Tag: நாக சைதன்யா
நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு
நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு
நடிகை சமந்தா, கணவரை பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு நடிகை வனிதா விஜயகுமார் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
விவாகரத்து விவகாரம் – நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு
வனிதா, சமந்தா, நாக சைதன்யா
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக கடந்த வாரம் அறிவித்து இருந்தனர். அவர்களது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள்
கூறப்பட்டு வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார் சமந்தா. இதையடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை வனிதா தெரிவித்துள்ளதாவது: “இங்கே சமூகம் என்று எதுவும் இல்லை. உன் வாழ்க்கை வாழ அறிவுரை மட்டும் தான் கூறுவார்கள். மக்கள்
நாம் பதிவு செய்யும் புகைப்படங்களை மட்டும் தான் பார்ப்பார்கள். நம்மை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. இனி உன் வாழ்க்கையை நோக்கி நீ முன்னேறி கொண்டே இரு. உனக்கான வலிமை கூடட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள் – சித்தார்த்
ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள் – சித்தார்த்
சமூக வலைதளமான டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த், அவ்வப்போது அதில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள் – சமந்தாவை சாடுகிறாரா சித்தார்த்?
சித்தார்த், சமந்தா, நாக சைதன்யா
சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமண முறிவு குறித்து அறிவித்துள்ள நிலையில், நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு டுவிட் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள் என்பது சிறுவயதில் நான் ஆசிரியரிடம் கற்ற பாடங்களில் ஒன்று” என கூறியுள்ளார். சமந்தாவை மனதில் வைத்து தான் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
நடிகை சமந்தா, நாக சைதன்யாவை காதலிப்பதற்கு முன்பாக நடிகர் சித்தார்த்தை காதலித்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. இருவரும் பல்வேறு விழாக்களில் கூட ஒன்றாக வந்து கலந்து
கொண்டனர். திருமணம் செய்து கொள்வார்கள் என்றெல்லாம் கூறப்பட்டு வந்த நிலையில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து தான் நாகசைதன்யாவுடன் காதல் வயப்பட்டு பின்னர் அவரையே சமந்தா திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
சமந்தாவுடன் விவாகரத்தா
சமந்தாவுடன் விவாகரத்தா
நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது.
சமந்தாவுடன் விவாகரத்தா? – முதன் முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா
சமந்தா, நாக சைதன்யா
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும்
நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகை சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற வதந்தி வெகுநாட்களாகவே உலவுகிறது. சமீபத்தில்
திருப்பதி வந்த சமந்தாவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பதில் அளிக்காமல் கோபப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த நாகசைதன்யா, சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “நான் சிறுவயதில் இருந்தே
திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய தாய், தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் இருவரும் படப்பிடிப்பு
முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் அதை கடைபிடித்து வருகிறேன்.
சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது, எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே
வந்து விடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்படும், முந்தைய நாள் செய்திகள் மறந்து விடுகின்றன. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன், நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன்” என்று கூறியுள்ளார்.






