Tag: மோடி
றோவின் விளையாட்டு -யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரை இறங்கும் மோடி
றோவின் விளையாட்டு -யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரை இறங்கும் மோடி
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று முக்கியதத்துவம் வாய்ந்த இலங்கை பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்
இவர் எதிர்வரும் முப்பதாம் திகதி யாழ்ப்பாணம் விமான நிலையம் என பெயர் மாற்ற பட்டுள்ள பலாலி விமான நிலையத்தில் தரை இறங்குகிறார்
இந்தியாவில் இருந்து நேரடியாக தமிழர் வான் தளத்தில் தரை இறங்கும் முதலாவது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை இவர் தட்டி செல்கிறார்
இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பாக முக்கிய விடயங்கள் இதில் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது
தமிழ்க் கட்சிகளின் கடிதத்துக்கு அரசாங்கம் பதில்
தமிழ்க் கட்சிகளின் கடிதத்துக்கு அரசாங்கம் பதில்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்க் கட்சிகள் சில இணைந்து, கடிதமொன்றை
தயாரித்தது. அந்தக் கடிதம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் நேற்று (18) கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், இந்தக் கடிதம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அந்தக் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டிருக்கும் அமைச்சர் உதய கம்மன்பில,
“ எம்முடன் பேசாமல் எங்குச் சென்று பேசினாலும் அதில் பலன் இல்லை. இந்தியாவின் ஒரு
மாநிலம் இலங்கை இல்லை. இது தனிநாடாகும். ஆகையால், அந்தக் கடிதத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை” என்றார்.
மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக்- அதிர்ச்சியில் ஐயா
மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக்- அதிர்ச்சியில் ஐயா
பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மீட்கப்பட்டது.
பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு
பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பக்கம் PM @narendramodi என்ற பெயரில் உள்ளது. இதில் பல
மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக்- அதிர்ச்சியில் ஐயா
மில்லியன் பேர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு
ஹேக்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டது. பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் டுவிட்டர்
கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக
ஹேக்கர்கள் குறிப்பிட்டு இருந்தனர் ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் வெளியான பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது.
.
மோடியை சந்திக்க பறந்தார் – நிதியமைச்சர் பசில்
மோடியை சந்திக்க பறந்தார் -நிதியமைச்சர் பசில்
இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசிட இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸா
விரைந்துள்ளார்
இந்த சந்திப்பில் இலங்கை தொடர்பான அபிவிருத்தி மற்றும் முதலீடுகள் தொடர்பாக பேச
உள்ளார் என
தெரிவிக்க படுகிறது
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் -பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் -பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் -பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
புதுடெல்லி:
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
2014-ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் வேதனைகளை அறிந்தவன் என்பதால்தான்,
அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சரியான விதைகள், உரம், பயிர்க் காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல
மடங்கு உயர்ந்துள்ளது. பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சந்தைகளையும் வலுப்படுத்தி உள்ளோம். விளை பொருட்களுக்கான நியாயமான விலையை தற்போது விவசாயிகள் பெற்று வருகின்றனர்.
விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 3 வேளாண் சட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற
முடிவு செய்துள்ளோம். இந்த மாதம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான நடைமுறையை தொடங்குவோம்.
விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு
ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமெரிக்காவில் பிரதமர் மோடியை – வரவேற்ற இந்தியர்கள்
அமெரிக்காவில் பிரதமர் மோடியை – வரவேற்ற இந்தியர்கள்
வாஷிங்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோர் வரவேற்றனர்.
அமெரிக்காவில் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்ற இந்தியர்கள்
குவாட் மாநாடு, ஐநா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இன்று வாஷிங்டன் சென்றடைந்த அவரை விமான நிலையத்தில் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து
ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான அமெரிக்கவாழ் இந்தியர்கள் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுடன் மோடி கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்.
தனது சுற்றுப்பயணத்தின் முதல் நாளான இன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்,
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை மோடி சந்தித்து பேசுகிறார்.
மோடியை வரவேற்ற இந்திய பெண்கள்
மோடி உடனான சந்திப்பில் குவல்காம், அடோப், பர்ஸ்ட் சோலார், ஜெனரல் ஆட்டோமிக்ஸ், பிளாக்ஸ்டோன் நிறுவன தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஜோ பைடனை சந்திக்கிறார் பிரமதர் மோடி
ஜோ பைடனை சந்திக்கிறார் பிரமதர் மோடி
குவாட் அமைப்பின் உச்சி மாநாடு அமெரிக்காவில் செப்டம்பர் 24ம் தேதி நடைபெற உள்ளது.
