சோயா மீட் இப்படி செஞ்சு அசத்துங்க Make soymeat this way and it's amazing.
Posted in சமையல் சமையல் cook

இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட் ,இப்படி செஞ்சி அசத்துங்க வீட்டில உள்ளவங்க எல்லாம் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க.Make soymeat this way and it’s amazing.

சோயா மீட், முட்டை போட்டு வறுங்க

சோயா மீட், முட்டை போட்டு இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து, பச்சை மிளகாய் வெங்காயம், தூளெல்லாம் போட்டு அப்படியே வறுத்து சாப்பிட்டா இதை போல சுவை எப்பொழுதுமே வராது.

இந்த காணொளியை பாருங்க ,சிறுவர்கள் முதல் பெரியவள் வரை விரும்பி விரும்பி அடிபட்டு சாப்பிட கேட்கும் ஒரு அற்புதமான சாப்பாடு.

நான் கூட இன்று தான் இந்த செய்முறை பார்க்கிறேன் வாயூறுது இன்னைக்கு ஒரு புடி புடிக்கலாம் வாங்க.

வாயூறுது இன்னைக்கு ஒரு புடி புடிக்கலாம் வாங்க.

இன்றைய சமையல் கலை நிபுணர் இன்று இந்த சமையலை எமக்கு செய்து அற்புதமாக காண்பித்துள்ளார் .

நாள்தோறும் எமது வீட்டில் இப்படி செஞ்சு அசத்துங்க .கடைச்சுவைய மிஞ்சம் சுவையாய் இருக்கும் வாங்க சுவைக்கலாம்.

காணொளி எப்ப பாருங்க

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க
Posted in சமையல் cook

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க

தினமும் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிகுதா,அப்படின்னா இதோ இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க .
மிக இலகுவான தரமான ,மிக சுவையான சமையல் .

பிள்ளைங்க முதல் வயதானவர்கள் வரை ,மிகவும் விரும்பி உண்ணும் உணவு .

அப்புறம் என்ன குஷி தாங்க .

இட்லி தோசைக்கு பதிலாக சுவையான டிபன் செய்முறை ஒன்று

மிக்சிங் போல் ஒன்றில் ஒரு கப் கோதுமை மாவு ,அரை கரண்டி உப்பு ,அரை கரண்டி மஞ்சள் ,அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல நன்றாக பிசைந்து மாவு எடுங்க .இப்போ மாவு ரெடியாடிச்சு

செய்முறை இரண்டு

இப்போ அவிய வைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கு, நன்றாக கட்டி இல்லாம மசிய வைத்து எடுங்க .
கூடவே ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது சேர்த்து கொள்ளுங்க .

இட்லி தோசைக்கு பதிலாக இப்படி சுவையாக செஞ்சு அசத்துங்க

அப்புறம் மூன்று பச்சை மிளகாய் ,கூடவே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ,கருவேப்பிலை கொஞ்சம் ,அரை கரண்டி இஞ்சி பூண்டு ,தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி சாட்மசாலா சேர்த்து கலக்கி விடுங்க .

அதன் பின்னர் காரம் மசாலா ,மஞ்சள் தூள் சேர்த்து, மசாலா தொக்கு செய்து கொள்ளுங்க .இப்போ இதுவும் ரெடியாடிச்சு .

செய்முறை மூன்று

சப்பாத்தி மாவை சப்பாத்தி போல தேய்த்து எடுத்து கொள்ளுங்க .இப்பபோ சப்பாத்தி மாவுக்கு நடுவில செய்து வைத்த சாட்பிங் மசாலாவை ரோல் போல சுற்றி எடுங்க .

இப்போ கத்தி வைத்து இரண்டு இஞ்சி அளவு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்க .

துண்டுகளாக வெட்டியதை அப்படியே தட்டை போல தட்டி எடுங்க .இப்போ இவற்றை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளுங்க .

இப்போ செம்மையான டிபன் சுட சுட ரெடியாகிடிச்சு .

இட்டலி தோசைக்கு பதிலாக, சைடீஸ் இல்லாம சாப்பிடலாம் .
குழந்தைகள் எல்லாருமே நனறாக விரும்பி சாப்பிடுவாங்க .

இதுபோலவே நீங்களும் செஞ்சு அசத்துங்க மக்களே.

அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்
Posted in சமையல் cook

அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்

அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்

அவல் லட்டு செஞ்சு அசத்துங்க .இந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம் .
ஆம் உண்மை தான் .பத்து நிமிடத்தில் விரைவாக செய்திடவல்லது ,இந்த லட்டு .

