Tag: அரசு
இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்
இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்
இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம் ,2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தை தயார்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்
யுத்தத்தின் பின்னரான தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த நாட்டுக்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
“போருக்குப் பின்னர், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை ஆராய்ந்து எமது நாட்டுக்கு ஏற்ற இராணுவத்தை தயார்படுத்துவது ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு சபையின் நம்பிக்கையாகும்.
அதன்படி, பாதுகாப்பு ஆய்வு 2030 என்ற திட்டத்தின் கீழ் தனி நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எங்களிடம் 208,000 வீரர்கள் உள்ளனர்.
அதனை ஒரு லட்சம் வரை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
நாங்கள் யாரையும் நீக்குவதற்கு எதிர்பார்க்க பார்க்கவில்லை.
ராணுவத்தினரின் எண்ணிக்கை
எண்ணிக்கையில், ராணுவத்தில் ஏற்படும் இயற்கையான குறைவைக் கணக்கிட்டு, 2030க்குள், ராணுவத்தினரின் எண்ணிக்கையை 100,000 அளவில் வைத்திருப்பதே எங்கள் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.
மேலும், கடற்படை மற்றும் விமானப்படை பலப்படுத்தப்பட வேண்டும்.
புவியியல் ரீதியாக, நாம் மிகவும் சிக்கலான முக்கியமான இடத்தில் இருக்கிறோம்.
எனவே, கடற்படையை பலப்படுத்துவதையும் ஒரு திட்டமாக செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.
Featured
எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு ,இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத்
திருத்தத்துடன் இணைந்து, சினோபெக் எனர்ஜி லங்கா இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது விலை திருத்தத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய சில்லறை விலை ரூ. 365 ஆகும். 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய சில்லறை விலை ரூ. 420 ஆகவுள்ளது.
ஒரு லிட்டர் ஒட்டோ டீசல் ரூ. 27 இனால் குறைக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய விலை ரூ. 333 ஆகும். இதேவேளை, சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய சில்லறை விலை ரூ. 377 ஆகவுள்ளது.
தேர்தல் நிகழ்த்த படவுள்ளதை அடுத்து தற்போது ,ஆளும் அரசு பொருட்களின் விலைகள் முதல் யாவும் குறைப்பு செய்து வருகிறது குறிப்பிட தக்கது .
Featured
வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு
வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு
இலங்கையில் உள்ள வங்கிகள் நிதி சீராக உள்ளது ,அவற்ற்றுக்கு பாதிப்பு ஏற்பாடாது எனவும் ,வங்கிகள் நாட்டை விட்டு ஓடாது என,ஆளும் அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் முழங்கியுளளார் .
இவரது இந்த உத்தரவாத கருத்தின் மூலம் ,இலங்கையில் வாங்கி ஒன்று மிக மோசமான நிதி நெருக்கடிக்கு ,உள்ளாகி போவதாக மறைபொருளில் கூறியுள்ளார் .
வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு
மக்கள் வங்கிகளில் இருந்து பணத்தை மீள பெற்று வருவதால் ,வங்கிகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன .
வட்டி வீதங்கள் அதிகமாக வழங்க படுகின்ற பொழுதும் ,மக்கள் அச்ச நிலை காரணமாக பணத்தினை மீள பெற்று வருகின்றமை ,நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது .
ஆசிரியர்கள் ஒருமாத சம்பளத்தை இலவசமாக கோரும் – கோட்டபாய அரசு அடாவடி
ஆசிரியர்கள் ஒருமாத சம்பளத்தை இலவசமாக கோரும் – கோட்டபாய அரசு அடாவடி
இலங்கையில் கொரனோ நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் பாடசாலைகளை அடித்து பூட்ட பட்டுள்ளன .
இந்த நிலையில் ஆசிரியர்களின் ஒருமாத சம்பளத்தை இலவசமாக அரசுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என கோட்டாபய அரசு வேண்டுதல் விடுத்துள்ளது .
