Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

அண்ணனுக்கு அகவை 63

அண்ணனுக்கு அகவை 63

எரிமலை வெடிக்கின்ற விழியடா – இவன்
எழுகின்ற திசை எங்கும் நெருப்படா ..
பணியாத பகை கொண்ட உளமடா- இவன்
பாய்கின்ற புலியணி தலைவண்டா……

தளராத குணம் கொண்ட புலியடா எந்த
தடை வந்தும் குலையாத புனிதண்டா ….
விலை போகா எங்கள் வீரண்டா-
விசாலமாய் படை கட்டி ஆண்டாண்டா …..

இவன் போலதலைவன் யாருண்டோ ..?
இனியேனும் யாரும் வருவாரோ …?
உறவாகி உள்ளத்தில் உறைந்தவன்
உணர்விலே கடவுளாய் நின்றவன் ……

இன்று நீ எழுச்சி கொண்ட நாள்
இல்லத்தில் எரிகின்ற பிறந்த நாள் …
வீரத்தின் உருவை வணங்குவோம்
விரைவிலே தருவான் ஈழம் நம்புவோம் …

ஆராரோ பாடும் அன்னையே – நீ
ஆயிரம் ஆண்டுகள் வாழ்வாய்….
இந்த நாள் உந்தன் இனிய நாள்
இரு கரம் கூப்பியே வாழ்த்தினோம் …!

வன்னி மைந்தன்– ( ஜெகன் )
-ஆக்கம் -26/11/2017

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    அழுதிட வைத்தெங்கே நீ போனாய்

    அழுதிட வைத்தெங்கே நீ போனாய்

    நேற்ரெங்கள் நிழலாகி நின்றாய்
    இன்றேன் எம் விழியில் நீர் தந்தாய்…?
    காற்றாகி நீ இன்று போய் விட்டாய்
    கண்ணீரால் தவிக்கின்றோம் பாராய் ….

    ஊற்றானாள் உன் முன்னே வீழ்ந்ததினால்
    உடல் விட்டு நீயும் பறந்தாயோ …?
    தேற்றுவார் இன்றி உன் உற்றாள்
    தேய்கிறாள் இவளை யார் கப்பார் …?

    கூற்றுவா ஏனின்று இவன் அழைத்தாய்
    கூடு விட்டேனோ நீ பிரித்தாய் …?
    பார் எங்கும் ஒளி வீசும் பிர சன்னா – நீ
    பாதியில் போனது துயர் அண்ணா …

    விழியிலே உந்தன் நிழல் உருத் தான்
    விளையாடுது இன்றும் எம் நண்பா ….
    பாசத்தை ஊற்றியே பழகியவா
    பாதியில் இழந்துன்னை தவிக்கின்றோம் …!

    • வன்னி மைந்தன்– ( ஜெகன் )
      -ஆக்கம் -25/11/2017
      நண்பன் – பிரசன்னா அவனது தாயார் இறந்த நாளில்
      விழி மூடிய துயர் அறிந்த போது ….
      எம் கண்ணீர் அஞ்சலி …
      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      மீண்டும் ஏன் என்னை தேடுகின்றாய்

      மீண்டும் ஏன் என்னை தேடுகின்றாய்

      தேறவில்லை கல்வியென்று
      தெருவெறிந்து போனவளே …
      ஓடி வந்து பாடுகிறாய்
      ஒரு தலையாய் தேடுகிறாய் …..

      ஊரெல்லாம் உன் பேச்சால்
      உருண்ட தொரு காலத்தில் – நீ
      காணாமல் போன போது
      காரிருள் படர்ந்ததடி ….

      என் எழுத்தாணி தலை குனிய
      ஏதறிந்து நான் எழுத …?
      வார்த்தைகளை தேடுகிறேன்
      வாயுக்குள் சிக்குதடி ……

      மீண்டும் ஏன் என்னை தேடுகின்றாய்

      விடை பெற்று போனவளே – என்
      விடுதிக்கு வந்ததென்ன …?
      ஏதெடுத்து யான் வழங்க
      என் மனதை தேடுகின்றாய் …?

      கடந்து வந்த காலங்களில்
      நடந்து வந்த நினைவுகளை …
      மீள் உனக்கு தருவேனா …?
      மீளா துயில் கொள்வேனா …?

