ஜே ஆர்க்கு மரணதண்டனை வழங்க கோரிய ஜேவிபி சிக்கிய அனுரா
Posted in இலங்கை செய்திகள்

ஜே ஆர்க்கு மரணதண்டனை வழங்க கோரிய ஜேவிபி சிக்கிய அனுரா

ஜே ஆர்க்கு மரணதண்டனை வழங்க கோரிய ஜேவிபி சிக்கிய அனுரா

ஜே ஆர்க்கு மரணதண்டனை வழங்க கோரிய ஜேவிபி சிக்கிய அனுரா ,ஜே. ஆர்.-க்கு மரணதண்டனை நிறைவேற்றக் கோரியவர்கள் இன்று ஒரு மாற்றத்தைக் கொண்டுவரத் தவறிவிட்டனர்.

ஜனாதிபதி ஜே. ஆர்.

1980-களில் மறைந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனவுக்கு மரணதண்டனை நிறைவேற்றக் கோரி சுவரொட்டிகளை ஒட்டியவர்கள், ஓராண்டுக்கும் மேலாக

ஆட்சியில் நீடித்திருந்தபோதிலும், திரு. ஜெயவர்தனவின் கொள்கைகளை மாற்றத் தவறிவிட்டனர் என்று ஒரு மூத்த ஊடகப் பிரமுகர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் எழுதிய “நான் விரும்பாத ஜே. ஆர்.” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய சர்வதேச ஊடக

ஆதரவின் பிராந்திய ஆலோசகர் (ஆசியா) டாக்டர் ரங்கா கலன்சூரிய, இலங்கையில் ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையில் அளித்த

வாக்குறுதியின்படி ஒரு அமைப்பு மாற்றத்தைக் கொண்டுவரத் தவறிவிட்டனர் என்று கூறினார்.

மறைந்த ஜனாதிபதி ஜெயவர்தன

மறைந்த ஜனாதிபதி ஜெயவர்தன குறித்து அகில இந்திய வானொலியிடம் நான் தகவல் கோரினேன். அவருக்கு ஒரு வியூக ரீதியான அரசியல் தொலைநோக்குப் பார்வை இருந்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இன்றுவரை நம்மால் அவருடைய தொலைநோக்குப் பார்வையிலிருந்து வெளியே வர முடியவில்லை. ஜெயவர்தனவை விமர்சித்தவர்களால்

அரசியலமைப்பை மாற்ற முடியவில்லை என்றும், அது விதியின் திருப்பமாகிவிட்டது என்றும் திரு. பக்கீர் மார்க்கர் ஒருமுறை கூறினார்.

ஜெயவர்தனவின் மரணத்தைக் கோரி சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் ஓராண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தும் அவர்களால் அதை மாற்ற முடியவில்லை. அவருடைய பொருளாதாரக் கொள்கை மாறவில்லை.

திரு. ஜெயவர்தனவின் வாரிசுகளாகப் போட்டியிடக் குறைந்தது ஐந்து பேராவது இருந்தனர். இன்று அரசியல் தலைமைக்குத் தகுதியான வாரிசுகள் யாரும் இல்லை.

இங்கே பேசிய அரசியல் பிரமுகர் ரேஹான் ஜெயவிக்ரம, இளைஞர்களுக்கு இடம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

“இளைஞர்கள் தலைவர்களாக உருவாக வளர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பை ஜேவிபி கண்டனம்
Posted in இலங்கை செய்திகள்

வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பை ஜேவிபி கண்டனம்

வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பை ஜேவிபி கண்டனம்

வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பை ஜேவிபி கண்டனம் வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பை ஜேவிபி கண்டிக்கிறது.

சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட வெனிசுலா

சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பையும், ஜனநாயக ரீதியாக

தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கடத்தப்பட்டதையும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கடுமையாகக் கண்டிக்கிறது.

வேறு எந்த சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட அரசையும் போலவே, நாட்டின் எதிர்காலத்தையும் தலைவர்களையும் தீர்மானிக்கும் உரிமை

வெனிசுலா மக்களிடமே உள்ளது என்று ஜேவிபி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இந்தக் கொள்கையை மீறும் அதிகாரம் சக்திவாய்ந்த நாடுகளுக்கு இல்லை” என்று அது கூறியது.

நவீன சமூகமும் ஆட்சியும் நாகரிகமாக இருக்க வேண்டும்

“நவீன சமூகமும் ஆட்சியும் நாகரிகமாக இருக்க வேண்டும். ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நாடுகளின் இறையாண்மை ஆகியவை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள்.

இந்தக் கொள்கைகளை மீறி இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்புகள் மற்றும் படையெடுப்புகளை நியாயப்படுத்த முடியாது.

அந்த வகையில், அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெனிசுலாவுக்கு எதிரான பலவந்தமான இராணுவ ஆக்கிரமிப்பை யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

அதன்படி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெனிசுலா மீதான இராணுவ ஆக்கிரமிப்பை நாங்கள் கண்டிக்கிறோம்,

மேலும் வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்காக நிற்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி
Posted in இலங்கை செய்திகள்

புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி

புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி

 புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி ,தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஜேவிபி அமைப்பினர் ஆயுதங்களை வழங்கியதாக, புலிகள் முன்னாள் தளபதி பிள்ளையான் தெரிவித்துள்ளார் .

