அர்ச்சுனா பாடல் கேட்டு உருகிய பதிவு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா பாடல் கேட்டு உருகிய பதிவு

அர்ச்சுனா பாடல் கேட்டு உருகிய பதிவு

அர்ச்சுனா பாடல் கேட்டு உருகிய பதிவு ,ஒன்றை எமக்காக தனது முக நூலில் பதிவு செய்துள்ளார் .மருத்துவ போராளி அர்ச்சுனா தெரிவித்த கருத்து கீழ்வருமாறு .

தன் மக்கள் வாழ்வதற்காக தன்னை அர்ப்பணித்து ,ஆளும் அதிகார மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக போராடி வரும் ,ஒற்றை மனிதனின் வீரம், வன்னி மைந்தன் ஆகிய எனது நெஞ்சை துளைத்தது .

அதனை அடுத்து அவருக்காக எழுச்சி பாடல் ஒன்றை எழுதி இருந்தேன் ,அதனை பாசறை பாணர் தேனிசை செல்லப்பா மற்றும் ,பாவேந்தன் இளங்கோவன் பாடிட ,இளங்கோ செல்லப்பா இசை அமைத்து இருந்தார் .

அந்த பாடல் தற்ப்போது உலக தமிழர் எங்கும் வைரலாகி வருகிறது .

மருத்துவ போராளியாக களம் இறங்கி ,மக்களுக்கு நடக்கும் இன்னல்களை துடைக்கும் அந்த அற்புத மா மனிதன் அர்ச்சுனா இராமநாதன் ,

உள்ளத்தின் குமுறலையும் ,அவர் படும் நெருக்கடியையும் கருத்தில் கொண்டு இந்த பாடலை நான் வடித்து இருந்தேன் .

அதனை பார்வையிட்ட அவர் ,அந்த காணொளியை தனது முக நூலில் பதிவிட்டு எமது பாடல் குழுவுக்கு நன்றிகளை ,உணர்வோடு உருக்கமான, உள்ளத்து வலியுடன் தெரிவித்துள்ளார் .

வரலாறு ஒருவனை உருவாக்கும் ,அவன் எடுத்து கொண்ட விடயத்தில் இறுதிவரை நேர்மையாக பயணித்தால் அவனை ,அந்த இனவரலாறு ,காலம் காலமாக பாடும் கொண்டாடும் .

அவ்வாறான அன்பு தோழமை மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் இந்த பதிவு கண்டு நாமும் உருகி போனோம் .

என்றும் உங்களோடு நாம் தமிழர் இருப்பார் .கண்டிப்பாக ஒரு நாள் சந்திப்போம் ,சிந்திப்போம் , ,அந்த நாளுக்காய் நாமும் காத்துள்ளேம் .நன்றி ஐயா .

எனது FACEBOOK

எனது டிக் டாக்