      வன வாசம் போகாமல்
      மண வாசம் பற்றியதால் …
      உன்னை யான் மறப்பது தான்
      உலகத்தின் விதியாம் …?

      ஈடு வைக்க என்னிடத்தில்
      ஏதுமில்லை அறிந்திடுவாய் …
      ஏதெடுத்து நான் வழங்க
      என்னை ஏன் தேடி வந்தாய் ..?

      கூடு விட்டு போனவளே
      கூடு தேடி வந்து விட்டாய் ….
      நீ அழுது பயனில்லை – என்
      நினைவுகளில் நீயில்லை ……

      கந்தனவன் கோவணத்தை
      கை பிடிக்க போவதில்லை …
      விட்டு விடை பெற்றுவிட்டேன்
      விடயங்கள் புரிந்து விடு …

      கை மாறி போன பின்னே – நான்
      காரிகையை கரம் பிடித்தேன்
      கூடி வந்து வாழும் அவள்
      கூண்டை விட்டு போவதுவோ …?

      தேடி வந்த வாழ்கையில
      தேற்றங்களை தந்தவளை…
      வீசி விட்டு போவதுவோ …?- நான்
      விடை பெற்று செல்வதுவோ …?

      வன்னி மைந்தன் ( ஜெகன் )
      ஆக்கம் -18/11/2017

      வன்னி மைந்தன் கவிதைகள்

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        சிங்கபூரா சிங்கள நாடு – சிரிக்குது வாய்

        சிங்கபூரா சிங்கள நாடு – சிரிக்குது வாய்

        அண்டை நாட்டு கொண்டையில
        ஆடுதடா இந்த லங்கா …..
        மண்டையிலே எதுமில்லா
        மாமனாகி போன லங்கா …

        வல்லவனாம் சீனா வாலு
        வாடி போயு பிடித்த ஆளு ….
        துள்ளி இன்று பேசிறாங்க
        தூர கணை கொண்டவராம் …..

        பண்டை நாட்டு புத்தனவன்
        பாரதத்தை கொண்டவனாம் …..
        அந்த நாட்டு மடி தடவி
        ஆகா நல்லா பாடுதடா ……..

        சிங்கபூரா சிங்கள நாடு - சிரிக்குது வாய்
        சிங்கபூரா சிங்கள நாடு – சிரிக்குது வாய்

        சிங்க பூரா ஆக்குவாராம்
        சிரிக்குதடா வாய்கள் எல்லாம் ….
        வண்டி போகும் சாலை கண்டா
        வலியெடுக்கும் உடல்கள் எல்லாம் ….

        இந்த லங்கா எண்ணத்தில
        இருக்கு லஞ்சம் உள்ளத்தில …
        நாட்டை கொள்ளை அடிப்பவர்கள்
        நடு வாரா சிங்க பூரா …?

        வன்னி மைந்தன் ( ஜெகன் )
        ஆக்கம் -18/11/2017

        வன்னி மைந்தன் கவிதைகள்

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          உனக்காக காத்திருக்கிறேன் வா

          உனக்காக காத்திருக்கிறேன் வா

          உன்னை தேடுது என் மனமே
          என்னை தேடுது உன் மனமோ ..?
          பாடும் தென்றலே கூறிடுவாய் – இந்த
          பால் நிலவை வென்றிடுவாய் ….

          வானிலே உனக்கொரு வீடு கட்டி
          வைத்தேன் அதிலே ஊஞ்சல் கட்டி ….
          ஆடிட வந்தால் போதுமடி
          அகிலம் எந்தன் கையிலடி …..

          புல்லை மேயும் பனி துளியே
          பூவை சுமக்கும் அழகிடையே ….
          வெள்ளை ரோயா வாசமதை
          வெறி ஏற்ற தருவாயா ..?

          அன்பு கலந்த தேனமுதே
          அழகாய் சுரக்கும் தேம்ஸ் நதியே …
          எவரெஸ்ட் சிகரம் ஏறிடுவோம்
          எந்தன் அன்பே வந்திடுவாய் …..!