வாங்க இப்போ ,அவல் லட்டு செய்வது எப்படி என்பதை பார்ப்போம் .

செய்முறை ஒன்று

மிக்சி எடுத்திருங்க ,அதில ஒன்றை கப் அளவுக்கு அவல் போடுங்க .
அந்த அவலை மா போல நன்றாக அரைத்து எடுத்திடுங்க .

அது போலவே மிக்சியில், வறுத்த வேர் கடலை எடுத்து, அதனையும் மா போல அரைத்து எடுத்திருங்க .

அவல் லட்டு செஞ்சு அசத்துங்க ஐந்து லட்டு ஒண்ணா சாப்பிடலாம்


அதன் பின்னர் ,இப்போ அடுப்பில பாத்திரம் வைத்து, அதில ஒரு கரண்டி நெய் விட்டிருங்க .

நெய் சூடானதும் ,பத்து முந்திரி பருப்பு போட்டு ,அதனை நன்றாக வறுத்து வாங்க ,அந்த முந்திரி பருப்பு கலர் மாறி வந்ததும் பிறிம்பாக எடுத்து வைத்திருங்க .

இப்போ அதே கடாயில் உள்ள நெய்யில் ,தேங்காய் துருவலை வறுத்து எடுத்திருங்க .இரண்டு நிமிடம் வறுத்த பின்னர் வாசம் வந்திடும் தேங்காய் துருவல் ,அதன் பின்னர் அதனை எடுத்து வைத்திருங்க .

பின்னர் அதே பாத்திரத்தில் முக்கால் கப் அளவிற்கு வெல்லம் போட்டு வறுத்து வாங்க .வெள்ளம் நன்றாக கரைந்ததும் அதை அதே பாத்திரத்தில் விட்டிருங்க .

அதன் பின்னர் வறுத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்திடுங்க .வெல்லத்துடன் தேங்காய் துருவலை நன்றாக கலக்கி வாங்க .

பொடி பண்ணி வைத்துள்ள அவலை இப்போ கலந்திருங்க .கலந்த பின்னர் நனறாக கலக்கி வாங்க .பின்னர் வறுத்து வைத்துள்ள வேர் கடலையை அப்டியே சேர்த்து கலக்கி வாங்க .

நன்றாக கலக்கி வந்த பின்னர் ,அரை கரண்டி ஏலாக்காய் தூள். முந்திரி பருப்பு அது கூட நெய் சேர்த்து கலக்கி விடுங்க .

இப்போ நன்றாக கலக்கிய பின்னர் ,அதே சூட்டில் லட்டு போல பிடித்திருங்க .
மெல்லிய சூட்டில் லட்டு பிடிக்க மிக இலகுவாக இருக்கும் .

இது தாங்க அவல் லட்டு. அப்புறம் என்ன செய்து அசத்துங்க .

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க

மிக சுவையான இலகுவான சூப்பரான அவல் லட்டு ரெடியாகிடிச்சு .மக்களே .

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil
Posted in சமையல் cook

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம்.நம்ம வீடே மண மணக்க இப்படி செஞ்சு அசத்துங்க மக்களே .

நம்ம தமிழர்களில் அதிகாமானவர்கள் பிரியாணி செய்யிறாங்க ,ஆனால் கடையில் விற்பனை செய்வது போல அவர்களினால் பெற்று கொள்ள இயலவில்லை .

அது ஏன் .? அது தாங்க நம்ம சமையல் காலை நிபுணர் ,இப்படி செய்து அசத்துறாங்க.
அவங்க செய்வதை போல நீங்களும் செய்து அசத்துங்க .

எந்த அரிசியிலும் பிரியாணி செய்வது எப்படி …?
வாங்க மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் .

பிரியாணிகளில் , மட்டன் பிரியாணி ,முட்டை பிரியாணி ,மரக்கறி பிரியாணி ,சிக்கன் பிரியாணி என்பன உள்ளன .

இதில் மட்டன் பிரியாணி, அதிக மக்கள் விரும்பி உண்கிறாங்க .
அவ்வாறான மட்டன் பிரியாணி, எந்த அரிசியிலும், எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம் வாங்க .

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

செய்முறை ஒன்று .

முதல்ல இந்த மட்டன் பிரியாணி செய்து கொள்ள ,குக்கர் சூடு படுத்தி கொள்ளுங்க .அதில எண்ணெய் ,நெய் சேர்த்திருங்க .

