Tag: இலங்கை
இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்
இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்
இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்
எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடனடிப்படையிலான கப்பலே இது என எதிர் பார்க்க படுகிறது ,
இதுவே இறுதி இந்தியா உதவி கப்பல் என தெரிவிக்க படுகிறது .
இந்தியா உதவியில் பல கப்பல்களில் எண்ணெயை உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கப்பட்டு வந்தது ,
தமிழர்களை கொலை புரிந்த அரசுடன்இந்தியா மோடி அரசு கூடி குழவி வருகின்றமை குறிப்பிட தக்கது .
இந்திய மீனவர்கள் 2 977 விடுதலை
இந்திய மீனவர்கள் 2 977 விடுதலை
இலங்கை கடல் பரப்பிற்குல் அத்து மீறி நுழைந்து மீன்படியில் ஈடுபட்டனர் என இந்திய மீனவர்கள் 2 977 விடுதலை செய்ய பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்கள் சிறை பிடிப்பு தொடர் நிகழ்வுகள் அரசியாலாக்கி வரும் இலங்கை அரசுக்கு ,தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடியை அடுத்து விடுதலை செய்து வருகிறது
மேலும் தொடர் கைது இடம் பெற்றால் இலங்கைக்கு பெரும் ஆபத்தான ஒன்றாக மாதம் பெற்று விடும் என்ற நிலையில் இலங்கை தற்போது கைதுகளை தவிர்க்க வேண்டிய நிலைக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த விடுதலை தமிழகத்தில் மோடி கட்சி அதிகாரத்திற்கு ஏறிட இவை சாதமாக விளங்கும் என மோடி கமெடி அரசு எதிர் பார்க்கிறது.
ஆனால் இது தமிழகத்தில் சாத்தியமான ஒன்றாக மாற்றம் பெறுமா என்பது பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் .
மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் வதை
மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் வதை
நாம் தமிழர், இந்திய செய்திகள்
தமிழக மீனவர்கள் தமது கடல், எல்லைக்குள் நுழைந்தனர் என்ற குற்ற சாட்டில் மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் வதை புரிந்துள்ள சம்பவம் நாம் தமிழர் கட்சி வாயிலாக அம்பலமாகியுள்ளது .
திருமணம முடித்த இளம் வாலிபர் ஒருவரை நிர்வாணமாக்கி அடித்து எரித்து சுட்டு கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு சிங்கள இராணுவத்தால் மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் புரிந்த வதை தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை வன்மத்துடன் சிங்கள இராணுவம் நடத்தும் இந்த கொடுமைகளுக்கு மோடி அரசும்
உடைந்தை என நாம் தமிழர் கட்சி இடித்துரைத்துள்ளது.
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
கருகலைக்க வந்த பெண்ணை கற்பழித்து கொன்ற வைத்தியர்
கருகலைக்க வந்த பெண்ணை கற்பழித்து கொன்ற வைத்தியர்
இலங்கை வைத்தியாசலை ஒன்றில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர் திருமணமாகாத கருகலைக்க வந்த பெண்ணை கற்பழித்து கொன்ற நீதிமன்ற வழக்கில் வைத்தியர் குற்றவாளி என கருத்தை பட்டு 15 வருட சிறை தணடனை வழங்க பட்டுள்ளது
கருகலைக்க வந்த பெண்ணை கற்பழித்து யன்னல் வழியாக கொன்று வைத்தியர் வீசினார் குற்ற சாட்டுக்கள் பிரதானமாக வைக்க பட்டுள்ளது
இவ்வாறு படுகொலை செய்ய பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்க பட்டுள்ளது
நீண்டகாலமாக இடம்பெற்று வந்த கருகலைக்க வந்த பெண்ணை கற்பழித்து கொன்ற வைத்தியர்
கொலை விசாரணை தற்போதுஇ முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிட தக்கது .
