிதிக்கு தெரியுமா
கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது எப்படி? கருணாநிதிக்கு தெரியுமா
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடியும், திமுகவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்கள் தான். இந்நிலையில் தான் ஆர்டிஐயில் அண்ணாமலை பெற்ற தகவல்களின் முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருந்தபோது கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. தற்போது கச்சத்தீவு பிரச்சனையால் தமிழக மீனவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் என தமிழக மீனவர்கள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இன்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கச்சத்தீவு பற்றி பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதில் ‛‛கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் எப்படி விட்டு கொடுத்தது என்பதற்கு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, நலன்களை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் 75 ஆண்டு கால செயல்திறனாக உள்ளது. காங்கிரஸை எப்போதும் நம்பக்கூடாது என்று மக்கள் மனதில் உறுதியான நம்பிக்கை உள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியர்கள் ஒவ்வொருவரையும் காங்கிரஸ் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் ஆர்டிஐ மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தொடர்பான தகவல்களை பெற்றிருப்பது தான் காரணம். அண்ணாமலை பெற்றுள்ள தகவலில், ‛‛முன்னாள் பிரதமர் நேரு1961 மே 10ம் தேதி கச்சத்தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் தரவில்லை. அதற்கான உரிமையை விட்டு தயங்கமாட்டேன் என பேசியுள்ளார். கச்சத்தீவுக்கு இந்தியா உரிமை கொண்டாட வாய்ப்பு உள்ளதாக அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்சி செடல்வாட் 1960ல் கூறியிருந்தாலும் கூட நேருவின் முடிவு எதிர்மாறாக இருந்தது.
மேலும் 1973ல் இந்தியா-இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை கொழும்பில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் கேவால் சிங் தெரிவித்தார். அப்போது ராமநாதபுரம் ராஜாவிற்கு கச்சத்தீவு உரிமை உள்ளது என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும் இலங்கை ஜனாதிபதி சிறிமாவோ, டெல்லி வந்து இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தையின் முடிவில் மத்திய அரசு தன்னிச்சையாகவே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 1974ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது” என்ற விபரங்கள் உள்ளன.
இந்த தகவல் தான் தற்போது பூதாகரமாகி உள்ளது. இதுதொடர்பான செய்தியை குறிப்பிட்டு தான் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை சாடியுள்ளார். இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன், ‛‛தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலமாக உண்மை. கச்சத்தீவு கைமாறியது காங்கிரஸ் ஆட்சியில் 1976ல். இதை பற்றிய முழு விபரம் 1974ஜுன் மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டது.
இன்று வரை கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்து வரும் ஆளும் கட்சி திமுக இதற்கு பதிலளிக்க வேண்டும். கச்சத்தீவை காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து தாரை வார்த்துவிட்டு, பிறரை கேள்வி கேட்கும் போக்கு மிகவும் தவறு” என கூறியுள்ளார்.
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் சமீபத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இத்தகைய சூழலில் இந்த தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு லோக்சபா தேர்தலின்போது கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகும். அந்த வகையில் தான் தற்போதும் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகி உள்ளது.
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வேண்டாம் என கோரிக்கை
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வேண்டாம் என கோரிக்கை
கச்சத்தீவு திருவிழாவில் இம்முறை இந்தியாவில் இருந்து பக்தர்கள் எவரும் பங்கேற்க வேண்டாம் என கச்சத்தீவு திருப்பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை இந்திய பக்தர்களின் உறவு பாலமாக உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், சிறையில் உள்ள நான்கு இந்திய மீனவர்களை
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வேண்டாம் என கோரிக்கை
விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.
அதனடிப்படையில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக படகுகள் இயக்கப்படாததால் இந்த ஆண்டு திருப்பயணத்தை ரத்து செய்வதாக கச்சத்தீவு திருப்பயன ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அந்த செய்தியில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய திருப்பயணிகள் தயவு செய்து கச்சதீவுக்கு பயணிக்க வேண்டாம் எனவும், அவர்கள் கொடுத்த பணத்தை விரைவில் திருப்பிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
