இந்த கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது ,இதே போலவே சுகாதர அமைச்சேரும் மருத்துவர்கள் ,தாதிமார்கள் பணத்தை கேட்டுளளார் ,
ஆனால் அது தவிர்க்க பட்ட நிலையில் ,அவர்களது மேலதிக வேலையினை செய்யாது தடுக்க பட்டு ,அந்த பணத்தை வெட்டி அரசுக்கு கொடுக்கும் நிலையில் ஈடுபட்டுள்ளனர் ,
இதே போலவே இராணுவத்தினரிடத்திலும் ஒருவர் ,ஐந்து ஆயிரம் ரூபாய்களை அரசுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என சவேந்திர
சில்வா கோரிக்கை விடுத்தது அவ்வாறு பெற்றுள்ளதும் குறிப்பிட தக்கது
சிவப்பு சால்வைகள் ஆட்சியில் தொடர்ந்து அடாவடியும் ,அடக்குமுறையும் நீடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை
நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை
பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும்
உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தனதெரிவித்துள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நிதி வசதியை வழங்குவதற்கும், மூடப்பட்ட நெல் ஆலைகளை மீள
திறப்பதற்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 20ஆம் திகதியிலிருந்து பெரும்போகத்திற்குத் தேவையான உரத்தை
கொள்வனவு செய்வதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட மேலதிக 16 வகைக்கான உற்பத்திகளை ஊக்குவித்தல். மக்கள் வங்கியினால் அஸ்வென்ன
என்ற (அறுவடை) பெயரில் 30 இலட்சம் ரூபா வரையில் விசேட கடன் முறையொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் 200 விசேட கொத்து
உர விவசாய கிராமங்களை ஏற்படுத்வும் திட்டமிடப்பட்டுள்ளது 50 பசுமை பூங்கா மற்றும் அறுவடைகளை விற்பனை செய்யும் 200
விற்பனை நிலையங்களை ஏற்படுத்துதல். இம்முறை ஐந்து லட்சத்து 23 ஆயிரம் ஹெக்டெயர் விளைச்சலுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம்
விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு 50 ஆயிரம் கடனுதவி -No credit checks- யாரும் பெறலாம்
பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு 50 ஆயிரம் கடனுதவி -No credit checks- யாரும் பெறலாம்
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து
தற்பொழுது வியாபார நிலையங்கள் மூட பட்டுள்ளன ,இதனால் சிறு வர்த்தகர்கள் பெருமளவில் பாதிக்க பட்டுள்ளனர் .
இவர்கள் தமக்கு நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது என கடைகளை அடித்து பூட்டினால் பெரும் விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் ,அதனால்
,அவ்வாறு இடம்பெறாது தடுக்கும் நோக்குடன் இவ்வாறானவர்களை காப்பாற்றும் நோக்குடன் அரசு 330 பில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது .
அதில் இவ்வாறான வர்த்தகர்களுக்கு ஐம்பதாயிரம் முதல் கடனுதவி பெற்று கொள்ள முடியும் ,வட்டி இல்லாதா கடனாக ,அல்லது
ஒருவருடத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய மாதாந்த கட்டு பணத்தை
அதன் பின்னரான ஆண்டில் இருந்து செலுத்தி கொள்ள முடியும் என்ற நிலையில் அரசு இந்த உதவியினை புரிகிறது
அதற்காகவே ,No credit checks will be needed, and no interest or repayments will be due for 12 months,என அறிவித்துள்ளது ,,அப்புறம்
என்ன நம்ம தமிழர் கடைகள் குஷியில் உறையும் ,இந்த விடையத்தை கண்டிப்பாக அமூல் படுத்துமாறுந் வங்கிகளுக்கும்
,நிதி நிறுவனங்களுக்கும் அரசு அதிரடி உத்தரவினை வழங்கியுள்ளது என நிதி அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார்

















