இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள் விசேட செய்திகள்

இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய கடல் சார் கண்காணிப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது .Attack on Israeli ship .

இஸ்ரேலியர்களுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது ,அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

கப்பலில் பணிபுரிந்த மாலுமிகள்

தாக்குதல் நடத்தப்பட்ட கப்பலில் பணிபுரிந்த மாலுமிகள் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், இதனால் மாலுமிகளுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் ,இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏமன் ஹவுதி போர் படை

ஏமன் ஹவுதி போர் படைகளின் பிரதமர் உள்ளிட்ட முக்கியமானவர்களை இஸ்ரேலியா இராணுவம் விமான வழி தாக்கத்தில் படுகொலை செய்திருந்தது.

இதற்கு பதிலடியாக செங்கடல் அரபு கடல் வழியாக பயணித்துக் கொண்டிருந்த, இஸ்ரேலியருக்கு சொந்தமான சரக்கு வர்த்தக கப்பல் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கப்பலின் பணியாளர்கள் காப்பாற்றப்பட்ட பொழுதும், கப்பல் மூழ்கடிக்கப்பட்டதா , அல்லது கப்பல் இயங்க முடியாத நிலையில் உள்ளதா என்பது தொடர்பான மேலதிகமான தகவல் எதுவும் தெரியவில்லை.