செப்டம்பர் 24-ம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார் பிரமதர் மோடி – வெள்ளை மாளிகை
அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி
வாஷிங்டன்:
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு அமெரிக்காவில் வரும் 24-ம் தேதி நடக்க உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குவாட் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செப்டம்பர் 22-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். 23-ம் தேதி அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களைச் சந்திக்கிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரையும் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி வரும் 24-ம் தேதி சந்தித்துப் பேசுகிறார். அதன்பின், செப்டம்பர் 25-ம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை நிகழ்த்த உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மோடியை கண்டு பறந்த கொரனோ – கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் photo
மோடியை கண்டு பறந்த கொரனோ – கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் photo
இந்தியாவில் மிக வேகமாக கோரனோ நோயானது பரவி வரும் இவ்வேளையில் மோடியின் கட்சி கூட்டத்தில் ஆயிரக்கணக்கான் மக்கள் ஒன்று கூடி இருந்தனர்
இவ்வாறு கூடிய கூட்டங்களில் கொரனோ விதிகள் எதுவும் பின்பற்ற படவில்லை ,மக்கள் நோயினால்
பீடிக்க பட்டிக்கு அவர்களை கட்டு படுத்த முடியாது மருத்துவமனைகள் திணறி வருகின்றன ,
ஆனால் கூட்டங்களில் முட்டாள் தனமாக மக்கள் கூடியுள்ள காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

மோடி

மோடிக்கு எதிரான ஆர்ப்படத்தில் 10 பேர் மரணம் – பல டசின் பேர் காயம்
மோடிக்கு எதிரான ஆர்ப்படத்தில் 10 பேர் மரணம் – பல டசின் பேர் காயம்
பங்களாதேசுக்கு அரச முறை பயனைத்தை மேற்கொண்டு சென்றுள்ள மோடிக்கு எகிரக மக்கள் நடத்தி வரும்
ஆர்ப் பாட்டத்தில் சிக்கி இதுவரை பத்து பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலடசின் பேர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
இந்த மக்கள் கண்டன போராட்டம் இந்தியா பிரதமர் மோடிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேசத்திற்கு சென்றுள்ளார். வங்காள தேசத்தின் 50-வது தேசிய தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது.
நேற்று காலை பிரதமர் மோடி அங்குள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்றுள்ளார். கொரோனா பரவத் தொடங்கிய பிறகு அவர் கடந்த ஓராண்டாக எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை.
வங்காள தேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத் தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்ததையடுத்து நேற்று அவர் வங்காள தேசத்திற்குச் சென்றுள்ளார்.
நேற்று காலை வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு தனி விமானம் மூலம் சென்ற பிரதமர் மோடியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.
இதனை தொடர்ந்து வங்காளதேசத்தின் தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இதற்கிடையே, பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக அந்த நாட்டின் தலைநகர் டாக்காவில் மாணவர்கள் உள்பட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதலில் 40 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டம் தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள் அணிவகுப்பு நடத்திய நிலையில் போலீசார் அவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.
பிரதமர் மோடி வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள்மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டக்காரரகள் ஒரு போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடததினர். நாங்கள் அவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைச் சுட வேண்டியிருந்தது என போலீஸ் அதிகாரி ரபிகுல் இஸ்லாம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மோடி சீமானுக்கு விட்ட தூது – தெறிக்கவிட்ட சீமான் -வீடியோ
மோடி சீமானுக்கு விட்ட தூது – தெறிக்கவிட்ட சீமான் -வீடியோ
ஆளும் இந்திய பிரதமர் மோடியிடம் இருந்து சீமானுக்கு விடப்பட்ட தூது ,அதில் என்ன நடந்தது உடைக்கிறார் அந்த மர்மங்களை
மோடியின் அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயன்ற கும்பல்
மோடியின் அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயன்ற கும்பல்
பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகம் 7 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை என ஆன்லைன் விற்பனை தளமான ஒ.எல்.எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
பிரதமர் மோடியின் அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயன்ற கும்பல்
பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்றார். பிதமர் மோடியின் தொகுதி
அலுவலகம் வாரணாசியின் ஜவகர் நகர் பகுதியில் உள்ளது. 6 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவை கொண்டது அந்த கட்டிடம்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடத்தை புகைப்படம் எடுத்த ஒரு கும்பல் அந்த புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளமான ஒ.எல்.எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
மேலும், இந்த கட்டிடம் விற்பனைக்கு உள்ளது எனவும் அதன் விலை 7 கோடியே 50 லட்சம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு படம்
மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடம் விற்பனைக்கு என ஆன்லைனில் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து உத்தரபிரதேச போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அலுவலக கட்டிட புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளத்தில் பதிவேற்றம் செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடத்தை ஒ.எல்.எக்ஸ். வலைதளத்தில் விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் – வழக்கு விசாரணைக்கு தடை
மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் – வழக்கு விசாரணைக்கு தடை
பிரதமர் மோடியை விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
மோடியை விமர்சித்த பத்திரிகையாளர் – வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
சுப்ரீம் கோர்ட்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக பத்திரிகையாளர் வினோத் துவா மீது, பா.ஜ.க.வை சார்ந்த அஜய்
ஷ்யாம், சிம்லா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பயங்கரவாத தாக்குதல்களையும், மரணங்களையும் வாக்கு வங்கி
அரசியலுக்கு பிரதமர் பயன்படுத்தி ஆதாயம் அடைவதாக வினோத் துவா பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு
மற்றும் இமாச்சல பிரதேச அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், வினோத் துவாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.
இருப்பினும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்குமாறு வினோத் துவா விடுத்த கோரிக்கைக்கு மறுப்பு
தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை தொடர்ந்து நடத்த சிம்லா போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளன






