Tag: வடகொரியா
சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு கொல்க – கிம் ஜாங் உன் உத்தரவு
சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு கொல்க – கிம் ஜாங் உன் உத்தரவு
கொரோனா பரவலை தடுக்க சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு தள்ள வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளார்.
சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு தள்ள அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்
கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுடுவதற்கு அந்நாட்டு அரசு
உத்தரவிட்டுள்ளதாக, தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி தெரிவித்துள்ளார்.
உலகமே கொரோனாவால் நடுங்கிக் கொண்டிருக்க, வடகொரியா மட்டும், கொரோனா பாதிப்பு குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடுவது இல்லை.இந்நிலையில், தென் கொரியாவில் உள்ள
அமெரிக்க படை தளபதி ராபர்ட் அம்ரம்ஸ், கொரோனா பரவலை தொடர்ந்து ஜனவரி மாதம் சீனாவுடனான எல்லையை வடகொரியா
மூடியது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் அவசர நிலையையும் வடகொரியா அமுல்படுத்தியது. அதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து
வடகொரியாவுக்கு நுழைபவர்களை சுட வடகொரியா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில் எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. வடகொரியாவின் எல்லைப்பகுதி
நகரான கேசாங்கில் கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள்
அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

வடகொரியா இராணுவத்துக்குள் பெரும் ஊழல் – தயாராகும் மரண தண்டனை
வடகொரியா இராணுவத்துக்குள் பெரும் ஊழல் – தயாராகும் மரண தண்டனை
வட கொரியா அதிபர் கிங் யோங் உன் மிகவும் கொடியவர் என்கின்ற பரப்புரை உலக அரங்கில் மேற்கொள்ள பட்டு வருகிறது
அவர் மரணமானார் என்ற செய்தி பரவிய நிலையில் தற்பொழுது ,அதிரடி வேட்டையை ஆரம்பித்துள்ளார்
இராணுவத்திற்கு உரிய முறையில் உணவுகள் வழங்குவதில்லை எனவும் ,
அதற்கு ஒதுக்க பட்ட நிதிகளில் முக்கிய மேல் நிலை அதிகாரிகள் ஊழல் புரிந்துள்ளனர்
என்ற குற்ற சாட்டு எழுந்துள்ள நிலையில் ,தற்போது இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
புலனாய்வு துறை தலைவராக அவரது நெருங்கிய மெய்ப் பாதுகாவலர்
ஒருவரை நியமித்த இரண்டு நாட்களுக்குள் இந்த அதிரடி முடிவு அறிவிக்க பட்டுள்ளது
அப்படி என்றால் மிக முக்கிய இராணுவ தளபதிகள் இலக்கு வைக்க படுகின்றனர் ,
லஞ்ச ஊழல் மோசடி உறுதி படுத்த பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை உறுதி என அடித்து கூறலாம்
யார் அந்த தளபதிகள் என்பதை அறிந்திட உலகம் எதிர்பார்த்தது காத்துள்ளது

வட கொரியாவின் நில நடுக்கம் – ஏவுகணை சோதனையா ..?
வட கொரியாவின் நில நடுக்கம் – ஏவுகணை சோதனையா ..?
வட கொரியாவில் திங்கட்கிழமை இரவு ஏழு முப்பது மணியளவில் பாரிய
நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கினறன்
இந்த நில நடுக்கமானது வடகொரியாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Gangwon மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது
இதே பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தலாம் என எதிர்வு கூறப்பட்டு இருந்தது
அவ்விதம் இங்கு ஏதும் ஏற்பட்டு இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது
எனினும் இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
புதிய ஏவுகணை தளம் ஒன்றினை அமைத்து வருவதாகவும் விரைவில்
அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் புதிய சோதனையை
வடகொரியா நடத்த கூடும் என எதிர் பார்க்க பட்டு வரும் நிலையில் இந்த சம்பவவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிட தக்கது

வட கொரியா இராணுவம் கண்டு பிடித்த புதிய GPS கருவி-அதிர்ச்சியில் எதிரி நாடுகள்
வட கொரியா இராணுவம் கண்டு பிடித்த புதிய GPS கருவி-அதிர்ச்சியில் எதிரி நாடுகள்
உலக நாடுகளை விரல் விட்டு ஆட்டி வரும் வடகொரியா தற்பொழுது புதிய இராணுவ தொழில் நுட்பம் ஒன்றை கண்டு பிடித்துள்ளது
இவர்களினால் புதியவகையான் GPS jamming device கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
இதில் தொலை தொடர்புகள் ,குறும் செய்தி மற்றும் இணையம் என்பன
இயக்க படும் , தென் கொரியா இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து
தப்பித்து கொள்ளும் முகமாக புதிய தொழில் நுட்பத்துடன் இதனை கண்டு பிடித்த்துள்ளனர்
வட கொரிய , அதிபர் இதய அறுவை சிகிச்சை மேற் கொண்டு ஆபத்தான
நிலையில் இருந்து வரும் நிலையிலும் ,இல்லை அவர் இறந்து விட்டார்
என பரவி வரும் வதந்திகள் ,அல்லது உண்மையை அறிய கட்டவிழ்த்து விட்டுள்ள உளவு துறை செய்திகள் ஒருபுறம் பரவிட ,
அதை எல்லாம் கணக்கில் எடுக்காது வடகொரியா ஆரய்ச்சியாளர்களா தமது ஆயுத ,மற்றும் தொழில் நுட்பங்களில் புதிய சோதனைகளை நடாத்தி வருகின்றனர்
இந்த சோதனை கண்டுபிடிப்பு ,அமெரிக்கா ,ஜப்பான் ,தென் கொரியாவை பதற வைத்துள்ளது

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

- டிரம்ப் தாக்குதல் ரத்து

- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி

- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்

வடகொரியா திடீர் ராணுவ பயிற்சி
வடகொரியா திடீர் ராணுவ பயிற்சி
கொரியா எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையை விரைந்து நடத்திட நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வடகொரியாவின் விமானப்படை திடீர் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த ராணுவ பயிற்சி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.
நேற்று விமானப்படை மற்றும் விமான எதிர்ப்பு படையை சேர்ந்த பாராசூட் வீரர்களின் ராணுவ பயிற்சி நடைபெற்றது. இதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர், “வடகொரியாவின் ராணுவத்தை வெல்ல முடியாத ராணுவமாக உருவாக்குவதற்கும், போருக்கு தயார் நிலையில் இருப்பதற்கும் இப்படி அறிவிப்பு இல்லாமல் ஒரு பயிற்சியை மேற்கொள்வது அவசியம்” என கூறினார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வடகொரியா விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் “கிம் ஜாங் அன், நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும். கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துங்கள். விரைவில் உங்களை சந்திக்கிறேன்” என குறிப்பிட்டார்.