நெய் நன்றாக உருகியதன் பின்னர் .கரம் மசலா ,ஒரு பட்டை ,ஒரு நட்ச்சத்திர சோம்பு ,ஒரு பிரியாணி இலை ,இரண்டு கராம்பு ,அரை கரண்டி ஏலாக்காய் தூள் ,என்பன சேர்த்து கொள்ளுங்க .

30 செக்கனில் நன்றாக வதக்கிய பின்னர் .வெட்டி வைத்த இரண்டு வெங்காயத்தை போட்டு கொள்ளுங்க .

வெங்காயம் கலர் மாறி வரும் வரை ,நன்றாக வதக்கி வாங்க .தங்க கலருக்கு வெங்காயம் வந்த பின்னர் ,நாம ஒருகரண்டி இஞ்சி ,இரண்டு பச்சை மிளகாய்,சேர்த்து வதக்கிடுங்க .


அப்புறம் பொடியாக வெட்டிய கொத்த மல்லி,கூடவே புதினா இலை சேர்த்திடுங்க .இரண்டையும் நனறாக சேர்த்து வதக்கி வாங்க .

அப்புறம் பொடியாக வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க .கூடவே தேவையான உப்பு சேர்த்திடுங்க .


உப்பு சேர்த்து தக்காளி வதக்கும் பொழுது ,தக்காளி வேகமாக வதங்கிடும் .
இப்போ தக்காளி நனறாக வதங்கும் வரைக்கும் ,வதக்கி வாங்க .

தக்காளி நனறாக சாப்டா வதங்கிய பின்னர் மசாலா சேர்த்திடலாம் .ஒரு கரண்டி மிளகாய் தூள் ,கூடவே மல்லி தூள் ,ஒரு கரண்டி பிரியாணி மசாலா சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .


மஞ்சள் தூள் சேர்த்திடுங்க .
இந்த மசாலா பச்சை வாசம் போகும் வரைக்கும் வதக்கி வாங்க .

மசாலாவோட பச்சை வாசம் போன பின்னர், தயிர் சேர்த்திடுங்க .சேர்த்ததும் உடனே நனறாக சேர்த்து கடைந்து வதக்கிடுங்க .
கட்டை படாமா நன்றாக வதக்கிடுங்க .

தயிர் மட்டன் பிரியாணியில் சேர்ப்பதால் ,மட்டன் ரெம்ப சாப்டாக வந்திடும் .அது தான் மட்டன் பிரியாணியில் தாயிருக்குள்ள தனி மவுசு .

தயிர் சேர்த்து நனறாக மிக்ஸ் பண்ணிய பின்னர் ,இப்போ வெட்டி கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்திடுங்க .

அரை கிலோ மட்டன் ,இந்த பிரியாணிக்கு சேர்த்திருக்கு .மட்டன் கொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக சேர்த்திடுங்க .அப்போ தான் பிரியாணிக்கு நன்றாக இருக்கும் .

நம்ம சேர்த்துள்ள மசாலா எல்லாம் ,மட்டனுடன் நனறாக மிக்ஸ் ஆகணும் ,அதற்கு ஏற்றவாறு ,நன்றாக கலந்து வாதாக்கி வாங்க .

இப்போ இதில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்திடுங்க .
ஒரு கப் தண்ணீர் சேர்த்து மட்டனை நன்றாக வேக வைத்திடுங்க .
அடுப்பை மெல்லிய நெருப்பில விட்டு இறைச்சியை வேக வைத்து கொள்ளுங்க. .

சீராக சம்பா அரிசி நாம எடுத்துள்ளதால இரண்டு கப்பு தண்ணி சேர்த்து கொள்கிறோம் .நீங்க விரும்பின
அரிசி பயன் படுத்தி கொள்ளலாம் .

நாம் இப்போ ஒன்றரை கப் அளவு அரிசியை ,பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் ஊற்றுகிறோம்.
.இப்போ இந்த அரிசியை மூன்று தடவை நனறாக கழுவிருங்க .கழுவிய பின்னர் அரிசியை 20 நிமிடம் ஊற வைத்திடுங்க .

ஊற வைத்து அரசி போடுவதால் ,ரெம்ப சாப்டாக ,பிரியாணி இருக்கும் .
இப்போ வேகவைத்த மட்டன் ,மசாலாவுடன் இணைந்து நன்றாக வெந்து வந்திருக்கு .

இப்போ வெந்த மட்டனுக்குள் ,மீளவும் இரண்டு கப்பு
தண்ணீர் சேருங்க .சேர்த்திட்டு தேவையான அளவு உப்பு போடிருங்க .
அப்புறம் குழம்பை நன்றாக கலக்கி கொள்ளுங்க .