எரிபொருள் வாங்க காத்திருந்தவர் மரணம்
எரிபொருள் வாங்க காத்திருந்தவர் மரணம்
இலங்கை செய்திகள்
இலங்கை பாணந்துறை பகுதியில் எரிபொருள் வாங்க காத்திருந்தவர் மரணம் ,இவரது மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தெரியவரவில்லை
ஆட்டோ சாரதியாக விளங்கும் இவர் பாணந்துறை எரிபொருள் நிலையம் அருகே நிரையில் காத்திருந்த வேளையே இந்த மரணம் இடம்பெற்றுள்ளது
இலங்கையில் எரிபொருள் வாங்கிட நீண்ட நேரம் காத்திருந்த பலர் இவ்விதம்
திடிரென அவ்விடத்தில் மாரணமாகியுள்ள சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக யூரியா
விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக யூரியா
குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும்போகத்திற்காக 365,000 மூட்டைகள் இலவசமாக யூரியா வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இணங்கியுள்ளது.
விவசாய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தேவையான இலவசமாக யூரியா உதவிகளை வழங்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் பல விசேட திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம்
தெரிவித்துள்ளதாக விவசாய மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (WFO) இலங்கை முகவர்களுடனான
கலந்துரையாடலின்போது 2022/23 பெரும்போக நெல் விளைச்சலுக்காக இலவசமாக யூரியா குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு 365,000 யூரியா உறைகளை இலவசமாக
வழங்க இணங்கியுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஒரு உறை வீதம் நாடளாவிய ரீதியில்
உள்ள குறைந்த வருமானம் பெறும் 365,000 விவசாய குடும்பங்களுக்கு இலவசமாக யூரியா விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த மாதம் பருவத்திற்குள் 14,000 குறைந்த வருமானம் பெறும் பெண் குடும்பங்களுக்கு விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக யூரியா தலா ரூ.18,000 வீதம்
பயறு பயிர்ச்செய்கைக்கு நிதியுதவி வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஒப்புக்கொண்டுள்ளது.
உணவு நெருக்கடியை அடுத்து, நாட்டு மக்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கான முயற்சிகளில் ஒன்றாக பயறு பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க இலவசமாக யூரியா வழங்க வேண்டும் என்று இவ் அமைப்பு (WFO) இலங்கை தொடர்பான தனது
அறிக்கையில் கூறியுள்ளது. இந்த உதவித்தொகை நிறுவனத்திற்கு திருப்பிச் செலுத்தப்பட மாட்டாது, மேலும் பெண்களை தலைமையாகக் கொண்ட குறைந்த
வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் இத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதேவேளை, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திரிபோஷ உற்பத்தியை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான பயறு, சோளம், சோயா போன்ற பயிர்ச் செய்கைகளை எதிர்வரும் பருவத்தில் நாட்டிலே
பயிரிடுவதற்கு முன்னுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசின் இலவச யூரியா அறிவிப்பு இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இதன் மூலம் வீழ்ந்து போன பொருளாதாரம் மீள கட்டி எழுப்ப முடியுமா என்பதே கேள்வியாகவும் .
பீரிஸ் மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு விளக்கம்
பீரிஸ் மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு விளக்கம்
மனித உரிமைகள் பேரவையின் 50வது கூட்டத் தொடரின் பக்க அம்சமாக, மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மற்றும் அணிசேரா இயக்கத்தின் (ஜெனீவா
அத்தியாயம்) ஒருங்கிணைப்பாளரை சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், 2022 ஜூன் 14ஆந் திகதி ஜெனீவாவில் பிரேசிலுடன் இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்டார்.
மனித உரிமைகள் பேரவையின் தலைவரும் அர்ஜென்டினாவின் நிரந்தரப் பிரதிநிதியுமான திரு. ஃபெடரிகோ வில்லேகாஸ் உடனான சந்திப்பின் போது,
இலங்கையின் தற்போதைய சமூகப் பொருளாதார நிலைமை மற்றும் சர்வதேச சமூகத்தின் பச்சாதாபம் மற்றும் புரிதலின் அவசியம் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விளக்கினார். நாடு ஏராளமாகப் பெற்று வரும் மகத்தான பிரதிபலிப்பு
மற்றும் உதவிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். தற்போதைய சமூகப் பொருளாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கான அவசியத்தை வலியுறுத்திய அதே வேளையில்,
கடமைகளை சமாளித்து முன்னேறுவதற்கான அரசியல் விருப்பத்தையும் உறுதியையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த வகையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டம், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21வது திருத்தம், சுயாதீன
பீரிஸ் மனித உரிமைகள் விளக்கம்
ஆணைக்குழுக்களை வலுப்படுத்துதல், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் சிவில் சமூகத்துடன் ஈடுபாடு உட்பட அளவிடக்கூடிய மற்றும்
சரிபார்க்கக்கூடிய முன்னேற்றத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எடுத்துரைத்தார். நிலையான அபிவிருத்தி இலக்குகளில் இலங்கையின் கணிசமான
முன்னேற்றம் குறித்தும் அவர் விளக்கிய அவர், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி அறிக்கை 2021 இலங்கையை 87வது இடத்திலும், ஒட்டுமொத்த
தரவரிசையில் 68.1 நிலையிலும் வைத்துள்ளமை, பிராந்திய சராசரியை விட அதிகமாவதுடன், 165 நாடுகளில் 7 நிலைகளால் அதிகரித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் கீழ் இலங்கை
விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் கீழ் இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட சேர்
ஜெஃப்ரி நைஸ் கியூ.சி, சேர் டெஸ்மண்ட் டி சில்வா கியூ.சி, ரொட்னி டிக்சன் கியூ.சி மற்றும் பேராசிரியர் டேவிட் எம் கிரேன் உள்ளிட்ட சர்வதேச சட்ட வல்லுநர்களின்
கருத்துக்கள் அடங்கிய ஆவணத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் கையளித்தார்.
அணிசேரா இயக்கத்தின் (ஜெனீவா அத்தியாயம்) ஒருங்கிணைப்பாளருடனான சந்திப்பின் போது, அணிசேரா இயக்கத்துடனான இலங்கையின் நீண்டகால மற்றும் வலுவான உறவுகளை குறிப்பிட்ட அசர்பைஜானின் நிரந்தரப் பிரதிநிதி திரு. கலிப்
இஸ்ரபிலோவ், தற்போது அணிசேரா இயக்கத்தின் பொருத்தத்தை வலியுறுத்தினார். சமகால சவால்களை எதிர்கொள்வதற்காக வேறு எந்த நேரத்தையும் விட இன்று ஒற்றுமை மற்றும் அணிசேரா ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர்
வலியுறுத்தினார். அணிசேரா இயக்கத்திற்கு அதிகமான புத்துயிர் அளிக்குமாறு கோரிய அவர், அணிசேரா இயக்கத்தின் முன்முயற்சிகளுக்கு இலங்கையின் தொடர்ச்சியான மற்றும் செயலூக்கமான ஆதரவை உறுதியளித்தார்.
அணிசேரா இயக்கத்தின் பீரிஸ் மனித உரிமைகள் பேரவை
அணிசேரா இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் (ஜெனீவா அத்தியாயம்) தூதுவர் இஸ்ரஃபிலோவ், தடுப்பூசிகளுக்கான சமமான அணுகல், தொற்றுநோய்களின் போது நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள், தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்பு
பீரிஸ் மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு விளக்கம்
முயற்சிகள், பாதுகாப்புத் துறையிலான நடவடிக்கைகள், நாடாளுமன்றங்களுக்கு இடையேயான நாடாளுமன்ற உரையாடல் மற்றும் அபிவிருத்திக்கான உரிமை உட்பட மனித உரிமைகள் கவுன்சிலில் உரையாடலை வளர்த்தல் உள்ளிட்ட சமகால
சவால்களை எதிர்கொள்வதற்கான கடந்த சில ஆண்டுகளாக அணிசேரா இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்து விளக்கினார். எதிர்கால முன்முயற்சிகளை சுட்டிக் காட்டிய
அவர், அசர்பைஜானின் அர்ப்பணிப்பு மற்றும் உறுப்பு நாடுகளின் தீவிர ஆதரவுடன் அணிசேரா இயக்கத்தின் சுயவிவரத்தை உயர்த்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை மீண்டும் வலியுறுத்தினார்.
