Tag: துருக்கி விமானம்
துருக்கி விமானம் இலங்கையில் தரையிறக்கம் தப்பிய பயணிகள்
துருக்கி விமானம் இலங்கையில் தரையிறக்கம் தப்பிய பயணிகள்
துருக்கி விமானம் இலங்கையில் தரையிறக்கம் தப்பிய பயணிகள் ,துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் BIA-வில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
நேற்று இரவு கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) துருக்கிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று
தரையிறங்கும் கியர் கோளாறு குறித்து புகார் அளித்ததை அடுத்து பாதுகாப்பாக தரையிறங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இஸ்தான்புல்லுக்கு இயக்கப்படும் TK-733 விமானம், 202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம், கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட
தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு
சிறிது நேரத்திலேயே அதன் தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் விளைவாக, BIA-வில் ஓடுபாதை அவசர தரையிறக்கத்திற்குத்
தயாராக இருந்தது, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருந்தன.
இந்த செயலிழப்பைத் தொடர்ந்து, தரையிறங்கும் போது ஏற்படும் அபாயங்களைக் குறைக்க விமானி கடலில் முன்னெச்சரிக்கை எரிபொருள் நிரப்புதலை மேற்கொண்டார்.
விமானம் இறுதியில் BIA-வில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இருப்பினும், இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்திலிருந்து புறப்பட திட்டமிடப்பட்ட பிற விமானங்கள் தாமதங்களை சந்தித்தன.
விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு கொண்டு
செல்லப்படுவதாகவும், விமானத்தை பழுதுபார்ப்பதற்காக நகர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொறுப்பாளர் மேலும் தெரிவித்தார்.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
வடக்கு சிரியாவில் அலெப்போ பகுதிகளில் அமைந்துள்ள ,சிரியா இராணுவத்தின் , முன்னரங்க நிலைகள் மீது, துருக்கிய இராணுவ போர் விமானங்கள் ,அகோர வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன .
துருக்கி போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் டசின் கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
மேலும் துருக்கி விமானங்களின் தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் படுகாயமடைந்து உள்ளத்துடன் ,குறித்த இராணுவ நிலைகள் பலத்த சேதமடைந்த்துள்ளன.
சிரியா நாட்டின் வடக்கு பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கி இராணுவம் ,பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .
ஐம்பதயிரம் துருக்கி இராணுவம் குவிக்க பட்டுஉள்ளனர்.
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி இராணுவ குழுக்கள், மற்றும் துருக்கி இராணுவம் என்பன ,சம வேளையில் விமான ஆதரவு தாக்குதல்களை, நடத்திய வண்ணம் உள்ளனர்.
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
பத்து ஆண்டுகளாக ,சிரியா நாட்டின் மீது ,பல் நாட்டு ,கூட்டு படைகள், தொடர் இராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர்.
இந்த இராணுவ தாக்குதல்ககளில் , சிக்கி இதுவரை ,இரண்டு லட்சம் சிரியா மக்கள் பலியாகியுள்ளனர்.
மேலும். முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள். சிரியாவை விட்டு .அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
சிரியா நாடு எங்கும் சுடு காடாக காட்சியளிக்கிறது .
முக்கிய பழைமை வாய்ந்த புராதன நகரங்கள் , என்பன குண்டுகளின் தாக்குதலில் சிக்கி இடிந்துள்ளன.
மிக பெரும் பெரும் , வரலாற்று பெருமை கொண்ட ,பகுதிகளும் சுடுகாடாக காட்சியளிக்கிறது .
பல் நாட்டு இராணுவத்தினரின் ,கூட்டிணைந்த தாக்குதல் ஊடாக ,அழகிய சிரியா நாடு இன்று அழகிழந்து தவிக்கிறது.
சிரியா இராணுவத்தினருக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் குதித்துள்ளது .
சிரியாவின் வடக்கு பகுதிகளில் குருதீஸ் போராளிகள் ,தமது தாயகம் கோரி போராடி வருகின்றனர்.
அவ்வாறான எல்லை பகுதிகள் மீது துருக்கி இராணுவம், பெரும் தாக்குதலை தற்போது நடத்திய வண்ணம் உள்ளது .
குருதீஸ் போராளிகளை ,முற்றாக அழிக்கும், துடைத்தழிப்பு ,தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் ,சிரியா இராணுவத்தின் நிலைகள் மீதும் விமான தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .
அரேபிய நாடுகளில் ,குட்டி அமெரிக்காவாக ,துருக்கி தன்னை அடையாள படுத்தி ,அடக்குமுறை இராணுவ வன்முறை தாக்குதல்களை மேற் கொள்கின்றமை குறிப்பிட தக்கது .









