மஞ்சள் சிவப்பு கொடிகளை வெட்டி அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

மஞ்சள் சிவப்பு கொடிகளை வெட்டி அட்டகாசம்

மஞ்சள் சிவப்பு கொடிகளை வெட்டி அட்டகாசம்

கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர்

நினைவேந்தல் கொடிகள் (22) புதன்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில்

சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மஞ்சள் சிவப்பு கொடிகளை வெட்டி அட்டகாசம்

முன்னாள் உப தவிசாளர் மயூரன் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை இரவு 8 மணி வரை நினைவேந்தல் இடத்தில் சிரமதானம் மேற்கொண்டு –

நினைவுக் கொடிகளை கட்டி விட்டு சென்றிருந்த நிலையில் மேற்படி கொடிகள் அனைத்தும் இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இருப்பினும் அவ்விடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் கட்டப்பட்ட நினைவுக் கொடிகள் அறுத்து எறியப்படவில்லை எனவும் எனவே இது

தொடர்பாக பொலிஸார் தகுந்த விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய
வேண்டும் எனவும் முன்னாள் உப தவிசாளர் மயூரன் தெரிவித்துள்ளார்

யாழில் தொடர்ந்து அரங்கேறும் முச்சக்கர வண்டி சாரதிகளின் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் தொடர்ந்து அரங்கேறும் முச்சக்கர வண்டி சாரதிகளின் அட்டகாசம்

யாழில் தொடர்ந்து அரங்கேறும் முச்சக்கர வண்டி சாரதிகளின் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் செயலி மூலம் ஓடும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி பழம் வீதி அருகில் நேற்று (17) இடம்பெற்றுள்ளது.

யாழில் தொடர்ந்து அரங்கேறும் முச்சக்கர வண்டி சாரதிகளின் அட்டகாசம்

தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக பாதிக்கப்பட்ட சாரதி கவலை வெளியிட்டார்.

முச்சக்கரவண்டி சாரதிகள் அதிக கட்டணம் அறவிட்ட நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சேவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற

நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சாரதிகள் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் டிட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் அட்டகாசம்

மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் மீசாலை மேற்கு பகுத்தியில் வீடு ஒன்றுக்குள் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் அதே வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர் .

வீட்டின் கதவை உடைத்த ஆவா கும்பல் அங்கிருந்த தொலைக்காட்சி,மோட்டார்சைக்கிள் மற்றும் உடைமைகள் என்பனவற்றைதீ எவைத்து எரித்தனர் .

மீசாலையில் வீடு எரிப்பு ரவுடிகள் டிட்டகாசம்

பின்னர் அங்கிருந்தடித்து தப்பி சென்றுள்ளனர் .

வீட்டில் இருந் பெண்கள் போட்ட அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்து அவர்களை காப்பாற்றினர் .

உடைமைகள் சேதமாக்க பட்ட பொழுதும் ,அங்கிருந்த மக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .

யாழ்ப்பாணத்தில் தொடரும் இவ்விதமான ரவுடி கும்பலின் செயல்பாடுகள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

யாழில் கொள்ளையர்கள் அட்டகாசம் – கத்திமுனையில் மிரட்டல்

யாழில் கொள்ளையர்கள் அட்டகாசம் – கத்திமுனையில் மிரட்டல் ,கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும்,

அதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோப்பாய் வீதியில் அதிகாலை 4 மணியளவில் முகத்தினை மறைத்தவாறு தொப்பி அணிந்துகொண்டு கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் நிற்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாலையில் திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி கொண்டு வருவோர், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், பத்திரிக்கை விநியோகிக்கும்

ஊழியர்கள் , தோட்டங்களுக்கு செல்வோரை இலக்கு வைத்து இந்த கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபையில் சாரதி, உள்ளிட்ட 6 ஊழியர்கள் மற்றும் யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றினை விநியோகத்திற்காக எடுத்து சென்ற

ஊழியர் என 7 பேரிடம் இருந்தும் 70 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவர்களின் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை கத்தி முனையில் வழிப்பறி கொள்ளையடித்துள்ளனர்.

சம்பங்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது
செய்தால் தான் தம்மால் அதிகாலை வேளைகளில் பயமின்றி வேலைகளுக்கு செல்ல முடியும் என
பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்