பிரேசிலின் நிரந்தரப் பிரதிநிதி திரு. டோவர் டா சில்வா நூன்ஸ் உடனான சந்திப்பின் போது, இலத்தீன் அமெரிக்காவில் உள்ள நாடுகளுடன் மிகவும் தீவிரமாக
ஈடுபடுவதற்கான இலங்கையின் ஆர்வத்தை வலியுறுத்திய வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள்
குறித்து விரிவாக விளக்கினார். தூதுவர் டா சில்வா நூன்ஸ் இந்த விடயங்களில் தீவிர அக்கறை காட்டியதுடன், இது தொடர்பாக தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளின் வளமான
மற்றும் மாறுபட்ட அனுபவத்தை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் அமைச்சருடன் பகிர்ந்து கொண்டார்.
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்-பிரதமர் அறிவுறுத்தல்
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்-பிரதமர் அறிவுறுத்தல்
இவ்வருடத்தின் எஞ்சியுள்ள காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெறக்கூடியதாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சுற்றுலாத் துறைசார் முக்கியஸ்தர்களுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடத்திய கலந்துரையாடலின் போதே அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துறையாடல் நேற்று இடம்பெற்றது.இதன் போது பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
எதிர்வரும் 6 மாதங்களில் ஆகக்கூடுதலான இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்-பிரதமர் அறிவுறுத்தல்
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுப்பதற்கான திட்டங்களை அமுல்படுத்துவது அவசியமாகும். இந்தக் காலப்பகுதியில் கலாசார நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதன்
மூலம் உயர்ந்த பயன்களை அடைந்து கொள்ள முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி இராஜதந்திர அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
எதிர்வரும் காலப்பகுதியில் 8 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதன் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை
ஈட்டுவதற்கான வாய்ப்புக் கிடைக்குமென்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் இதன் போது தெரிவித்தார்கள்.
தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழு தலைவர் தினேஷின் அறிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு
தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழு தலைவர் தினேஷின் அறிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு
- தமுகூ தலைவர் மனோ கணேசன்
பாராளுமன்ற தேர்தல்முறையை விகிதாரசார முறையில் இருந்து கலப்பு முறைக்கு மாற்றும் சிபாரிசை முன்வைக்கும் தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தணவின் ஒருதலைபட்ச இறுதி அறிக்கைக்கு,
தெரிவுக்குழுவின் பெரும்பாலான அங்கத்தவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம். தெரிவுக்குழுவில் ஏற்படாத உடன்பாடுகளையும், உண்மைக்கு புறம்பான
தகவல்களையும் உள்ளடக்கி இந்த இறுதி அறிக்கையை தெரிவுக்குழு தலைவர் சமர்பித்துள்ளார். இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமானால் அங்கும் அதை நாம் எதிர்ப்போம்.
இந்த போலி அறிக்கையை ஏற்க முடியாது என தெரிவுக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின்
பிரதிநிதிகள் அறிவித்தனர். கலப்பு முறையை ஆதரிக்க முடியாது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் (ஈபிடீபி) தமக்கு தெரிவித்துள்ளதாக குழு உறுப்பினர் ரவுப் ஹக்கீம்
தெரிவுக்குழுவில் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசும் கலப்பு முறைக்கு இணங்காது என நான் நம்புகிறேன். இந்நிலையில் மிக பெரும்பாலான கட்சிகளின்
நிலைபபாடுகளுக்கு விரோதமாக இந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழு தலைவர் தினேஷின் அறிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு
தேர்தல் முறை சீர்திருத்தங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தண நேற்று
தனது இறுதி அறிக்கையை குழுவில் சமர்பித்தார். இதையடுத்து பெரும்பாலான தெரிவுக்குழு உறுப்பினர்கள் இந்த இறுதி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தனர். இதுபற்றி மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,
இந்த குழுவில் இடம் பெறாத அதேவேளை இடம் பெற்றும் நேற்றைய கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத கட்சி பிரதிநிதிகளின் ஆதரவையும் திரட்டி சுருக்கமான மாற்று
நிலைப்பாட்டை எழுத்து மூலமாக தெரிவுக்குழுவுக்கும், பாராளுமன்றத்துக்கும் அறிவிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாற்று நிலைப்பாட்டு அறிக்கையை நண்பர்
சுமந்திரன் எம்பி தயாரிப்பார். அதை அடிப்படையாக கொண்டு ஏனைய கட்சிகளின்
ஆதரவையும் பெற்று, தெரிவுக்குழுவுக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் முறைமை தொடர்பான எமது நிலைப்பாடுகளை நாம் தெரிவிப்போம்.
