திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்

திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்

திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்,பாதுக்கை மஹிங்கல, பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டி மற்றும் முச்சக்கர வண்டியும் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன.

ஹொரணை மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் சென்ற போதிலும் வாகனங்கள் இரண்டும் ஏற்கனவே தீப்பிடித்து எரிந்தே காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏலத் தோட்டத்தில் அமைந்துள்ள இந்த நிலத்துக்குள் யாரும் நுழைய முடியாது என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த வாகனங்களுக்கு யாராவது தீ வைத்தனரா அல்லது ஒரு வாகனம் தீப்பிடித்ததால் மற்றைய வாகனமும் தீப்பிடித்து எரிந்ததா? என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள் நாவலப்பிட்டி – குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொலஸ்பாகை மீனகொல்ல பிரதேசத்தில் வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளன.

இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் வேனும் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப் பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணை களை குறுந்துவத்த பொலிஸார் மற்றும் கைரேகை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Posted in உலக செய்திகள்

ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்

ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்

ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம் ,உக்கிரன் Sievierodonetsk, Luhansk பகுதிகள் மீது ரசியா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில்இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .

ரசியா எறிகணை தாக்குதலில் சிக்கி பன்னிரண்டு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் நாற்பது பேர் படு காயமடைந்துள்ளனர்.

இந்த எறிகணை தாக்குதலில் தொடர் அடுக்கு மாடி கட்டடங்கள் எரிந்து அழிந்துள்ளன .
தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

ரசியா இராணுவம் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நாடத்திய வண்ணம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .