தனியார் பேருந்து
Posted in இலங்கை செய்திகள்

இரு பேருந்து மோதி விபத்து பலர் படுகாயம்

இரு பேருந்து மோதி விபத்து பலர் படுகாயம்

பேருவலையில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி – கொழும்பு நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் ஒன்றும், கொழும்பு – கதிர்காமம் நகரங்களுக்கு இடையில்

சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதுண்டுள்ளன.

விபத்தில் காயமடைந்த 6 பேர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி
Posted in இலங்கை செய்திகள்

மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி

மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி

மன்னம்பிட்டிய பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற விபத்தில் குறித்த பஸ் உரிய முறையில் அனுமதிப்பத்திரத்தைப் பெறாமல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (11) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி

மன்னம்பிட்டி விபத்து; பேருந்து தொடர்பான அதிர்ச்சி செய்தி

ND7804 இலக்கம் கொண்ட குறித்த பஸ் , தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடமிருந்து உரிய முறையில் அனுமதிப்பத்திரத்தை பெற்றிருக்கவில்லை.

கிழக்கு மாகாண சபையால் , 2018ஆம் ஆண்டு குறித்த பேரூந்துக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திர உரிமையாளருக்கு இதற்கு முன்னரும் நீதிமன்றத்தில் 10 000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை செலுத்திய பின்னரும் அவர் இவ்வாறான தவறை இழைத்துள்ளார் என்று தெரிவித்தார்

பிரதமரின் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்து
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து கட்டணம் குறைப்பு

பேருந்து கட்டணம் குறைப்பு

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணத்தை குறைக்க தீர்மானமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 10 சதவீதத்தினால் பேருந்து கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது.

No posts found.
பேருந்து விபத்தில்
Posted in இலங்கை செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த பேருந்து

பள்ளத்தில் பாய்ந்த பேருந்து

ஹட்டன், சலங்கந்தை பகுதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியைவிட்டு 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இன்று (08) காலை 8.30 மணியளவில், சலங்கந்தை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சலங்கந்தை பஸ் தரிப்பிடத்துக்கு பயணிகளை ஏற்றிச்செல்ல பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இயந்திரகோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்விபத்து தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

    பேருந்து ஒன்றை
    Posted in இலங்கை செய்திகள்

    பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவர் கைது.

    பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவர் கைது.

    குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பேருந்து ஒன்றை பல துண்டுகளாக பிரித்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் 39, 46, 53 வயதுடைய கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

    பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில்

    மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கராஜ மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக

    விசாரணைகளுக்காக மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    Posted in Uncategorized

    அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: பஞ்சாப் அரசு அறிவிப்பு

    அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: பஞ்சாப் அரசு அறிவிப்பு

    அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் செய்துகொள்வதற்கான திட்டத்திற்கு பஞ்சாப் சட்டப்பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று முதல்-மந்திரி அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

    பஞ்சாபில் அரசுப் பேருந்துகளில் மாநிலத்திற்குள்ளாகவே பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளும் சட்டத்திற்கு இன்று பஞ்சாப் பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இது தொடர்பாக முதல்-மந்திரி அமரீந்தர் சிங் தனது டுவிட்டரில் கூறியதாவது:-

    அமைச்சரவையில் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் ஏப்ரல் 1 முதல் மாநிலத்திற்குள்ளாகவே பெண்கள் மற்றும்

    மாணவிகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். பஞ்சாப் பெண்களின் முன்னேற்றத்தை நோக்கிய அழுத்தமான முயற்சியாக இது அமையும் என்று பதிவிட்டுள்ளார்