வத்தளையில் ஒருவர் சுட்டு கொலை
வத்தளையில் ஒருவர் சுட்டு கொலை
இலங்கை வத்தளை பகுதியில் நபர் ஒருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த ஆயுத தாரி குறிவைக்க பட்ட நபர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்
பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்
இலங்கையில் தற்போது அதிக துப்பாக்கி சூட்டு கொலை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது
இந்தத்துப்பாக்கி சூட்டு கொலைக்கான காரணம் தெரியவரவில்லை
கொலை செய்ய பட்ட நபர் சடலம் மீட்க பட்டு ராகம வைத்தியசாலையில் மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
ஆயுத தாரியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஏலம் பறிக்க காட்டுக்கு சென்ற பெண் மாயம்
ஏலம் பறிக்க காட்டுக்கு சென்ற பெண் மாயம்
இலங்கை- ஏலம் பறிக்க காட்டுக்கு சென்ற பெண் மாயம் தேடி அலையும் போலீஸ் இராணுவம் ,இதுவரை அவரை மீட்க முடியவில்லை.
கணவன் மகனுடன் காட்டுக்கு ஏலம் பறிக்க சென்ற பொழுது பெண் காணாமல் போயுள்ளார் .பெண்ணை தேடிய கணவன் மகன் அவரை காணாது வீடு திரும்பியுள்ளனர்.
வீடு வந்த இவர்கள்; காவல்துறையில் முறைப்பாடு வழங்கிய நிலையில் போலீசார் இராணுவம் தேடி வருகின்றனர் .எனினும் இதுவரை அவர் சிக்கவில்லை.
இந்த பெண் காட்டுக்குசென்று காணாமல் போயுள்ள விடய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெண்ணுக்கு காட்டுக்குள் நடந்தது என்ன என்பது தொடர்பில் இதுவரை ஏதும் தெரியவில்லை.
பெண்ணை கடத்திய நபர்கள் கைது
பெண்ணை கடத்திய நபர்கள் கைது
இலங்கை வவுனியா பூவரசம் குளம் பகுதியில் பெண்ணை கடத்திய நபர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கப்பம் பெறும் நோக்கில் பெண்ணை கடத்திய கடத்தல்காரர்கள் ,அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தமக்கு பணம் செலுத்தும் படி வேண்டுதல் விடுத்துள்ளனர்
அதனை ஏற்று கொடுப்பது போல நடித்து அவரது மகளை தாயாரை கடத்திய நபர்களுக்கு பணம் வழங்குவது போல போலீசார் அனுப்பி பெண்ணைக்கு கடத்திய அந்த கடத்தல் காரர்களை கைது செய்துள்ளனர்
இந்த பெண்ணை கடத்தியமைக்குரிய காரணம் காப்பாமே என தெரிவிக்க படுகிறது .
