இளம்பெண் உட்பட 21பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இளம்பெண் உட்பட 21பேர் கைது

இளம்பெண் உட்பட 21பேர் கைது

இளம்பெண் உட்பட 21பேர் கைது ,கடுவலை – வெலிவிட்ட பகுதியில் நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, இளம்

போதைப்பொருட்களுடன் கைது

பெண்ணொருவர் உட்பட 21 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரம் ஒன்றை சுற்றிவளைத்த போதே இந்தக் குழு

கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் போதை

அவர்களிடம் கஞ்சா, வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 முதல் 27 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் இன்று (27) கடுவலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

12வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்
Posted in இலங்கை செய்திகள்

12வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்

12வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்

12வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் ,கொழும்பு மியூசியஸ் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் 16 வயதுடைய சிறுமி பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து தவறி

விழுந்து சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (10) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொரளை, சர்ப்பன்டைன் வீதியைச் சேர்ந்த சிறுமி, ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சிறுமி மன உளைச்சலுக்கு சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது தாயார் தெரிவித்தார்.

வீடியோ

எவ்வாறாயினும், சிறுமி பால்கனியில் இருந்து குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண்
Posted in இலங்கை செய்திகள்

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண்

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண்

திருமண கோலத்தில் ஆசிரியையான இளம்பெண் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவம் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இன்று தனது திருமண பந்தத்திற்கு தயாரான யுவதி ஒருவர், தனது திருமண ஆடை அலங்காரத்துடன் தனது ஆசிரிய நியமனத்தை பெற்றுக்கொள்வதற்காக நிகழ்விற்கு வருகை தந்திருந்தார்.

இவ்வாறு வருகை தந்தவர் அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த திலினி என்ற யுவதி ஆவார்.

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (30) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

உயர் பதவியில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

உயர் பதவியில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண் சிக்கினார்

உயர் பதவியில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண் சிக்கினார்

சமூகத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை சுரண்டும் அநுராதபுரம் பிரதேசத்தை பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது.

இன்றைய அத தெரண உக்குஸ்ஸாவின் வெளிப்படுத்தல் அது பற்றியதாகும்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல வைத்தியர் ஒருவர் சிகிச்சைக்கு வரும் பெண்களை தேவையில்லாமல் தொடுவதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த மருத்துவர் பேஸ்புக்கில் உள்ள நண்பர்களிடம் இதை அகற்ற ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார், மேலும் ஒரு பெண்ணும் அதை அகற்ற முன்வந்தார்.

உயர் பதவியில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண் சிக்கினார்

குறித்த பெண், முகநூலில் இருந்து பதிவை நீக்க மருத்துவரிடம் பணம் கேட்டுள்ளார்.

இதன்படி குறித்த மருத்துவர் 30 லட்சத்திற்கும் அதிகளவான பணத்தை பகுதி பகுதியாக அந்த பெண்ணுக்கு வழங்கியிருந்தார்.

ஆனால் அந்தச் சம்பவம் நடந்து சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் வைத்தியரை அவமதிக்கும் பதிவு ஒன்று பரவியுள்ளது.

அதன்படி, முன்பு அவருக்கு உதவிய பெண் மீது மருத்துவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர், இது தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வைத்தியர் முறைப்பாடு அளித்துள்ளார்.

வைத்தியருக்கு உதவிய பெண் பல பிரபலமானவர்களுடன் தொடர்புகளைக் கொண்டவராக குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது கணவரை ஜனாதிபதி ஊடகப் பிரிவில் உயர் பதவியில் இருப்பவர் என அறிமுகப்படுத்தும் குரல் பதிவையும் காட்டியுள்ளார்.

அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகக் காட்டும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையையும் தயாரித்திருந்தார்.

சடலங்களுடன் 7 மணிநேரம் படுத்திருந்து தப்பிய இளம்பெண்
Posted in இலங்கை செய்திகள்

சடலங்களுடன் 7 மணிநேரம் படுத்திருந்து தப்பிய இளம்பெண்

சடலங்களுடன் 7 மணிநேரம் படுத்திருந்து தப்பிய இளம்பெண்

இஸ்ரேலை அடுத்த காசாவை ஒட்டிய கிபுட்ஜ் ரீம் என்ற பகுதியருகே கடந்த வார இறுதியில், சனிக்கிழமையன்று (07) இசை திருவிழா ஒன்று நடந்துள்ளது.