          வன்னி மைந்தன் ( ஜெகன் )
          ஆக்கம் -18/11/2017

          வன்னி மைந்தன் கவிதைகள்

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            உன்னை தேடி வருவேன் காத்திரு

            உன்னை தேடி வருவேன் காத்திரு

            விழுந்து விழுந்து நீ பேசும்
            விடயங்களை இரசிக்கிறேன் …
            விடலையில நான் தொலைத்த
            விடயங்களை ருசிக்கிறேன்….

            மூச்சு வாங்கி பேசும் உந்தன்
            முன்னழகு பிடிச்சிருக்கே …
            காற்று வந்து ஆடை விலக்கி
            காட்டும் மேனி பிடிச்சிருக்கே ….

            தடக்கி விழும் வார்த்தைகளின்
            தடையங்களை முகர்கிறேன்
            தனிமையதை தேடும் உந்தன்
            தாகமதால் துடிக்கிறேன் ….

            மேனி களைத்து உடல் வேர்த்து
            மோகத்தாலே துடிக்கிறாய் ..
            வெள்ளி நிலா ஓடிவர
            வேகம் பிடிக்க நினைக்கிறாய் ….

            தேகம் வேர்க்கும் வேலை வரும்
            தேவதையே பொறுத்திருப்பாய்
            தேடி வந்த பணி முடித்து
            தேடி வருவேன் காத்திருப்பாய் ….!

            வன்னி மைந்தன் (ஜெகன் )
            ஆக்கம் -25,08,2017

            வன்னி மைந்தன் கவிதைகள்

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              காரை நகர்

              காரை நகர்

              அலை வந்து தாலாட்டும்
              அழியாத ஊரு ….
              அதன் உள்ளே ஆடுதடா
              ஆக்கினைகள் நூறு …..

              சிங்களத்து வால் பிடிகள்
              சிரிக்கின்ற கூடு – இங்கே
              சிந்தை தமிழ் வாழ வைத்தார்
              சிலர் உள்ள வீடு ….

              முந்தை தமிழ் சாதிகளால்
              மூழ்கின்ற ஊரு …..
              முனேற்றம் காணாது
              மூட்டும் சண்டை பாரு ….

              உப்பு மண் போலான
              உள்ளங்கள் பாரு –
              உதவாத சிந்தையால்
              உதிர்கின்ற காடு ….

              கரை காண முடியாத
              காரை மா நகரு …..
              காலம் இக்கால
              களியாட்ட பேரு ……

              வன்னி மைந்தன் ( ஜெகன் )
              ஆக்கம் -21/09/2017

              வன்னி மைந்தன் கவிதைகள்

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                என்னை காப்பாற்றுங்கள் கதறும் கிளி …!

                என்னை காப்பாற்றுங்கள் கதறும் கிளி …!

                கூண்டில் அடைத்து சிரிக்கும் மனிதா
                கூண்டை திறந்து மகிழ்வாய் …
                வாழும் எந்தன் வாழ்வை ஏனோ
                வாடும் சிறையில் அடைத்தாய் ….?

                நீதி பேசும் மாந்தன் என்றால்
                நீதி கூறி நிற்பாய் ..?
                நீ பெற்ற பிள்ளை ஒன்றை
                நீயா வைப்பாய் கூண்டில் ..?

                சிறகை வெட்டி வைத்தால் நானும்
                சிரித்தே உலவி திரிவேன் ….
                சிறகு அடிக்க முடியா கூண்டில்
                சிறையில் வைத்தாய் பாவம் …

                நாளும் வடியும் எந்த கண்ணீர்
                நல்ல வாழ்வு தருமா ..?
                பிள்ளை என்று பிரியம் கொட்டும்
                பிரியமானீர் சொல்வீரோ …?

                இறந்த பின்னர் என்னை எண்ணி
                இதயம் கலங்கி அழுகாதே …
                இதயம் இல்லா நீவீர் எல்லாம்
                இருந்தா அழுவீர் மறக்காதே ….!

                வண்ணை மைந்தன் (ஜெகன் )
                ஆக்கம்-03/09/2017
                அன்பு தோழி ரேணுகா வீட்டில் கிளி ஒன்று சிறை பட்ட போது….