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளனர்
இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது ரணில்
இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது ரணில்
இலங்கையில் ஏற்பட்டு தற்கால நெருக்கடி நிலையில் இலங்கைக்கு உதவிகளை இந்தியாவே செய்துள்ளதாக இலங்கை பிரதம ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்
சீனாவே முன் உதவிகளை அள்ளி வழங்குவது ஆனால் தற்போது அதனை விட அதிம் உதவியது இந்தியாவே வழங்கியுள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பெருமிதம் கொண்டுள்ளார்
இலங்கைக்கு இந்தியாவே அதிகம் உதவியது என்ற இலங்கை பிரதமர் ரணில் குளிர்விக்கும் வைக்கும் பேச்சு மேலும் உதவிகளை பெறும் தந்திர திட்டமாகும் என கருத படுகிறது
சிறுமி சடலமாக மீட்பு -பதற வைத்த மரணம்
சிறுமி சடலமாக மீட்பு -பதற வைத்த மரணம்
இலங்கை கந்தப்பளை பகுதிக்குயில் உள்ள தோட்ட குடியிருப்பில் சிறுமி
சடலமாக மீட்பு பதற வைத்த மரணம்
வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த சேலைக்குள் கழுத்து இறுகிய நிலையில் சிறுமி சடலமாக மீட்க பட்டுள்ளார் ,தாயார் மலசல கூடத்திற்கு சென்றவேளை இந்த மரணம் நிகழ்ந்துள்ளது
கழுத்தில் இருந்து படி அகற்ற பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முன்பு சிறுமி இறந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் சடலத்துடன் உறவினர்கள் வீடு திரும்பினார்
தயார் அசமந்த போக்கே இந்த சிறுமி மரணத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி
இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக நல்தோறும் கணக்கிற்கு மேற்பட்டவை பதிவாவதாக போலீசாரை டெஹ்ரிய்வத்துள்ளனர்
மக்காளுக்கு ஆசை வார்த்தை காண்பித்து முதல் பணத்தை வாங்கி கொள்ளும் நபர்கள் அதன் பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற் விடுவதாக குறித்த மோசடி புகாரில் தெறிவிக்க பட்டுள்ளது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற மோகத்தில் மூழ்கிய இலங்கையர்கள் பலர்
வெளிநாடுகள் நிர்கதியாக உள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையில் வேகமாக பரவும் இன்புளுவன்சா நோய்
இலங்கையில் வேகமாக பரவும் இன்புளுவன்சா நோய்
இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதனை நமீதா பகுதியில் வேகமாக பரவும் இன்புளுவன்சா நோய் .இந்த நோயின் அறிகுறி காய்ச்சல், உடல்வலி, இருமல் மற்றும் சளி போன்றவை காணப்படும்
இவ்வாறு காய்ச்சல், உடல்வலி, இருமல் மற்றும் சளி போன்றவை காணப்பட்டால் உடனே இந்த நோய் தொற்று உங்களுக்கு உள்ளது எனவும் உடனே மருத்துவரை நாடவேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
இலங்கையில் வேகமாக பரவும் இன்புளுவன்சா நோய் கட்டு படுத்த அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது
இன்புளுவன்சா நோய் பரவளில் இருந்து இலங்கையில் மக்கள் தப்பிக்க இதனை செய்யுமாறு வேண்ட பட்டுள்ள
பொருளாதார நெருக்கடிக்கு நடுவே தொடரும் பண்பாட்டு இனஅழிப்பு
பொருளாதார நெருக்கடிக்கு நடுவே தொடரும் பண்பாட்டு இனஅழிப்பு
சிறிலங்கா அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், தனது பௌத்த மேலாதிக்க சிந்தனையின் வடிவமாக, தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை தொடர்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்களின் பூர்வீக பண்பாட்டு வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், அத்துமீறி நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலச பூசை தமிழ் மக்களால் நேற்று (12-06-2022) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியில் விவகாரங்களுக்கான அமைச்சு,

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு சிக்குண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், அதிலிருந்து மீளுவதற்கு பல மாற்றங்களை முன்னெடுத்து வந்தாலும், மாறாத ஓன்றாக தமிழர் தேசத்தின் மீதான அதன் ஆக்கிரமிப்பும், அபகரிப்பும் உள்ளது.