நேச்சர் பார்ட்டி என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். ஆடிப்பாடி, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அடுத்து நடக்க போகும் பயங்கர நிகழ்வை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை ஆயிரக்கணக்கான ஏவுகணைகளால் தாக்கியது. அப்படி அவர்கள் முதலில் தாக்குதல் நடத்திய பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

இதில் சிக்கி திருவிழாவில் பங்கேற்றவர்களில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

லீ சசி என்ற அந்த பெண் மற்றும் 35 பேர் புகலிடம் ஒன்றில் ஓடி சென்று பதுங்கி உள்ளனர். அவர்களை தேடி வந்த ஹமாஸ் குழுவினர், தங்களிடம் இருந்த துப்பாக்கிகளால் சுட்டு தள்ளினர்.

சடலங்களுடன் 7 மணிநேரம் படுத்திருந்து தப்பிய இளம்பெண்

பின்னர் கையெறி குண்டுகளையும் வீசி, தாக்கியுள்ளனர். இதில், பலரும் ஒருவர் மேல் ஒருவர் என அடுத்தடுத்து உயிரிழந்து கிடந்துள்ளனர்.

எனினும், இதில் சசி பாதுகாப்பாக தப்பியுள்ளார். அவர்களில் 10 பேர் மட்டுமே உயிருடன் வெளியே வந்துள்ளனர். உயிரிழந்த உடல்களின் அடியில் மறைந்து இருந்து அனைவரும் உயிர் தப்பினோம் என அவர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

இந்த பயங்கர தகவலை சசி, தன்னுடைய தோழியான நடாஷா ரகேல் கிர்த்சக் கட்மேனிடம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.

7 மணிநேரம் பதுங்கியிருந்தோம். நான் ஜோக் எதுவும் கூறவில்லை என தெரிவித்து, புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றையும் அதற்கு சான்றாக

வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், பலர் உயிரிழந்த நிலை கிடக்க கூடிய காட்சி அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.

வீடியோ

Posted in உலக செய்திகள்

ஜெர்மனியில் வீதியில் பிள்ளை பெற்ற – வீடற்ற இளம் பெண்

ஆளை கொல்லும் குளிருக்குள் அதி காலை வேளை பிள்ளை பெற்ற இளம் பெண் -பிறந்த பிள்ளையை பையில் சுற்றி வெப்பம் ஊட்டிய தாய் கண்ணீர் சம்பவம்

ஜெர்மன் Nuremberg பகுதியில் அதி காலை ஐந்து மணியளவில்

இருபது வயது இளம் வீடற்ற பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்தார்

பிறந்த சிசுவை தான் வைத்திருந்த பையொன்றினால சுற்றி

பாதுகாத்த படி , ஐந்து மைனஸ் குளிர் வெப்ப நிலைக்குள் உறங்கியபடி இருந்துள்ளார்

மேற்படி சம்பவத்தை கண்ணுற்றவர்கள் அம்புலன்சுக்கு வழங்கிய

தகவலை அடுத்து தாயும் ,சேயும் மீட்க பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

உலக ஊடகங்களில் வெளியான இந்த செய்தியை அடுத்து அந்த இளம்

பெண்ணுக்கு உதவிட உலகில் பல மக்கள் முன்வந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

யாழ் பண்ணையில் இளம் பெண் வெட்டிக்கொலை video

யாழ் பண்ணையில் இளம் பெண் வெட்டிக்கொலை

சற்று முன் யாழ்ப்பாணம் பண்ணையில் ஒரு பெண் சர மாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்

கொலை செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட மாணவி எனவும் இவரை கொலை செய்து விட்டு கொலையாளி

பேரூந்தில் ஏறி தப்பி செல்லும் போது சிலரால் பிடிக்கப்பட்டார்..

பெண்ணின் கழுத்து பகுதி ,மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் உள்ளதாக யாழ்ப்பாணம் போலீஸ் சுபிரிண்டன் நிலையத்தை நாம் தொடர்பு கொண்ட பேசியபோது அவர்கள் இதனை நமக்கு தெரிவித்தனர் .

தற்பொழுது போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக தகவல் விரைவில் வெளியிடப்படும் என நமக்கு தெரிவித்தனர்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுக்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்ல படுகிறது ,

இது காதல் தகராறாறு காரணமாக இடம்பெற்ற சம்பவமாக பதியப் பெற்றுள்ளது ,குறித்த யுவதியுடன் உரையாடி கொண்டிருந்த

காதலரான இராணுவ சிப்பாய் அந்த பெண்ணை வெட்டி கொன்று விட்டு தப்பி செல்லு பொழுதே கைது செய்யப்பட்டுள்ளார்

  • வன்னி மைந்தனை –