Tag: அதிவேகத்தில்
அதிவேகத்தில் படுத்தது ஐஸ் லொறி
அதிவேகத்தில் படுத்தது ஐஸ் லொறி
ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் சிறியரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் கணவனும் மனைவியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய இரண்டரை வயது குழந்தை எவ்விதமான காயங்களும் இன்றி தெய்வாதீனமாக தப்பியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்னையில் இருந்து சுமார் 53 கிலோ மீற்றர் தூரத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக குருதுகஹ ஹடேகம அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
அதிவேகத்தில் படுத்தது ஐஸ் லொறி
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் ஐஸ்கிரீம் விற்பனை செய்துவிட்டு கடவத்தை நுழைவாயிலில் இருந்து அம்பலாந்தோட்டைக்கு சென்ற சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலகத்தால் விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
லொறி வீதியின் இடது பக்கமாக இழுத்துச் சென்று பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் முன் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த சாரதியின் மனைவி மற்றும் சிறு குழந்தை ஆகியோர்
வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். அதன் பின்னர் லொறி கவிழ்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
- மரம் விழுந்து விபத்தில் பள்ளி மாணவன் இரு பெண்கள் பலி
- எரிபொருள் விலை நெருக்கடி
- விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் டிக்டாக் காணொளிகள் தொடர்பாக இளைஞர் கைது
- புனரமைப்புப் பணிகளுக்காக நவம்மஹாரா ரயில்வே கிராசிங் மூடப்படுகிறது
- ஐந்து வயது சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு
- இலங்கையைப் புனரமைக்கும் நிதி முடங்கிக் கிடக்கிறது
- சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவு பெற்ற கொள்கைகளால் விவசாயத் துறை சரிவைச் சந்திக்கும் அபாயம்: விவசாயிகள் சங்கம்
- எல்லாவில் 98 ஏக்கர்ஸ் ரிசார்ட் 5.1 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு
- 25 மில்லியன் அமெரிக்க டாலர் திறைசேரி மோசடி விசாரணை
- கட்டாய உழைப்பு வரி விதிப்பு

