தொல்பொருள் செயலணி, வனஜீவராசிகள் இலக்கா என தனது திணைக்களங்கள் ஊடாக தமிழர் தேசத்தின் மீதான பண்பாட்டு இனஅழிப்பினை முன்னெடுத்து வரும்
சிறிலங்கா அரசாங்கம், இதற்கு துணையாக தனது இனவழிப்பு இராணுவத்தினை கையாளுகின்றது.
மக்கள்திரள் போராட்டங்கள் மூலமே தமிழர் தேசத்தின் மீது தொடரும் இந்த
பண்பாட்டு இனவழிப்பினை எதிர்கொள்ள முடியும் என்பதோடு,
ஆக்கிரமிப்பு இராணுவத்தினை வெளியேற்றச் கூறி மக்கள் போராட்டங்களை கூர்மைப்படுத்த
வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவாகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
அனுராதபுரத்தில் இராணுவம் குவிப்பு – பாதுகாப்பு இறுக்கம்
அனுராதபுரத்தில் இராணுவம் குவிப்பு – பாதுகாப்பு இறுக்கம்
சிங்களவர்களின் போயா தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு இறுக்கம் பெற்றுள்ளது
பொது இடங்கள் ரயில்வே நிலையம் ,பேரூந்து நிலையம் ,மக்கள் கூடும் இடங்கள் ,மற்றும் மத தளங்களை சுற்றி இந்த பாதுகாப்பபு இறுக்கம் பெற்றுள்ளது
ஆளும் அரசு மீது அனுராதபுரத்தில் உள்ள சிங்கள மக்கள் பவுத்த மத தளங்கள் மீது தாக்குதல் நடத்த கூடும் என்பதால் இந்த இராணுவம் குவிக்க பட்டுள்ளது
அனுராதபுரத்தில் இராணுவம் குவிக்க பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது ,
இந்த இராணுவம் எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என பாதுகாப்பபு அமைச்சு தெரிவித்துள்ளது.
தந்தையை அடித்து கொன்ற மகன்
தந்தையை அடித்து கொன்ற மகன்
இலங்கை குருவிட்ட காவல்துறை பகுதியில் தந்தையை அடித்து கொன்ற மகன் கொலைச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
தனது மனைவியை போதையில் வந்த தாக்கிய பொழுது அந்த தாக்குதலை தடுத்த அறுபத்தி ஆறு வயதுடைய தந்தையை கட்டையால் அடித்து மகன் கொலை செய்துள்ளார்
இரத்த வெள்ளத்தில் மிதந்த தந்தை சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
பெற்று வளர்த்த தந்தையை இவ்விதம் மகன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
போதைக்கு அடிமையாகி பல குடும்பங்கள் இவ்விதம் சீரழிந்து போகும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
முப்பத்தி நான்கு வயதுடைய மகன் தந்தையை அடித்து கொன்ற சம்பவத்தை அடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுளளார்
தந்தை மரணம் மகன் சிறையில் ,போதை செய்த அலங்கோலம் .
அரிசி பதுக்கி வைத்தவர்களை தேடி அதிகாரிகள் வேட்டை
அரிசி பதுக்கி வைத்தவர்களை தேடி அதிகாரிகள் வேட்டை
இலங்கை அம்பாறை பகுதியில் அரசி பதுக்கி வைத்தவர்களை தேடி நுகர்வோர் அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
மக்கள் அரிசி இன்றி தவித்து வரு நிலையில் அதிக விலைக்கு விற்கும் நோக்கில் வர்த்தகர்கள் மற்றும் நெல்லு ஆலைகள் வைத்து நடத்துபவர்கள் இந்த பதுக்களில் ஈடுபட்டுள்ளனர்
மக்களுக்கு அரிசி பெற்று கொடுக்கும் வகையில் அதிகாரிகள் வந்த தேடி பிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
அரிசி பதுக்கி வைத்தவர்களை தேடி அதிகாரிகள் வருவதை அறிந்த வர்த்தகர்கள்
மற்றும் நெல் ஆலைகள் வேட்டையில் இருந்து தப்பிக்க மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்