                Home » tamilpoeam » Page 2
                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                துயர் கண்டு சோராதே

                துயர் கண்டு சோராதே

                இடர் கண்டு ஓரு நாளும் இடியாதே
                இதயம் ஒடிந்து உயிர் மாயாதே ….
                வருகின்ற தடை எல்லாம் வளமாக்கு
                வருங்காலம் முடியும் தலை தூக்கு ..,,

                அறியாமை உனை பற்ற அழுகின்றாய்
                அதனாலே உயிர் விட முனைகின்றாய் ….
                ஏதொரு பொழுதிலும் எழுந்தாடு
                எமனோடும் நின்று போராடு …

                உனக்குள்ளே வலிமையை உள்ளேற்று
                உரமாகி எழுவாய் உனை நம்பு ….
                மாற்று சிந்தையில் மடம் கட்டு
                மலர்ச்சியை உந்தன் கை ஊட்டு .,.

                சிந்தையில் புதிதாக கொடி கட்டு
                சீக்கிரம் வெற்றிகள் உன் தோள்தட்டு …
                ஆக்கினை கூடிட என் செய்வாய் ?
                அழுவதால் என்ன நீ கண்டாய்..?

                தேற்றியே உன்னை நீ எழுப்பு .
                தேடிடும் உலகு உன் விருப்பு …,,
                ஏசிய உதடெல்லாம் உனை பாடும் -நீ
                எங்களின் உதராணம் என கூவும் ….!

                வன்னி மைந்தன் ( ஜெகன் )
                ஆக்கம் -29/08/2017
                அதிகரிக்கும் தமிழர்கள் தற்கொலைகளை எண்ணிய போது…..

                வன்னி மைந்தன் கவிதைகள்

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  நான் இறந்த பின் என் சொல்வாய் …?

                  நான் இறந்த பின் என் சொல்வாய் …?

                  கண்ணீரில் நீ குளிக்க
                  காளை மனம் வாடுதடி …
                  இது தீர வழியென்ன
                  இதயமே கேட்குதடி ….

                  அழுதழுது நீ களைத்து
                  அன்றாடம் களித்திருக்க …..
                  பொழுது வந்து எனை திட்டி
                  பொல்லாப்பை விதைக்குதடி ….

                  நீ எறிந்த கண்ணீர்க்கு
                  நியமாக நான் தானோ …?
                  ஏ தறிந்து எனை அடித்தாய்
                  ஏ மனமே பதில் சொல்லு …..

                  பழிக்குள்ள நான் சிக்கி
                  பலியாடாய் துடிக்கிறேன் ….
                  இருந்தென்ன லாபம் எண்ணு
                  இதயமும் உடைஞ்சிருச்சு ….

                  முச்சடங்கி வீழ்ந்தாலும்
                  முன்னே என்னை பார்க்காதே …
                  பேச்சடங்கி போன பின்னே
                  பேசியென்ன நீ காண்பாய் …?

                  -வன்னி மைந்தன் (T-ஜெகன் )
                  அக்கம் -15/08/2017

                  Home » tamilpoeam » Page 2
                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  உன் துயரில் …..அழுகிறோம் ….!

                  உன் துயரில் …..அழுகிறோம் ….!

                  செந்தமிழ் பாடிய செந்நிற மேனியை
                  செந்தணல் இன்று தின்பதோ ..?
                  எம்முடல் ஆவியாய் எமக்குள் நின்றானை
                  எமனே நீயும் கொல்வதோ…?

                  வந் தமிழ் ஊரினில் வளமுடன் நிமிர்ந்தான்
                  வாஞ்சை வீசியே எழுந்தான் ….
                  உறவுகள் மிளிர உணர்வுடன் நின்றான்
                  உயிரை ஏனோ பறித்தாய் …?

                  பாடியே அழைத்து பாசத்தை வீசி
                  பா வலனாகியே நின்றான் …
                  தொட்டியை கட்டி நீரது தேக்கி
                  தொழும் மாடுகள் குடிக்கவே வைத்தான் ….

                  அறமது நீட்டி ஆர தழுவிய
                  அகமது வீழ்ந்தது பேரிழப்பு …
                  உரமது இட்டே உயர வளர்ந்தவர்
                  உன்னை சுற்றியே அழுதனர் ….

