02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி
Posted in வன்னி மைந்தன் உதவி

02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி

02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி

02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி ,இத்தாலியைச் சேர்ந்த மயூரன் ஜேசுதாஸ் அவர்கள் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக வழங்கப்படும் 100 துவிச் சக்கர வண்டி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று இரு மாணவர்களுக்கு உதவியுள்ளார்.

வன்னி மைந்தன் வானொலியில்

வன்னி மைந்தன் வானொலியில் தனது குரல்களை பதிவு செய்து வருகின்ற அறிவிப்பாளராக விளங்கி வரக்கூடிய மயூரன் ஜேசுதாஸ் அவர்களே,

இந்த இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை பெறுவதற்கு நிதி வழங்கினார்.

இவர் வழங்கிய 55 ஆயிரம் ரூபாய் நிதி பங்களிப்பில் இந்த இரண்டு மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் மேலதிகமாக வழங்கி போக்குவரத்து செலவுக்காக வழங்கிய அவருக்கு இந்த வேளையில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள மிகப் பெரும் உதவி

நீங்கள் வழங்கிய இந்த மிதி வண்டிகள் ஊடாக இரு மாணவர்கள் மகிழ்வடைந்துள்ளதுடன், அவர்கள் கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள

மிகப் பெரும் உதவியாக அமையும் என, ஆசிரியர்கள் மாணவர்கள் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த உதவியை வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் அவர்களுக்கு வன்னி மைந்தன் டிக் டாக் தளம் மற்றும் எதிரி இணையம் என்பன பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இதில் அழுத்தி காணொளி பார்க்க