அனுராதா திசநாயக்காவின் கருத்துக்கு பதில் அளிக்கும் பொழுதே சிவநேசதுரை பிள்ளையான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதபற்ற குறையால் தள்ளாடிக் கொண்டிருந்த ஆரம்ப கால பகுதியில் , ஜேவிபி அமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெருந்தொகையில் ஆயுதங்களை வழங்கியதாக பிள்ளையான் தெரிவித்தார் .

அதனை அடுத்தே பாரிய வெற்றியை தாங்கள் பெற்றதாகவும் , பல்வேறுபட்ட தாக்குதலை சிங்கள இராணுவத்திற்கு எதிராக நடத்தியதாக, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியாகவும் உறுப்பினராக விளங்கிய பிள்ளையான் தெரிவித்துள்ளார் .

தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆயுதம்

இன்றைய ஆளும் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக விளங்கி வரும் பிள்ளையான் ,தற்பொழுது தான் மட்டக்களப்பில் மக்களை மிரட்டி வருவதற்கான குற்றச்சாட்டை முற்று முழுதாக மறுத்து வருகிறார் .

புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி

இவ்வாறு மிரட்டப்பட்டால், எனக்கு எவ்வாறு மக்கள் பெருந்தொகையில் வாக்குகளை அளிப்பார்கள் என, பிள்ளையான் கேள்வியை எழுப்பி இருக்கின்றார் .

தமிழில் விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவர்கள் வரிசையில் இன்று வரை பிள்ளையான் கருணா முதலிடம் வகிக்கின்றனர் .,

அவ்வாறான நிலையில் எதிர்வரும் தேர்தலில் பல கட்சிகள் போட்டியினை நடத்திட தயாராகி வருகின்ற நிலையிலும் ,ரணில் விக்கிரமசிங்காவை பிள்ளையார் சந்தித்த நிலையில் .

தற்பொழுது அனுராதிசநாயக்காவுக்கு எதிராக இந்த கருத்தை இராயங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்டுள்ளார் .

மட்டக்களப்பில் மக்களை மிரட்டி வருகிறார் பிள்ளையார் என்ற குற்றச்சாட்டை அனுரா திசாநாயக்க வெளியிட்டு இருந்தார் .

அதற்கு பதில் வழங்கும் முகமாகவே தற்பொழுது புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியது ஜேவிபி என்கின்ற விடயத்தினை தற்போது உலக அரங்கில் பிள்ளையான் அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றார்.

பிள்ளையான் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கும் எனவே ஒட்டுமொத்த உலகத்தமிழர்களும் அப்படியே நம்புகிறார்கள் என்பதாகவும் மக்கள் இப்படியும் கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள் .

எதிர்வரும் தேர்தலில் பலத்த போட்டி தயாராகி வருகின்ற நிலையில் ,தற்பொழுது சூடு பறக்கும் தேர்தல் பரப்புரைகளும் ,கட்சிகள் மீது நடத்தப்படும் வன்ம தாக்குதல்களும் வெடித்து பறக்கின்றன .

சுமந்திரனை அவமானப்படுத்திய ஜேவிபி செயல் அருவருப்பானது
Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரனை அவமானப்படுத்திய ஜேவிபி செயல் அருவருப்பானது

சுமந்திரனை அவமானப்படுத்திய ஜேவிபி செயல் அருவருப்பானது

ஜே.வி.பியின் மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாக சுமந்திரன் வந்திருந்தார் எனக் கூறி சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

யாழப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் கேட்டதற்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில் –

அண்மையில் தென்னிலங்கை தேசிய கட்சியான ஜே.வி.பி கட்சி தனது கட்சி மாநாடொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தது.

இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காமல் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் சென்றதாக ஜேவிபியின் பேச்சாளர் எனக் கூறுபவர் ஊடக சந்திப்பொன்றில்தெரிவித்துள்ளார்.

தமது நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவரை அவமானப்படுத்தும் வகையில் ஏன் அவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை.

இதேநேரம் மாநாடொன்றிற்கு ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது இயல்பான ஒன்றுதான்.

அதேநேரம் கட்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்டால் அந்த அழைபை ஏற்று அழைக்கப்பட்ட கட்சியின் சார்பில் எவரும் செல்லமுடியும்.

அந்த வகையில்தான் சுமந்திரனும் சென்றிருப்பார் என நினைக்கின்றேன்.

அந்தவகையில் சுமந்திரனை அவமானப்படுத்தும் வகையிலேயே குறித்த பேச்சாளர் கூறியுள்ளார் என்றே நான் கருதுகின்றேன்.

அத்துடன் அத்தகைய அவமானப்படுத்தும் செயல் எனக்கு பிடிக்கவில்லை.

இதேவேளை குறித்த கட்சி ஒரு தேசிய கட்சி.
இவ்வாறான நிலையில் அண்மையில் குறித்த கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியா சென்றிருந்தனர்.

இந்தியா சென்ற அவர்கள் தமிழர் பிரச்சினை பற்றி பேசியிருக்க மாட்டார்கள் என்பதோடு, அது தொடர்பில் பேசுவதற்கும் விரும்பியும் இருக்காது.

அதேநேரம் மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசியிருக்கலாம்.
ஆனால் அவ்விடயம் தொடர்பில் வாய்பொத்தியிருந்துள்ளனர்.

இதேநேரம் அரசியலுரிமை தொடர்பில் அவர்கள் பேசியிருக்கமாட்டார்கள் என்று எனக்கு நன்கு தெரியும்.

ஆனால் மீனவர் பிரச்சினை தொடர்பில் அங்கு பேசவில்லை என்பது எனக்கு மனவருத்தமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.