                  வேதனை தாங்கி விழிகள் கதறிட
                  வேலவா ஏனடா சென்றாய் …?
                  சாதனை நாட்டி சாவிலும் எழுந்தாய்
                  சாதனை யாளனாய் சென்றுவா ….!

                  • வன்னி மைந்தன் -(ஜெகன் )
                    ஆக்கம் -10/08/2017
                    முரசுமோட்டை -இரண்டாம் கட்டை -ராசன் அண்ணாவின் ஆறா துயரில் தவிக்கும் குடும்பத்தார்க்கு என் கண்ணீர் சமர்ப்பணம்
                  Home » tamilpoeam » Page 2
                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  என்னை கொன்றிடு ….!

                  என்னை கொன்றிடு ….!

                  துயர் ஒன்று வந்தென்னை துண்டாடுதே
                  தூளாக்கி மனம் வீச பந்தாடுதே ….
                  வீசும் புயலாகி வலியாடுதே
                  விழியோடி மழையாகி குளிப்பாட்டுதே

                  கரை காண முடியாத கடலாகுதே – இறுதி
                  கல்லறை தேடும் முடிவாகுதே ….
                  வாலிப தவறொன்று இடியாகுதே
                  வான்வழி மின்னல் பொறியாகுதே….

                  கேள்விக்கு பதிலின்றி மனம் வாடுதே
                  கேலிக்கையாகி வாழ்வோடுதே …..
                  சதியென்று புதிராடி உறவாடுதே
                  சாவதை தேடியே மனம் ஓடுதே ….

                  இதுவென்ன வாழ்வா மனம் பேசுதே
                  இனியென்ன வாழ்வோ உயிர் கூசுதே
                  கண்ணீர்க்கு சொந்தம் யாரானதோ ..?
                  கை கூப்பி கும்பிட்டேன் எனை கொன்றிடு ….!

                  வன்னி மைந்தன் – (ஜெகன்-T )
                  ஆக்கம் -03,05,2017

                  Home » tamilpoeam » Page 2
                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  உயிர் பலியை தடுப்பது யார் …?

                  உயிர் பலியை தடுப்பது யார் …?

                  உயிர் குடிக்க தானே இந்த போர் நடக்குது
                  உலகம் எல்லாம் கூடி தானே பலி எடுக்குது …
                  பேச்சு மேசை ஒன்றும் இங்கே பேசவில்லையோ ..?- இந்த
                  பேரழிவு தடுக்கத்தானே கூடவில்லையோ ..?

                  ஆட்சியிலே உள்ள கதிரை ஆடவில்லையோ ..?
                  அதி காரம் தந்த மக்கள் காணவில்லையோ ..?
                  நீளும் இந்த போருக்குகிங்கு முடிவு இல்லையோ ..?
                  நின் மதியாக வாழும் நிலை தோன்ற கூடுமோ ..?

                  ஆடும் இந்த ஆட்டத்திலே ஏது தோன்றுமோ ..?
                  அழிந்த பின்னர் மாந்தர் இங்கே ஏது தேறுமோ ..?
                  காக்கும் ஆட்சி கண்ணை மூடி உறங்கலாகுமோ ..?
                  கள பலிகள் தடுக்கா ஆட்சி தேவையாகுமோ ..?

                  உயிர் பலியை தடுப்பது யார் …?

                  வலிகளாலே விழிகளும் நீரை கொட்டுதே
                  வந்து வெடிக்கும் கணைகளும் உயிரை தட்டுதே …
                  வாழும் இந்த வாழ்க்கையிலே ஏது மிஞ்சுமோ ..?
                  வழி காட்டும் உயர் மனிதமும் வீழ்ந்து போனதோ ..?

                  செய்தி செல்லும் ஊடகங்கள் செவிகள் இல்லையோ ..?
                  செய்து வைத்த அரசியலே சதிகள் கொல்லுமோ..?
                  ஓர் உலகாய் வாழும் மக்கள் உயிர்கள் இல்லையா ..?
                  ஒருவன் மாறி ஒருவர் அழித்தால் உலகு மிஞ்சுமா ..?

                  • வன்னி மைந்தன் -( ஜெகன் )
                    அக்கம் -06-03-2017
                  Home » tamilpoeam » Page 2