அப்புறம் தண்ணி கொதித்து வந்ததும் ,ஊற வைத்த அரிசியை கறிக்குள்ள போட்டிருங்க .


இப்போ நன்றாக கலந்து வந்தவுடன் .அரிசி மேல அவிந்து வந்தவுடன் ,கொத்த மல்லி ,நெய் சேர்த்திடுங்க .


இப்போ இதில் அரை எலுமிச்சம் சாறு சேர்த்து நன்றாக கலந்திருங்க .
இப்போ அரிசி மேல் எழுந்து ,வந்ததும் மெல்லிய நெருப்பில ,மூடிய போட்டு மூடி வைத்து .10 நிமிடம் வரை காத்திருங்க .

மட்டன் பிரியாணி ,அடிபிடிக்காது ரெம்பவே நன்றாக வந்திருக்கு .இது போலவே நீங்களும் எந்த அரிசியிலும் பிரியாணி செய்து சாப்பிடலாம் .

இப்போ நம்ம அசத்தலான மட்டன் பிரியாணி, செமையாக ரெடியாடிச்சு .
எல்லோரும் ஓடி வந்து எடுத்து சாப்பிடுங்க .

சாப்பிட பின்னர் மறக்காம ,காசை கொடுத்திருங்க . ஏன் என்றால் .நம்ம கடையில், சாப்பாட்டுக்கு மட்டும் காசு கொடுக்கணும் .தண்ணி மட்டும் இலவசம் நண்பர்களே .

10 நிமிடத்தில் உடனடி தக்காளி தோசை மொறுமொறுன்னு இப்படி டிபனுக்கு செஞ்சு அசத்துங்க| InstantTomatoDosai
Posted in சமையல் cook

10 நிமிடத்தில் உடனடி தக்காளி தோசை மொறுமொறுன்னு இப்படி டிபனுக்கு செஞ்சு அசத்துங்க| InstantTomatoDosai

10 நிமிடத்தில் உடனடி தக்காளி தோசை மொறுமொறுன்னு இப்படி டிபனுக்கு செஞ்சு அசத்துங்க| InstantTomatoDosai

10 நிமிடத்தில் உடனடி தக்காளி தோசை , வாய்க்கு சுவையாக மொறுமொறுன்னு ,இப்படி டிபனுக்கு செஞ்சு அசத்துங்க| மக்களே .

நீங்க வயிறு குளிர சாப்பிட்டு ,உடல் ஆரோக்கியமாக வாழ ,நாம தரும் இந்த சமையல் குறிப்புக்களை மறக்காம பார்த்து பயன் அடையுங்க மக்களே .

காரமுள்ள தக்காளி தோசை ,கேட்கவே வித்தியாசமா இருக்குதுல்ல .என்னடா தக்காளி தோசையா ..?

தக்காளி தோசை செய்வது எப்படி ..?

10 நிமிடத்தில் உடனடி தக்காளி தோசை மொறுமொறுன்னு இப்படி டிபனுக்கு செஞ்சு அசத்துங்க| InstantTomatoDosai

தக்காளி தோசை செய்வதற்கு ,தேவையான பொருட்கள் என்ன ..?
வாய்க்கு ருசியான ,மிக தரமான தக்காளி தோசையை, வாங்க நாம சாப்பிடலாம் .

தக்காளி தோசையில் உள்ள மருத்துவ குணம், என்ன தெரியுமா ..?வயிற்று வலி ,மலசிக்கலினால் தவிப்பவர்களுக்கு இது ரெம்ப உதவியாக இருக்கும் .

மலச்சிக்கலை தீர்த்து வைப்பதும் ,தசைகள் மிளிர இந்த தக்காளி உதவியாக தோசை அமையும் .

மருத்துவ குணம் நிறைந்த இந்த தக்காளி தோசை ,மறக்காம வாரத்தில் ஒரு நாளாவது சப்ப்பிட்டு ,உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுங்கள் .

நாள் தோறும் ஒவ்வொரு புது உணவை விதம் விதமாக சமையல் செய்து ,சாப்பிட்டு வந்தால் ,நூறு ஆண்டு உயிர் வாழமுடியும் என்கிறாங்க .

இப்படி ஒண்ணு சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -இட்லி தோசை சப்பாத்திக்கு SIDEDISH

இப்படி ஒண்ணு சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -இட்லி தோசை சப்பாத்திக்கு SIDEDISH

சரி வாங்க, இந்த தக்காளி தோசை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .