ஜோ பைடனை சந்திக்கிறார் பிரமதர் மோடி

Spread the love

ஜோ பைடனை சந்திக்கிறார் பிரமதர் மோடி

குவாட் அமைப்பின் உச்சி மாநாடு அமெரிக்காவில் செப்டம்பர் 24ம் தேதி நடைபெற உள்ளது.

செப்டம்பர் 24-ம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார் பிரமதர் மோடி – வெள்ளை மாளிகை
அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி
வாஷிங்டன்:

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு அமெரிக்காவில் வரும் 24-ம் தேதி நடக்க உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குவாட் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செப்டம்பர் 22-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். 23-ம் தேதி அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களைச் சந்திக்கிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரையும் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி வரும் 24-ம் தேதி சந்தித்துப் பேசுகிறார். அதன்பின், செப்டம்பர் 25-ம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை நிகழ்த்த உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *