வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது
Posted in உளவு செய்திகள்

வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

வடகொரியா இரண்டு குறும் தூர ஏவுகணை சோதனையை நடத்தியது .இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .

வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி தொடராக ஏவுகணைகளை தயாரித்து சோதனை புரிந்த வண்ணம் உள்ளது .

ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தென்கொரியா மற்றும் ,ஜப்பான் இணைந்து தெரிவித்துள்ளன .

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை பிராந்திய வல்லாதிக்க பகுதியில் பெரும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

தொடரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள், அமெரிக்கா ,மற்றும் எதிரி நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன .

வடகொரியாவிடம் சுனாமியை ஏற்படுத்தும் வல்ல ஏவுகணைகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

இதுவே எதிரி நாடுகளுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன .

அணு ஆயுத நாடக தம்மை சுய பிரகடனம் செய்திட்ட பின்னர் ,
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் தீவிரம் பெற்று வருவதை, இந்த சோதனைகள் காண்பிக்கின்றன .

தொடரும் கடும் பொருளாதார தடைகளிற்கு மத்தியிலும் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருவதே அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு வியப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன .